Showing posts with label தமிழீழம். Show all posts
Showing posts with label தமிழீழம். Show all posts

Saturday, February 22, 2014

எமது குரல் உலகெங்கும் கேட்க நாம் ஓயாமல் போராட வேண்டும்! வை.கோ ஜெனீவாவுக்கு அழைப்பு!

மார்ச் 10 திகதிக்கு ஜெனீவா திடலுக்கு திரண்டு வாருங்கள் ,இதுவரை ஜெனீவா இப்படியான மக்கள் சங்கமத்தை சந்தித்திருக்க முடியாத அளவில் அணிதிரள்வோம். உலகம் திகைக்க வேண்டும் , திடுக்கிட வேண்டும். எமது குரல் உலகெங்கும் கேட்கும் வகையில் நாம் ஓயாமல் போராட வேண்டும். வை. கோபால்சாமி அழைப்பு

Monday, January 27, 2014

வடக்கில் சமாதானமாம் - கோத்தாபாய கூறுவதை நம்ப உலகத் தலைவர்கள் முட்டாள்கள் அல்ல: - சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

வட மாகாண தமிழ் மக்கள் யுத்தம் முடிந்து நான்கு வரு­டங்­க­ளுக்கு பின்­னரும் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே வாழ்­கின்­றனர். இதனை உலகம் அறியும். எனவே, அங்கு சமா­தானம் நில­வு­வ­தாக பாது­காப்புச் செய­லாளர் கூறு­வதை நம்ப உலக நாடுகள் அதன் தலை­வர்கள் முட்­டாள்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், எம்.பி.யுமான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.
நாட்டில் சிங்­கள பெளத்த பேரி­ன­வாத சக்­தி­களை அர­சாங்­கமே தூண்டி விடு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார். வெளி­நாடு சென்று தீர்வைப் பெற முடி­யாது. எமது குடும்பம் அர­சியல் வர­லாறு கொண்ட குடும்பம் என பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ தெரி­வித்­துள்ள கருத்து தொடர்­பாக தமது பக்க நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­து­கை­யி­லேயே சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் இது தொடர்­பாக தெளி­வு­ப­டுத்­து­கையில்,

யுத்தம் முடிந்­து­விட்­டது. ஆனால் சமா­தானம் வந்­து­விட்­ட­தாகக் கூற முடி­யாது. தமிழ், சிங்­கள மக்கள் இணைந்து ஒற்­று­மை­யாக வாழும் சூழ்­நிலை இன்­னமும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எனவே, பாது­காப்புச் செய­லாளர் நாட்டில் சமா­தானம் நில­வு­வ­தா­கவும், அதனை சீர்­கு­லைக்க வெளி­நா­டுகள் முயற்­சிப்­ப­தா­கவும் கூறு­வது 'மந்­திரம்' ஓது­வ­தற்கு சம­மா­ன­தாகும்.

யுத்தம் முடிந்து 4 வரு­டங்கள் கழிந்த பின்­னரும் வட­ப­குதி தமிழ் மக்கள் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே அடக்­கி­யா­ளப்­ப­டு­கின்­றனர். இரா­ணுவ முகாம்கள் பல அகற்­றப்­பட்­டுள்­ள­தாக கூறப்­பட்­டாலும் அவ்­வா­றான நிலை அங்கு கிடை­யாது. மாறாக இரா­ணுவ முகாம்கள் விஸ்­த­ரிக்­கப்­பட்டு வருகின்­றன. அதற்­காக மக்­களின் பூர்­வீக சொந்­தக்­கா­ணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

உலகில் எந்­த­வொரு நாட்டில் மக்கள் இரா­ணுவ அடக்கு முறைக்குள் ஆளப்­ப­டு­கின்­ற­னரோ, அங்கெல்லாம் போராட்­டங்கள் தொடர்ந்து கொண்­டேதான் இருக்கும். இதுதான் உலக நியதி. இதனை மாற்ற முடி­யாது. நாட்டில் சமா­தானம் இல்லை. யுத்தம் முடிந்து 4 வரு­டங்கள் கடந்­து­விட்­டன. அர­சாங்கம் சிங்­கள பெளத்த பேரி­ன­வாதச் சக்­தி­களின் சிறைக்­கை­தி­யாக சிக்­கிக்­கொண்­டி­ருப்­ப­தோடு மட்­டு­மல்­லாது சிங்­கள பெளத்த பேரி­ன­வாதச் சக்­தி­களை தூண்­டி­விட்டு இந்துக் கோவில்கள், முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள், கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களை உடைக்­கின்­றது.
இதன்­மூலம் தமி­ழர்­க­ளுக்கு உரி­மை­களை வழங்க மாட்டோம். மாறாக, சிங்­கள பெளத்த பேரி­ன­வாத தீவி­ர­வாத சக்­தி­களின் அடி­மை­க­ளா­கவே தமி­ழர்கள் வாழ வேண்டும். தமி­ழர்­க­ளுக்கு உரிமை என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்­பதே அர­சாங்­கத்தின் கொள்­கை­யாகும். அர­சாங்­கத்தின் சமா­தா­னமும், தேசிய நல்­லி­ணக்­கமும் உதட்­ட­ள­வி­லேயே உள்­ளது. தவிர நடை­முறை சாத்­தி­ய­மா­ன­தாக இல்லை.

எமது பிரச்­சி­னையை உள்­நாட்டில் தீர்க்க முடியும். வெளி­நா­டுகள் தேவை­யில்லை. எமக்கு அர­சியல் அனு­பவம் உள்­ளது போன்ற பாது­காப்புச் செய­லா­ளரின் மந்­தி­ரங்­களை சர்­வ­தேசம் செவி­ம­டுக்­காது. ஏனென்றால் நடை­மு­றையில் நாட்டில் எது­வுமே இல்லை. சர்­வ­தே­சமோ, அதன் தலை­வர்­களோ இவர்­களின் மந்­தி­ரங்­களை கேட்­கு­ம­ள­விற்கு முட்­டாள்­க­ளல்ல.

எதிர்வரும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்குமென்பதை எதிர்பார்த் திருக்கின்றோம். எமது மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொள்வதற்கான முன்னகர்வுகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நீயா-நானா நிகழ்வில் நீக்கப்பட்ட தலைவர் பிரபாகரனைப்பற்றிய கருத்துக்கள்!

நேற்றைய நீயா-நானா நிகழ்வில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. தோழர்.கி.வே.பொன்னைய்யனின் வாதங்கள் ஏனோ பதியப்படாமல் போனது வருத்தமளிக்கிறது. மிக நீண்ட நேரம் பதியப்பட்ட இந்த நிகழ்வு ஒளிபரப்பின் போது சுருக்கப்பட்ட காரணம் என்றாலும், குமரேசன்.அசோக் மற்றும் இன்னும் பிற நண்பர்களின் விரிவான வாதங்கள் பதிந்திருந்தால் விவாதத்தினை இன்னும் சிறப்பாக கண்டிருக்க முடியும். கி.வே பொன்னையனும்-குமரேசன் அசோக்கும் பல தகவல்களை விவாதித்திருந்தார்கள்.. எப்பொழுதும் இருப்பதைப் போல ஒன்றுக்கொன்று எதிர் நிலையில் இருக்கும் கருத்துக்களைப் போன்றதல்ல நேற்றய தலைப்பு. இதனாலேயே பலவிடயங்களை விரிவாக பலரால் பேச முடியாமல் போயிற்று.

