Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Showing posts with label பாகிஸ்தான். Show all posts

Sunday, May 08, 2011

இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகளை குவிக்கிறது-அமெரிக்கவை திசை திருப்பும் முயற்சியா!

பாகிஸ்தானில் உஸாமா பின்லேடன் இல்லை என்று அந்நாடு தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் பாகிஸ்தானில் வைத்தே பின்லேடன் கொலை செய்யப்பட்டிருப்பதால், உலக நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானின் உண்மைக்கு மாற்றமான செய்திக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

இவ்வேளயில், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. அதனால்தான் அங்கு பின்லேடன் பதுங்கி இருந்துள்ளார். இது போன்றே இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது” என்று கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது பற்றி பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி கூறும் போது, பின்லேடன் பிரச்சினையின் மூலம் இந்தியா ஆதாயம் தேட முயல்கிறது. இவ்வாறு இந்தியா செயல்பட்டால் நாங்கள் கடுமையான் எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிவரும் என்று எச்சரித்துள்ளார். இதே தொணியில் பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தியாவுக்கு எதிராக கருத்து வெளியிட்டு வருகின்றன்.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென தனது படைகளை கொண்டு வந்து இந்திய எல்லையில் குவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயுள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் 740 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிக அளவில் பாகிஸ்தான் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன். இதுபோல பனி படர்ந்த பகுதியாக உள்ள சியாச்சின் பகுதியில் 110 கிலோமீட்டர் தூரத்திற்கும் படைகளை பாகிஸ்தான் குவித்துள்ளது. இதனை இந்திய ராணுவ அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். எனவே எல்லைப் பகுதியில் கடும் பதட்டம் நிலவுகிறது. பாகிஸ்தான் அத்துமீறும் போது அதற்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய படைகளும் தயாராகி வருகின்றன.

உஸாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வந்ததை அமெரிக்கா உறுதி செய்துள்ளதால், அமெரிக்கா பாகிஸ்தானை நம்பாமல், உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தலாம் என்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அப்படி நடைபெற்றால் உள்நாட்டில் பெரும் நெருக்கடியான சூழ்நிலை உருவாகும். பொதுமக்களும் அரசுக்கு எதிராகத் திரும்புவார்கள். அப்படியான ஒரு சூழல் ஏற்பட்டால், பாகிஸ்தானால் அதனை சமாளிக்க முடியாத சூழல் ஏற்படும். அதனை தவிர்க்கும் விதத்தில் இந்தியா எல்லைப் பகுதியில் படைகளை கொண்டு வந்து குவித்து பதட்ட சூழ்நிலையை பாகிஸ்தான் உருவாக்குகிறது என்பதாக கருத்துகள் நிலவுகிறது.

Friday, January 14, 2011

உலகையே நடுநடுங்க செய்து கொண்டிருந்த இயக்கமான எல்.ரீ.ரீ.ஈ யை அடக்கினார் மஹிந்த: தூதுக்குழுவிடம் சர்தாரி பாராட்டு மழை!

பாகிஸ்தானுக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான பாராளுமன்ற தூதுக்குழு பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியை அவரது மாளிகையில் சந்தித்துள்ளது. இதன் போது 30 ஆண்டு கால கிழர்ச்சியை முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது அரசாங்கத்தை மனப்பூர்வமாக பாராட்டுவதாகவும் உலகையே நடுநடுங்க செய்து கொண்டிருந்த இயக்கமான எல்.ரீ.ரீ.ஈ யை. முழுமையாக அடக்கியது பெரும் சாதனையென்று பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி பாராட்டுகளை தெரிவித்தார்.

யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்திலும் இலங்கை அரசு சிறப்பாக நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மீள் எழுப்பி பொருளாதாரத்தை மறுமலர்ச்சியடைய செய்திருப்பது பெரும் சாதனையென்று பாராட்டிய பாகிஸ்தான் ஜனாதிபதி, ஒரு நேர்மையான, நெறியான தேசத்தலைவரின் சிறந்த ஆளுமை மூலமே இதனை சாதிக்க முடியுமென தெரிவித்தார்.

பாகிஸ்தான் விஜயத்தை மேற்கொண்ட இலங்கை தூதுக் குழுவிற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தனது துணைவியார் சந்திரா மாலினியுடன் சென்றிருந்தார். இக்குழுவில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். அஸ்வர் விஜயகலா மகேஸ்வரன், கமலா ரணதுங்க ஆகியோருடன் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் தம்மிக்கா கித்துள்கொட ஆகியோரும் சென்றிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.