Showing posts with label சனல்4. Show all posts
Showing posts with label சனல்4. Show all posts

Thursday, March 15, 2012

'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் - 2' போலியானது - குமுறும் கோத்தபாய

சனல்4 தொலைக்காடசியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சிறீலங்காவின் போர்க்குற்ற காணொளியான 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் - 2' போலியானது என பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஐபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில், திட்டமிட்ட முறையில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதன் போலித் தன்மையை நிரூபிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு சில ஆவணப்படங்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் யோசனைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகத் குற்றம் சாட்டியுள்ளார்.

சிறீலங்கா படை வீரர்கள் பரிசுத்தமானவர்கள், எந்தவித போர்க்குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. மாறாக விடுதலைப் புலிகளே போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

மூன்று தசாப்த காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் அது தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சனல் 4 ஊடகம் சிறீலங்காவிற்கு எதிராக செயற்படும் நோக்கில் போலியான தகவல்களை ஆதரமின்றி இவ்வாறு பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சாட்டுகின்றார் கோத்பாய.