அதே போல தமிழீழ தேசியத் தலைவர் தோழர். பிரபாகரனைப்பற்றி பதிந்த கருத்துக்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு பிடித்த பேச்சாளர்களாக மூவரை குறிப்பிட்டிருந்தேன் 1. மால்கம் எக்ஸ், 2. தந்தைப் பெரியார், 3. தலைவர்.தோழர்.பிரபாகரன். இதில் மூன்றாவது நீக்கபப்ட்டிருந்தது. கி.வே பொன்னைய்யனும் இதே பதிவினை செய்திருந்தார்.

தொலைக்காட்சிகளில் செய்யப்படும் தணிக்கை வருத்தத்திற்குரியது. எத்தனையோ ஆபாசக் காட்சிகளை, குடும்ப வன்முறைக் காட்சிகளை, தணிக்கை செய்யாத தொலைக்காட்சிகள் ”தலைவர் பிரபாகரனின்” பெயரை உடனடியாக தணிக்கை செய்வதை காணமுடிகிறது.. இது முதல்முறைகிடையாது... நேரடி ஒளிபரப்பினைத் தவிர்த்து வேறு எங்கும் முழுமையாக பேசிவிடமுடிவதில்லை..
தலைவர் பிரபாகரனை அவரது அரசியல் நுணுக்கத்திற்காகவும், சர்வதேச அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பற்றியும், 'டி ஃபேக்டோ' நாடாக "சுயாட்சி பிரதேசமாக இருந்த தமிழீழத்தின்" ஆட்சியைப் பற்றியும் விரிவாக பேசும் காலம் வரும். அதனை உருவாக்குவது நம் அனைவரின் கடமை.

வணிகப் பொருளாக ‘அடையாளமாக பயன்படுத்தி’ வணிகத்தினை பெருக்கமட்டுமே பயன்பட்ட நிகழ்வுகள் மாறி நேர்மையான விவாத களம் அமைக்கப்படவேண்டிய நெருக்கடியை உருவாக்கவேண்டும்,. .. தொடர்ச்சியான போராட்டங்களின் ஊடாகவே இதனை சாத்தியப்படுத்த முடியும்..

குறிப்பு: இதே விஜய் தொலைக்காட்சி தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்றை தானே தயாரித்து ஒளிபரப்பும் அதற்கான காலம் மிக விரைவில் வரும், இது தமிழ் இணையத்தின் கருத்து.
சென்னை - தமிழன்

Wednesday, January 08, 2014

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா..?

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி.....
... “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம், அங்கே தலைமுடி கத்தரிக்கப்பட்டிருந்த சில பெண் போராளிகளை இனம் கண்டு கைது செய்துதான் அவர்களூடாக அவர்களுக்குத் தெரிந்த மற்றைய போராளிகளை கைது செய்ய முடிந்தது. சில போராளிகள் யுத்த களத்தில் காயம் அடைந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நின்று போராடியிருக்கிறார்கள். சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள். அவர்கள்தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே உடனடியாக பழி தீர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்..!
உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து தவபாலன் (இறைவன்)  என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையால்தான் மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! பின்னால், சிங்கள இராணுவ வீரர்கள் தங்கள் கைகளில் அகப்பட்ட இளைஞர்கள், யுவதிகளையும், சில போராளிகளையும், பன்னிரெண்டு வயதேயான பாலச்சந்திரனையும் சுட்டுக்கொல்வதை தங்கள் கைபேசியூடாக படம் பிடித்து வைத்திருந்ததை சில சுயலாபங்களுக்காக வெளியிட்டிருந்தனர்.
மக்களோடு மக்களாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை இனம் காண சிங்களப் படைகளால் முடியாமல் போகவே, சில பொது மக்களை பிடித்து துன்புறுத்தி மிரட்டியதால் அந்த மக்கள் மூலம் சில போராளிகள் இனம் காணப்பட்டார்கள். சிலரை ஒலிபெருக்கிகள் மூலம் “சரணடையுமாறு” அறிவுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் தங்கள் பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் தங்களால் பாதிப்படையக்கூடாது என்பற்காக தாங்களாகவே முன் வந்து சரணடைந்தார்கள். சில போராளிகளுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் இல்லாததால் அவர்கள் சரணடையாமல் மக்களோடு மக்களாகவே வாழ்கின்றனர். இக்கருத்துக்களை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் என்றால், “மக்கள் வேறு, புலிகள் வேறு” என்று புலம்பிக் கொண்டிருக்கும் சில சர்வதேச பரப்புரையாளர்களுக்கு தெளிவுபடுத்தத்தான்.
இனியாவது புரிந்து கொள்ளுங்கள்… அங்கே, இறுதிவரை போராடியது அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஈழமக்களுக்குச் சொந்தமான புலிகள்தான் என்று! இனி ஒரு போதும் மக்களையும் புலிகளையும் பிரித்து எந்த சக்திகளாலும் இனம் காணமுடியாது!.
இவைகள் ஒரு புறமிருக்க, விடுதலைப் புலிகளின் பலத்தையும், அவர்களுக்கு சர்வதேச ரீதியாக எழுந்த பேராதரவையும் பார்ப்போம்.
இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல்… எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளுமின்றி எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்களோ… அந்த நோக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கிலே பல அமைப்புக்களையும், பல உள்கட்டுமானங்களையும் உருவாக்கினார்கள். பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் சென்றடையக்கூடிய சகலவிதமான நலத்திட்டங்களையும் உருவாக்கினார்கள்.
காவல்துறையில் இருந்து நீதிமன்றுகள், வங்கிகள், தொலைக்காட்சி சேவைகள், வானொலி சேவைகள், பத்திரிகைகள் என ஓர் அரசாங்கத்திற்குத் தேவையான… இன்னும் ஏராளமான கட்டமைப்புக்களை உருவாக்கியிருந்தனர். உலக வரலாற்றில் தனித்தனி நாடுகள் வைத்து அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ நாடுகள் வறுமை, வரட்சி, உணவுப் பஞ்சம், கலாச்சார சீரழிவு மற்றும் மக்களை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க முடியாமல், அந்த மக்களே அரசைக் கலைத்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்த வரலாறுகளும் நிறைய உண்டு! இந்த நாடுகளுக்கெல்லாம் பலநாட்டு உதவிகள் கிடைத்தும், தனிநாடு, தனி அரசாட்சி என்று இருந்தும் அங்கு எல்லாக் கொடுமைகளும் இன்றும், இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது!
உலக நாடுகளின் பாரிய உதவிகளுடன் இலங்கை அரசாங்கம் பல தடைகளைப் போட்டு ஒரு சிறுபான்மை இன மக்களை நசுக்கிக் கொண்டு வர, அந்த மக்களே விழிப்படைந்து, எழுச்சியடைந்து எந்த நாட்டு உதவிகளுமின்றி விடுதலைப் புலிகளாக உருவாகி திருப்பித் தாக்கத் தொடங்கி கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக போராடி தமக்கான ஒரு சுதந்திர தேசத்தை உருவாக்கியிருந்தார்கள்.
பூகோள ரீதியாக இந்தியா தவிர வேறு எந்த நாடுகளும் அருகினில் இல்லை. இந்தியா கூட கடல் கடந்துதான் இருக்கிறது! உதவிகள் கேட்டு ஓடவும், உயிரைப் பாதுகாக்க வேறு இடங்களில் போய் பதுங்கிக் கொள்ளவும் எந்தவிதமான பாரிய இடங்களும் இல்லை! ஒரு சிறிய தேசம் அது! அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் துறைமுக வசதிகள் இல்லை, விமானத்தளங்கள் இல்லை, சீரான போக்குவரத்து வசதிகள் இல்லை, எரிபொருள் வளங்கள் இல்லை, எந்தவிதமான மூலவளங்களும் இல்லை..! பல நெருக்கடிகள், பொருளாதாரத் தடைகள், பலநாட்டு மறைமுக அழுத்தங்கள் இன்னும் நிறைய இருந்தும்…. எப்படி உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு விடுதலைப் படையை உருவாக்கி முப்படைகளையும் கட்டியமைத்து தனியாக ஒரு தேசத்தை உருவாக்கி (ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளாதது மட்டும்தான்) தனி அரசாங்கத்தை நடத்திக் காட்ட முடிந்தது?
விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே…! உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..!
உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!, வாழ்ந்ததும் இல்லை!
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?
* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!
*உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை!
* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!
* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!
*உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினரையும் உலக அரங்கில் பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச நாடுகள் அழைத்ததில்லை!
* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையத்தளங்கள் இருந்ததில்லை!
* முகநூல்களிலும் (facebook) வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக செய்திகள் வந்ததில்லை!
* விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை!
* விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்… எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது?
* அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெரும்பலம் அவர்களுக்குக் கிடைத்தது?
பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தன…? அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்! அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே! அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கான தளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்? அவர்கள்தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்றுவரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!
இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.
அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:
* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
* தமிழீழ வைப்பகம்.
* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
* கிராமிய அபிவிருத்தி வங்கி.
* அனைத்துலகச் செயலகம்.
* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
* சுங்க வரித்துறை.
* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
* அரசறிவியற் கல்லூரி.
* வன வளத்துறை.
* தமிழீழ நிதித்துறை.
* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.
* கலை பண்பாட்டுக்கழகம்.
* மருத்துவப் பிரிவு.
* திலீபன் சிறப்பு மருத்துவமனை.
* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
* சுகாதாரப் பிரிவு.
* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
* நிர்வாக சேவை.
* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
* மீன்பிடி வளத்துறை.
* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
* தொழில் நுட்பக் கல்லூரி.
* சூழல் நல்லாட்சி ஆணையம்.
* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
* தமிழீழ விளையாட்டுத்துறை.
* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
* தமிழீழ போக்குவரவுக் கழகம்.
* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).
* வளங்கள் பகுதி.
* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
* விலங்கியல் பண்ணைகள்.
* விவசாயத் திணைக்களம்.
* தமிழ்மொழி காப்பகம்.
* தமிழீழ சட்டக்கல்லூரி.
* தமிழீழ கல்விக் கழகம்.
* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
* வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
* அன்பு முதியோர் பேணலகம்.
* இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)
* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
* சீர்திருத்தப் பள்ளி.
* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
* புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்
* உதயதாரகை (விதவைகளுக்கானது).
* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
* எழுகை தையல் பயிற்சி மையம்.
* மாணவர் அமைப்பு.
* பொத்தகசாலை (அறிவு அமுது).
* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
* வெளிச்சம் (மாத சஞ்சிகை).
* நாற்று (மாத சஞ்சிகை).
* பொற்காலம் வண்ணக் கலையகம்.
* அருச்சுனா புகைப்படக் கலையகம்.
* ஒளிநிலா திரையரங்கு.
* புலிகளின் குரல் வானொலி.
* தமிழீழ வானொலி.
* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
* தமிழீழ இசைக்குழு.
* காலணி (பாதணி உற்பத்தி மையம்)
* சேரன் உற்பத்திப் பிரிவு.
* சேரன் வாணிபம்.
* சேரன் சுவையகம்.
* சேரன் வெதுப்பகம்.
* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
* பாண்டியன் சுவையூற்று.
* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
* சோழன் தயாரிப்புகள்.
* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
* தென்றல் இலத்திரனியலகம்.
* தமிழ்மதி நகை மாடம்.
* தமிழ்நிலா நகை மாடம்.
* தமிழரசி நகை மாடம்.
* அந்திவானம் பதிப்பகம்.
* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.
* இளவேனில் எரிபொருள் நிலையம்.
* இளந்தென்றல் தங்ககம் (Lodge).
* 1-9 தங்ககம் (Lodge)
* மருதம் வாணிபம்.
* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).
* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).
* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.
* மாவீரர் அரங்குகள்.
* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
* மாவீரர் நினைவு வீதிகள்.
* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.
* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.
* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
* மாவீரர் நினைவு நூலகங்கள்.
* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)
இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள்.
உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென “தேசிய மலர்”, “தேசிய மரம்”, “தேசியப் பறவை”, “தேசிய விலங்கு” போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை.
எந்த நாட்டு உதவிகளையும் நம்பாமல், தன் சொந்த மக்களின் பலத்தை நம்பியே போராட்டத்தை ஆரம்பித்தார், தலைவர் பிரபாகரன்! இன்று தலைவர் பிரபாகரன் அவர்களையும், போராளிகளையும் “தீவிரவாதிகள்” என்று வாய் கிழிய கத்தி கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சில விசமிகளிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்…!
விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்…. எவ்வாறு மக்களின் பலமும், பேராதரவோடும் மக்களுக்கான உள்கட்டுமானங்களை உருவாக்க முடிந்தது? உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்புக்களும் இவ்வாறான உள்கட்டுமானங்களை உருவாக்கிய சரித்திரம் உண்டா..?
சிங்கள அரசாங்கம் தமிழ்க் குழந்தைகளை அனாதையாக்கியது! பிரபாகரன் அவர்கள் அந்தக் குழந்தைகளுக்குத் தந்தையானார். அப்படித்தான் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை, செந்தளிர் இல்லம், இனிய வாழ்வு இல்லம் உருவாகியது!
சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும் தடைபோட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்க… தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். அவைகள்தான் மேற்குறிப்பிட்ட மக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா?
மக்களுக்கான கட்டமைப்புக்கள் ஒருபுறமிருக்க…. இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்…
தரைப்படைகள்
* இம்ரான் பாண்டியன் படையணி.
* ஜெயந்தன் படையணி.
* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.
* கிட்டு பிரங்கிப் படையணி.
* குட்டிச்சிறி மோட்டார் படையணி.
* இராதா வான்காப்பு படையணி.
* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.
* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
* சோதியா சிறப்புப் படையணி.
* மாலதி சிறப்புப் படையணி.
* அன்பரசி படையணி.
* ஈருடப் படையணி.
* குறி பார்த்துச் சுடும் படையணி.
* சிறுத்தைப் படையணி.
* எல்லைப்படை,
* துணைப்படை,
* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.
* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.
* பாதுகாவலர் பிரிவு.
* முறியடிப்புப் பிரிவு.
* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
* ஆழ ஊடுருவும் படையணி.
* உந்துருளிப் படையணி
கடற்படைகள்.
* கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.
* கடல் வேவு அணி.
* சார்லஸ் சிறப்பு அணி.
* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).
* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).
* கடற்சிறுத்தை சிறப்பு அணி.
* சங்கர் படையணி.
* வசந்தன் படையணி.
* சேரன் படையணி.
* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.
* வான்படை.
* கரும்புலிகள்.
* புலனாய்வுத்துறை.
* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.
* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.
* படையப் புலனாய்வுப் பிரிவு (MI)
* வேவுப் பிரிவு.
* களமுனை முறியடிப்புப் பிரிவு.
* களமுனை மருத்துவப் பிரிவு.
* கணினிப் பிரிவு.
* பொறியியல் பிரிவு.
* விசேட வரைபடப் பிரிவு.
* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.
* தமிழீழ படைத்துறைப் பள்ளி.
* ஆயுத உற்பத்திப் பிரிவு.
* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.
* மாவீரர் பணிமனை.
இப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை! ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழுப் பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்கு ஒப்பாக இருந்தார்கள்.
எல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது. அந்த வீரமிக்க படைதான் “கரும்புலிகள்”! உலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான “கரும்புலிகள்” விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது.
அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது! தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல…. ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால்… அங்கே தமிழனின் வீரம் எத்தகையது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது!.
இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது. உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது! இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது! இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளா… தீவிரவாதிகள்?
தன் சொந்த நாட்டு சிறுபான்மை இன மக்களை, பல நாட்டுப் படைகளோடு உலகில் உள்ள சகல கொடிய ஆயுதங்களாலும் கொன்று குவித்ததால், அது தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்கிறது சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து பயங்கரவாதம் புரியும் வல்லரசுகள்!. அதே சிறுபான்மை இன மக்கள் அரச பயங்கரவாததிற்கு எதிராக உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டிப் போராடினால்; அவர்களைத் “தீவிரவாதிகள்” என்கிறது பயங்கரவாதம் புரியும் மானம் கெட்ட வல்லரசுகள்!.
ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே…!
* கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?
* ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும் சுட்டுக் கொல்வதுதான்…. உங்கள் ஜனநாயகமா?.
* பால்குடி பிஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து, தாயைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு அந்தப் பிஞ்சுகளை அனாதையாக்கி தெருத் தெருவாக அலையவிடுவதுதான்…. உங்கள் ஜனநாயகமா?
* மட்டக்களப்பில் வயதிற்கு வந்து ஒரு வாரமே ஆன பதின்மூன்று வயதுச் சிறுமி புனிதவதியை ஏழு சிங்கள இராணுவ காட்டுமிராண்டிப் படைகள் தாயின் முன்னே கதறக் கதற கற்பழித்து அந்தச் சிறுமியை சித்தப் பிரமையாக்கியதுதான்…. உங்கள் ஜனநாயகமா?
* இதேபோல் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி கிருசாந்தியை கற்பழித்துக் கொன்று புதைத்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?
* சமாதான காலத்திலே மன்னார் வங்காலையில் அதிகாலை ஒரு வீட்டிற்குள் புகுந்த சிங்களக் காட்டுமிராண்டிப் படைகள் அங்கே குடும்பத்தோடு தூங்கிக் கொண்டிருந்த இளம் தாயை கற்பழித்துக் கொன்று விட்டு, தந்தையையும் கொலை செய்து விட்டு, அவர்களின் இரண்டு பிஞ்சுப் பாலகர்களையும் உயிரோடு தூக்குக் கயிற்றிலே தொங்க விட்டு கொலை செய்வதுதான்….. உங்கள் ஜனநாயகமா?
* வள்ளிபுனத்திலே 53 செஞ்சோலை பாடசாலைப் பிஞ்சுகளை வானத்தில் இருந்து விமான மூலம் குறி தவறாமல் வேண்டுமென்றே குண்டு வீசி சதைப் பிண்டங்களாக… துண்டு துண்டுகளாக சிதைத்துக் கொன்று குவித்து இரத்தத்தில் குளிக்க வைத்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?
* சுற்றிவளைப்பு என்ற பெயரில் சிங்களப் படைகள் கிராமங்களுக்குள் புகுந்து பல பெண்களின் கற்பை சூறையாடி அவர்களின் உயிர்ப்பையினை நிரப்பி… அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளைக் கொடுத்தும், பருவமாகத பள்ளிச் சிட்டுக்கள் முதல் பால் மடி வற்றிப்போன வயதான பெண்கள் வரை காமக்குருடர்கள் போல் அவர்களைப் பிடித்து கூட்டத்தோடு தெரு நாய்களைப்போல் மாறிமாறி கற்பழித்து கொன்று விட்டு மலசல கழிவுத் தொட்டிகளுக்குள்ளும், பாழாங் கிணறுகளுக்குள்ளும் மூழ்கடித்து முகவரி தெரியாமல் அழித்துத் தொலைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?
* வல்வைப் படுகொலைகள் , சாவகச்சேரிப் படுகொலைகள், அளவெட்டிப் படுகொலைகள், அல்லைப்பிட்டிப் படுகொலைகள், மண்டைதீவுப் படுகொலைகள், குமுதினிப்படகுப் படுகொலைகள், சத்துருக்கொண்டான் டிப்போ படுகொலைகள், நவாலிப் படுகொலைகள், நாகர்கோவில் பாடசாலை படுகொலைகள், பொத்துவில் படுகொலைகள், கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், சம்பூர் படுகொலைகள், வீரமுனைப் படுகொலைகள் மற்றும் கிழக்கு மாகாணப் படுகொலைகள் என்று எண்ணற்ற படுகொலைகளை ஊர் ஊராக… கிராமம் கிராமமாக… தெருத் தெருவாக தமிழர்களைப் பிடித்து துடிக்கத் துடிக்க கொன்று குவித்து மண்ணுக்குள் உரமாக்கியதுதான்… உங்கள் ஜனநாயகமா?
* உயிரற்ற உடலைக்கூட விட்டு வைக்காமல் கற்பழித்து விட்டு, பின் அந்த உயிரற்ற உடலின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டியும், சிதைத்தும் அலங்கோலமாக்குவதுதான்….. உங்கள் ஜனநாயகமா?
* இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து எரிகுண்டுகளையும், நச்சுக் குண்டுகளையும் போட்டு கூண்டோடு துடிக்கத் துடிக்க கொன்று குவிப்பதுதான்…. உங்கள் ஜனநாயகமா?.
* உயிரைப் பாதுகாக்க பதுங்கு குழிக்குள் ஒழிந்தவர்களையும், இந்த உலகை பார்க்கும் முன்னே தாயின் கருவறைக்குள் பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்று புதைப்பதுதான்….. உங்கள் ஜனநாயகமா?
* இறுதி யுத்தத்தில் கைதான பொதுமக்களை போராளிகள் என்ற பெயரில் விசாரணை என்று அழைத்துச் சென்று ஆண்களை கொலை செய்து மூடி மறைத்தும்… பெண்களை கூட்டத்தோடு கற்பழித்து, சிலரை கொலை செய்தும், வேறு பலரை கட்டாய விபச்சாரியாக்கி விலை பேசி விற்றுத் தீர்த்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?
* கைது செய்து கொலை செய்த ஆண்களின் மனைவிமாரிடம், அவர்கள் கணவர்மார்கள் உயிரோடு இருப்பதாக அவர்களின் பெயரைச் சொல்லி இன்றும் கூட காமவித்தைகளை அரங்கேற்றி விளையாடிக் கொண்டிருப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?
 *  ஈழத்தமிழன் ஒழிந்துகொள்ள இடமேதுமில்லாமல் அலைந்து அலைந்து இறுதியில் நிராயுதபாணிகளாக அரச படைகளிடம் அடைக்கலமாக அவர்களை வயது வித்தியாசமின்றி கொன்று குவித்து களைத்துப் போய் முடியாமல் காயப்பட்டவர்களையும், கையில் அகப்பட்டவர்களையும் செத்த பாம்பினைப் போல் கைகளைக் கட்டி வரிசையாக தெருக்களில் விறகுபோல் அடுக்கி வைத்து கவச வாகனங்களால் மிதித்து துடிக்கத் துடிக்க சாகடித்தீர்களே…. இதுதான் உங்கள் ஜனநாயகமா?
இப்படியாக….
மேற்கண்ட கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள முடியாத மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் ஏந்தி போராடி தங்களை தற்காத்துக் கொண்டால்…. அவர்கள் உங்கள் பார்வையில் தீவிரவாதிகளா?
அவ்வாறெனில்….
உங்கள் பார்வையில் விடுதலைக்காக ஆயுதம் வைத்துப் போராடும் மக்கள் “தீவிரவாதிகள்” என்றால்…. கொடிய ஆயுதங்களை வைத்து மக்களை அநியாயத்திற்கு கொன்று குவிக்கும் அரசாங்கம் “தீவிரவாத அமைப்பாகத்” தெரியவில்லையா?
மாறாக… விடுதலைப்புலிகள்

ஒரு சிங்களப் பெண்ணைக் கற்பழித்திருந்தாலோ…..
சிங்கள மக்களைக் கொன்று குவித்திருந்தாலோ….
அல்லது, வேறு சில அமைப்பினர்போல் நிராயுதபாணிகளாக செய்தி சேகரிக்கச் சென்ற ஒவ்வொரு பத்திரிகையாளர்களையும் பிடித்து தலைகளை தனியாக அறுத்தெடுத்து படம் பிடித்துக் காட்டியிருந்தாலோ….
நீங்கள் சொல்லலாம், அவர்கள் பயங்கரமான தீவிரவாதிகள் என்று..!
எது ஜனநாயகம்….? எது தீவிரவாதம்….? யார் தீவிரவாதி….? யார் ஜனநாயகவாதி….?
அப்படி, அவர்கள் என்ன செய்தார்கள்…?
தங்கள் இனத்தை அழித்து மக்களை கொன்று குவித்து வரும் அரச படைகளை மட்டுமே எதிர்த்துப் போராடினார்கள். இவர்கள்தான் உங்கள் கண்களுக்கு “தீவிரவாதிகளாக” தெரிகிறார்களா?
உரிமைகள் மறுக்கப்பட்டு, உணர்வுகள் நசுக்கப்படும் போது, அங்கே தீவிரவாதம் வளர்ந்தே தீரும்! இங்கு “தீவிரவாதம்” என்ற சொற்பதம் “சுதந்திர விடுதலையை” தீவிரமாக வேண்டி நிற்கும் தீவிரவாதமே!!!
தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் விடுதலைப் புலிகள் என்ன, வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா? அந்த அரச பயங்கரவாத அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள்தான், தங்கள் உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டி விழிப்படைந்து, எழுச்சியடைந்து விடுதலைப் புலிகளாகத் திருப்பித் தாக்கினார்கள். அந்த மக்கள்தான் விடுதலைப் புலிகள்! விடுதலைப் புலிகள்தான் அந்த மக்கள்!
விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால்….
குந்தியிருக்க ஒரு வீடில்லாமல், நடந்து திரிய ஒரு தெரு இல்லாமல், முகவரி சொல்ல ஒரு ஊர் இல்லாமல், மொத்தத்தில் உயிரோடு, பாதுகாப்போடு வாழ ஒரு சுதந்திரமான நாடு இல்லாமல்….. நாடு நாடாக அலைந்து சுதந்திர விடியலைத் தேடிக்கொண்டு தமக்கான ஒரு தேசத்தை உருவாக்கி நிம்மதிப் பெருமூச்சுடன் வாழத் துடித்துக் கொண்டிருக்கும்… உலக அரங்கில் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழர்களும் தீவிரவாதிகள்தான்!
இன்றும், என்றும் தமக்கான ஒரு விடியல், தமக்கான ஒரு சுதந்திர தேசம் கிடைக்கும் வரை தாயகத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும் சரி எங்கெல்லாம் தமிழர்கள் சுதந்திர விடியலுக்காக தீவிரமாக இறங்கி போராட்டங்களை நடத்துகின்றார்களோ…. அங்கே வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள்தான்!
இதற்கு எதிர்மாறாக விடுதலைப் புலிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்பவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும்; அவர்கள் மானம், வெட்கம், சூடு, சொரணை, மனச்சாட்சி அற்ற தமிழ்ப் பிறப்புக்களே! வேற்று மொழியர்களாக இருந்தால்…. அவர்கள் “பயங்கரவாதம்”, “தீவிரவாதம்”, “சுதந்திர தாகம்” , “விடுதலைப் போராட்டம்” போன்ற சொற்பதங்களின் உள்ளர்த்தம் தெரியாத முட்டாள்களாக இருப்பார்கள்!
விடுதலைத்தீ என்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது! எந்த, தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ….. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது!
விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது! யாரும் அணைக்கவும் முடியாது! அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும் வரை எரிந்து கொண்டே இருக்கும். அதுவரையும் விடுதலைப் புலிகளும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள்!
- வல்வை அகலினியன் ( akaliniyan@yahoo.com)

Wednesday, November 27, 2013

யாழில் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு

தமிழீழக் கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை தியாகம் செய்து சாவினை தழுவிக்கொண்ட மாவீரக் குழந்தைகளுக்கு இராணுவக் கெடுப்பிடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று மாலை 6.01 இற்கு யாழ்ப்பாணத்தில் ஜப்பானின் ஜெயக்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட நவீன சத்திரசிகிச்சைக் கட்டிடத்தின் மேல்தளத்தில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்டிடத்தின் மேல் தளத்தில் தீபம் சுடர் விட்டு எரிவதைக் கண்ட இராணுவத்தினர் வைத்தியசாலை வளாகத்தினுள்ளே ஓடி வந்ததால் வைத்தியசாலை வளாகம் போர்க்களமாக சில மணித்தியாலம் மாறியிருந்தது.

இதேவேளை யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் இன்று மாலை இராணுவத்தினர் கடும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். ஆனாலும் இராணுவத்தின் நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் மக்கள் தமது வீடுகளில் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேவேளை நேற்று இன்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரது அடாவடித் தனங்கள் அதிகரித்துக் காணப்பட்டது.
குறிப்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினீர்களா என கேட்டு இன்று மாலை இரண்டு இளைஞர்கள் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இதை விட பல இடங்களில் இராணுவத்தினர் மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சூழலில் இராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் சுடர் ஏற்றப்பட்டததைத் தொடர்ந்து கடும் பதற்றம் யாழ்.நகர் பகுதியில் நிலவி வருகின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு மாணவர்களால் சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் மௌனப் பிரார்த்தனை மூலம் மாவீரர்களுக்கான தமது அஞ்சலியை இன்றையதினம் அமைதியான முறையில் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் எமது மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமாக பல இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20131127-140806.jpg
20131127-140815.jpg
20131127-140826.jpg
20131127-140838.jpg
20131127-140845.jpg

Tuesday, November 26, 2013

தமிழர்க்கு பூமிப் பந்தில் முகவரி தேடித் தந்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன்! - நக்கீரன்

தமிழினத்தின் வரலாற்றில் எத்தனையோ அரசர்களும் பேரரசர்களும் தோன்றி மறைந்துள்ளார்கள். இராசராச சோழனும் அவன் மகன் இராசேந்திர சோழனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழப் பேரரசை நிறுவிய மன்னர்கள் ஆவர். இலங்கை மீது படையெடுத்து அதனைப் பிடித்து (கிபி 993 - கிபி 1077) ஆட்சி செய்தவர்கள். சோழர்களது ஆட்சி 84 ஆண்டுகள் நீடித்தது. வங்கப் பெருங்கடலில் வலம் வந்த பேரரசர்கள் முதலாவது இராசராச சோழன், முதலாவது இராசேந்திர சோழன் ஆகியோரது கடற்படைக் கப்பல்களில் புலிக்கொடிகள் வானளாவப் பறந்தன.
அந்தப் பொற்காலத்தின் பின்னர் தேசியத் தலைவர் பிரபாகரனின் கடற்படைதான் புலிக் கொடிகளோடு வங்கக் கடலில் வலம் வந்தன.
உலக வரலாற்றில் கிரேக்கத்தின் மகா அலெக்சான்டர், பிரான்சின் சக்கரவர்த்தி நெப்போலியன் மாவீரர்கள் என்று பெயர் எடுத்தவர்கள்.
தமிழினத்தின் வரலாற்றில் மாவீரன் என்ற பட்டத்தைச் சுமந்தவர் தலைவர் பிரபாகரன் ஒருவரேதான்.
தேசியத் தலைவர் பிரபாகரன் ஒருவர்தான் மாவீரன் என்ற சொல்லுக்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கியவர்.
தேசியத் தலைவர் என்றாலும் அது பிரபாகரன் ஒருவரையே குறிக்கும். வேறு யாரையும் குறிக்காது.
ஆங்கிலேயர் இந்தியாவைப் பிடித்து ஆண்ட காலத்தில் தமிழர்கள் படைகளில் சேர்க்கப்படவில்லை. காரணம் ஆங்கிலேயர் கணிப்பில் அவர்கள் வீரம் செறிந்த இனமாகக் கருதப்படவில்லை.

அந்த வசை மாவீரன் பிரபாகரன் பிறந்ததால் கழிந்தது.
தமிழினத்துக்கு இந்தப் பூமிப் பந்தின் மூலை முடுக்கெல்லாம் முகவரி தேடித் தந்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன் ஒருவரேதான்.
தமிழனைத் தெரியாதவர்களும் தலைவர் பிரபாகரனை தெரிந்து வைத்திருந்தார்கள்.
தமிழினம் இழந்த நாட்டை மீண்டும் போராடிப் பெறவேண்டும் அய்யனாவில் தமிழீழக் கொடி பறக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு 30 ஆண்டு காலம் ஓய்வின்றிப் போராடியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.

கடலிலும் தரையிலும் எத்தனை தாக்குதல்கள். எத்தனை ஊடுருவல்கள், எத்தனைப் போர்க்களங்கள். எத்தனை படையணிகள். உலகையே வியப்பில் ஆழ்தியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.
தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணையும் அதில் வாழும் மக்களையும் உயிருக்கு மேலாக நேசித்தவர்.
தேசியத் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்கள் கால்களில் பூட்டப்பட்ட அடிமை விலங்குகள் என்றோ ஒரு நாள் உடையும் தமிழீழம் பிறக்கும் என நம்பியவர். அந்த நம்பிக்கை வீண்போகாது.

இன்று தேசியத் தலைவர் பிரபாகரனது 59 ஆவது பிறந்த நாள்.
தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் மட்டுமே தமிழ் கூறும் நல்லுகம் எங்கும் கொண்டாடப்படுகிறது.
இந்தச் சிறப்பு வேறு யாருக்கும் இல்லை.

தமிழ் மக்களின் வலி தெரியாத தமிழன் முத்தையா முரளிதரன்- மனிதனாக கூட இருக்க முடியாது -ஈ.சரவணபவன்

தனது மகனை , மகளை, கணவனை , மனைவியை தொலைத்த உறவுகளின் வலியை விளங்கிக் கொள்ள முடியாத ஒருவர் மனிதர் என்று கருதப்படவே தகுதி இல்லாதவர் என முத்தையா முரளிதரனின் கூற்றுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

கடந்த 21 ஆம் திகதி 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதற்கான விவாத நேரத்தின் போது உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனைச் சந்தித்திருந்தார்.

அதன்போது முரளிதரன் வெளியிட்ட சில கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. அதன்படி தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை மறப்போம் மன்னிப்போம் என அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் இது அவரின் சொந்த விருப்பம். அதை நான் விளக்க விரும்பவில்லை. ஆனால் இலங்கையில் டேவிட் கமரூன்  பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார் எனவும் 20 அல்லது 30 பெண்கள் மட்டும் தமது உறவுகள் காணாமற்போய்விட்டனர் என படங்களை வைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தி நிற்கின்றனர்.

எனவே இவற்றினை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கை நிலைமைகளைக் கணக்கிடக்கூடாது. இவை பிரித்தானிய பிரதமர் கமரூனிற்கு காட்டுவதற்காக அன்றைய தினம் மட்டும் ஏற்பாடாகியும் இருக்கக் கூடும் என்றும் தெரிவித்திருந்தார். இவரது கருத்து தமிழ் மக்கள் மத்தியில் மன உழைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இவர் ஒரு தமிழனாக இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் .

அது மட்டுமன்றி அவ்வாறு கூறும் உரிமை முரளிதரனுக்கு கிடையாது எனவும் இவருக்கு ஆனித்தரமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

ஒரு தமிழ் பெண் தன் கணவர் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்று தெரியாத நிலையில் வாழ்வது எவ்வளவு அவலமானது என்பதை தமிழரான இவர் விளங்கிக் கொள்ளாமல் இருப்பது வியப்பைத் தருகின்றது.  

அத்துடன் கணவனைக் காணாத பெண்கள் தனது கணவன் உயிருடன் இருக்கின்றாரா  இல்லையா என்று கூட தெரியாது தனது தாலியைக் கழற்றுவதா நெற்றிப் பொட்டை அழிப்பதா என்று கூட புரியாத  நிலை எவ்வளவு கொடுமையானது.

தனது பிள்ளை, கணவர் காணாமாற் போன ஒரு பெண்ணின்; வலியையோ ஒரு தந்தை, காணாமற் போன பிள்ளையின் வலியையோ புரிந்து கொள்ள முடியாத ஒருவர் மனிதர் என்று கருதப்படவே தகுதி இல்லாதவர் என்று நான் கருதுகின்றேன்.

முத்தையா முரளிதரனுக்கு அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்ற அடிப்படையிலும் தமிழர் என்ற வகையிலும் நிறைய அபிமானிகள் உண்டு.

ஆனால் அவர் தான் ஒரு தமிழர் என்பதையும் மனிதர் என்பதையும் மறந்து  இலங்கையில் இன ஒடுக்குமுறைகளைத் திருப்திப்படுத்த  வெளியிட்ட அபத்தமான கருத்து அவரைத் தமிழ் மக்களிடம் மட்டுமன்றி மனிதாபிமானிகளிடமும் வெறுப்புக்குரிய ஒருவராக மாற்றி விட்டது.

அது மட்டுமன்றி விளையாட்டுகளில் இனி அவரைக் கணக்கில் எடுக்கப்போவதில்லை. தான் பிறந்த தமிழினத்துக்கு விரோதமாக மட்டுமன்றி மனிகுலத்திற்கும் விரோதமாகச் செயற்பட்டதன் மூலம் தன்னைத் தானே தனிமைப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் என்றார்.

Friday, November 01, 2013

படுகொலை செய்யப்படும் முன் இழுத்துச் செல்லப்படும் இசைப்பிரியா – சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆதாரம்

கொடூர பாலியல் வெறியாட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் சிங்களப் படைகளால் இசைப்பிரியா அவர்கள் உயிருடன் இழுத்துச் செல்லப்படும் காணொளி ஆதாரத்தை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் இக் காணொளி ஆதாரத்தை இன்று சனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

இசைப்பிரியாவை தமிழீழத் தேசியத் தலைவரின் புதல்வி துவாரகா என்று கருதி சிங்களப் படையினர் இழுத்துச் செல்லும் பொழுது தான் துவாரகா இல்லை என்று அவ்விடத்தில் அழுதபடியே இசைப்பிரியா கூறும் ஒலிப்பதிவும் இக்காணொளியில் உள்ளது.
 

Tuesday, October 29, 2013

வடக்கில் பாதுகாப்பினை விஸ்த்தரிக்க வேண்டிய நிலையில் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றது - இராணுவத் தளபதி

வடக்கில் பாதுகாப்பினை விஸ்த்தரிக்க வேண்டிய நிலை காணப்படுவதாலேயே காணிகள் சுவீகரிக்கப்படுவதாக, இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். 

தென்னிலங்கயில் அதி வேக நெடுஞ்சாலைகள் நிர்மாணிக்கப்படும் போது, பொது மக்களின் காணிகள் சட்ட ரீதியாக கைகொள்ளப்பட்டதைப் போலவே வடக்கிலும் இடம்பெறுகிறது. 

வடக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை விஸ்த்தரிக்க வேண்டிய நிலைமை காணப்படுதால், முகாம்களையும் பெரிதாக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. இந்த நிலையில் சட்ட ரீதியாகவே குறித்த காணிகள் கையகப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Sunday, October 20, 2013

போரின் இறுதி எட்டு மாதங்களில் 146,679 பேர் தொடர்பில் நியாயம் வேண்டும்!- மன்னார் ஆயர் கோரிக்கை


போரின் இறுதி எட்டு மாதங்களில் காணாமல் போனதாக கூறப்படும் 146 ஆயிரத்து 679 பேர் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பின் ஊடகம் ஒன்று இந்த கோரிக்கை குறித்த செய்தியை பிரசுரித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை முன்வைக்கவேண்டும்.
அத்துடன் தமிழர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை மாற்றும் முயற்சியை கைவிடவேண்டும் என்றும் ஆயர் கேட்டுள்ளார்.
தாம் வன்முறைகளை எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ள ஆயர், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வன்முறைகளையும் தாம் கண்டித்தமையை சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் பொதுமக்களை கொலை செய்தமையையும் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம், தமிழர்களை தண்டிக்கும் வகையில் அவர்களை தோல்வியடையச் செய்யும் வகையில், தமிழ் பிரதேசங்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அவர்களின் பிரதேசங்களில் சிங்களக்ி குடியேற்றங்களை மேற்கொள்கின்றது என்றும் ஆயர் குற்றம் சுமத்தியுள்ளார்.
போரின் போது அரச பயங்கரவாதம் மற்றும் தமிழர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.
அரசாங்கத்தில் உள்ள சிலர் ஒரே மக்கள் ஒரே நாடு என்று கூறுகிறார்கள், இதில் ஒரே நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் தமிழர்கள் தனியான இனம், தனியான கலாசாரத்தை கொண்டவர்கள், அவர்களின் அரசியல் அபிலாசைகள் வேறானவை என்று மன்னார் ஆயர் குறிப்பிட்டுள்ளார்

யாழில் அமைச்சர் மகேஸ்வரனால் அமைத்துக் கொடுக்கப்பட்ட மக்கள் குடியிருப்பில் பாரிய இராணுவ முகாம்


யாழ்.காக்கைத்தீவு, கல்லுண்டாய் வெளிப் பகுதியில் காலஞ்சென்ற அமைச்சர் மகேஸ்வரனால் அமைத்துக் கொடுக்கப்பட்ட மக்கள் குடியிருப்பினை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர் அங்கு பாரிய இராணுவ முகாமினை அமைத்து வருகின்றனர்.

மேற்படி பகுதியில் இருந்த ஒரு குடும்பத்தினையும் அங்கிருந்து வெளியேற்றிவிட்டு முழு வீச்சில் இராணுவ முகாம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகேஸ்வரன் இந்து கலாசார அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் யாழ்.மாவட்டத்தில் சொந்த வீடுகள், காணிகள் இல்லாதவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு யாழ்.காக்கைதீவு – கல்லுண்டாய் வெளிப் பகுதியில் வீட்டுத்திட்டத்தினை அமைத்துக் கொடுத்திருந்தார்.
மேற்படி வீட்டுத்திட்டத்தில் சுமார் 25 ற்கும் மேலாக கல் வீடுகள் அமைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் குடிநீர்ப் பிரச்சினை காரணமாகவும், நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகவும் அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர்.
இறுதி யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் மேற்படி வீடுகளில் இரண்டு குடும்பங்களைக் கொண்ட 14 பேர் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அங்கு சென்ற இராணுவத்தினர் அங்கிருந்த குடும்பங்களிடம், மேற்படிப் பகுதியில் புதிய இராணுவ முகாமினை அமைக்கப் போவதாகவும் இதனால் அங்கிருந்து வெளியேறுமாறும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்த ஒரு குடும்பத்தினர் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுள்னர். மேலும் மற்றுமொரு குடும்பத்தினர் அங்குள்ள உடைந்த வீட்டில் தங்கியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் பனை ஓலையினால் காணி எல்லை வேலிகளை அடைத்து பாதுகாப்பினைப் பலப்படுத்தியுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த வீடுகள் புனரமைக்கப்பட்டு வருகின்றது. புதிதாக குடிநீர் தாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. மலசல கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Friday, October 18, 2013

வலி.மேற்கு சங்கானை பிரதேச சபையின் புதிய கட்டடம் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் திறந்துவைப்பு


வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச சபையின் புதிய இரண்டு மாடிக்கட்டடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் இன்று நண்பகல் 12.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கம்பராய் அம்மன் கோவிலில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆலய வாசலில் இருந்து ஊர்வலமாக பிரதேச சபைக்கு அழைத்து வரப்பட்டார்.
மேலும், இந்நிகழ்வில் விருந்தினர்களாக  நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ. சரவணபவான், சுரேஸ் பிறேமச்சந்திரன், சி. சிறீதரன் மற்றும் வட மாகாண சபையின் அமைச்சர்களான பொ ஜங்கரநேசன், எஸ் குருகுலராசா, பி. டெனிஸ்ரன், ப. சத்தியலிங்கம் உட்பட பிரதேச சபைகளின் தலைவர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் அழைத்து வரப்பட்டார்கள்.
இந்நிகழ்வில் வட மாகாண சபையின் பிரதம செயலாளர், உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

Tuesday, October 15, 2013

புலிகளுக்கு உதவிய சுவிஸ் பிரஜை சட்டத்தரணி கே.வி. தவராசாவின் கடும் வாதத்தால் கொழும்பில் விடுதலை


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக சுவிஸ் பிரஜை நடராஜா கருணாகரன் மீது  குற்றம் சாட்டப்பட்டு, சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸ் பிரஜையும் பேர்ண் மாநிலத்தில் தாய் வீடு பணமாற்று நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருணாகரன் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசதரப்பு சாட்சியங்களையும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் நிராகரித்த மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசுரிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்த்தையடுத்து நடராஜா கருணாகரனை விடுதலை செய்தார்.
நடராஜா கருணாகரன் இலங்கை வங்கியுடன் பணமாற்று வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை வங்கியின் வேண்டுகோளையடுத்து, இலங்கை வந்து இன்டர் கொண்டினன்ட் ஹோட்டலில் தங்கியிருக்கையில், 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட கருணாகரன் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் தடுப்புக் காவல் உத்தரவின்  கீழ் தடுத்து வைக்கப்பட்டு பொலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா நடராஜா கருணாகரனின் கைதும் தடுப்புக் காவலும் சட்டரீதியற்றதென உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து, 2007ம் ஆண்டு தை மாதத்திற்கும் மார்கழி மாதத்திற்கும் உட்பட்ட காலப்பகுதியில் அரச விரோத எல் ரீ ரீ ஈ இயக்கத்திற்கு 228 மில்லியன் ரூபா நிதி உதவி பெற்றுக் கொடுத்து அவ் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு உடந்தையாய் செயல்பட்டதாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கக் கூடிய 2(1) (ஏ) பிரிவின் கீழ் குற்றச் சாட்டுப் பத்திரம் கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால்  2013ம் தை மாதம் 11ம் திகதி தாக்கல் செய்யப்பட்டது

2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28.29ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் சட்டமா அதிபரினால் அரச சாட்சிகளாக நடராசா கருணாகரனிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸ் அதிகாரி ஜகத் பொன்சேகா குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மொழி பெயர்த்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் சியாப்டீன் பொலிஸ் தட்டெழுத்தாளர் லலிதா ஆகியோர் சாட்சியமளித்தனர்.
 இந்த சாட்சிகள் எதிரி தரப்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணியினால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்,  நடராசா கருணாகரன் சுயவிருப்பத்தில் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகாவிற்கு வழங்கியதாக அரசு தரப்பினால் முன் வைக்கப்பட்ட முக்கிய சான்றான குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்பட்டதா அல்லது பொலிஸ் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்புக் காவல் கைதியான நடராசா கருணாகரனின் சுயவிருப்பமின்றி பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலமா என்பதற்கான உண்மை விளம்பல் விசாரணையின் தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிஸ் அத்தியட்சகர் இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை எதிரி சுயவிருப்பத்தில் தனக்கு வழங்கியதாக சாட்சியமளித்துள்ள போதிலும் எதிரி தரப்பு சட்டத்தரணியின் குறுக்கு விசாரணையில் பொலிஸ் அத்தியட்சகரின் சாட்சியத்தில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றது.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்படுவதற்கு முன்னரும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்ட பின்னரும் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் சியாப்டீன் எதிரி தமிழில் கூறியதை சிங்களத்தில் பொலிஸ் அத்தியட்சகருக்கு; மொழி பெயர்த்ததில்  பல குறைபாடுகள் காணப்படுகின்றமையை சுட்டிக்காட்டினார்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்ட பின்னர் பதிவின் இறுதியில் மொழி பெயர்ப்பாளர் சியாப்டீன் மொழி பெயர்த்ததாக ஒப்புறுதிப்படுத்தி கையொப்பம் இடவில்லை என்பதையும் எதிரி தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரணையில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
15 வருடங்கள் பயங்கரவாதத் தடைப் பிரிவில் கடமையாற்றி 50 மேற்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய மொழிபெயர்ப்பாளர் சியாப்டீன் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மொழி பெயர்த்ததாக ஒப்புறுதிப்படுத்தி கையொப்பம் இடாமை சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
தட்டெழுத்தாளரான லலிதா குறுக்கு விசாரணையில் பொலிஸ் அத்தியட்சகர் கூறியவற்றை தான் தட்டெழுத்து செய்ததாக கூறியுள்ளாரேயன்றி எதிரி கூறியவற்றை தட்டெழுத்து செய்ததாக கூறவில்லை சட்டரீதியாக இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
அரச தரப்பு சாட்சிகளது சாட்சியங்கள் நம்பகத்தன்மை அற்றைவையாக காணப்படுகின்றமையால் அரசதரப்பு சாட்சியங்களையும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் நிராகரித்து எதிரியை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
எல் ரீ ரீ ஈ இயக்கத்திற்கு நிதி உதவி அளித்ததாக இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் நிரபராதி என வாதாடப்பட்டு நீதிமன்றம் விடுதலை செய்த முதல் வழக்கு இந்த வழக்காகும்.

மாவீரர் துயிலுமில்லங்கள் மீண்டும் வேண்டும்! வலுக்கின்றன மக்கள் குரல்கள்!!

வடக்கில் படையினரால் அழிக்கப்பட்ட சகல மாவீரர் துயிலுமில்லங்களையும் உடனடியாக மீள அமைக்கவேண்டும் என்ற கோசம் வடக்கினில் என்றுமில்லாதவாறு ஓங்கி ஒலிக்கத்தொடங்கியுள்ளது.ஏற்கனவே வடக்கு மாகாணசபை தேர்தலினில் முக்கிய பிரச்சார பேசுபொருளாக இவ்விடயமே இருந்திருந்தது.அத்துடன் வெற்றியின் பின்னரான முதலாவது கூட்டமைப்பின் பத்திரிகையாளர் மாநாட்டினில் இவ்விடயம் ஊடகவியலாளர்களினால் கேள்வியாக எழுப்பப்பட்டுமிருந்தது.அப்போது மக்களது மன உணர்வுகளிற்கு மதிப்பளிக்கப்போவதாக சம்பந்தன் கூறியுமிருந்தார்.வடக்கு மாகாணசபை பதவியேற்பிலும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இதனை சுட்டிக்காட்டியுமிருந்தார்.

இந்நிலையினில் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட  சாவகச்சேரி பிரதேச சபையில் வடக்கில் படையினரால் அழிக்கப்பட்ட சகல மாவீரர் துயிலுமில்லங்களையும் உடனடியாக மீள அமைக்கவேண்டும்  எனும் தீர்மானம் அதிரடியாக நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சபை அமர்வுகள் ஆரம்பமானபோது , குறித்த பிரேரணையை சபை உறுப்பினர் சிறிரஞ்சன் முன்மொழிந்தார்.

“எமது விடுதலைக்காக போராடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வித்தாக வீழ்ந்தபோது அவர்களின் நினைவாகவும் வித்துடல்களை விதைக்கவும் உருவாக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை இறுதியுத்தத்தின் பின்னர் படையினர் அழித்து, அவற்றின் மேல் முகாம்களை அமைத்துள்ளனர்.தற்போது எங்களுக்கென வடமாகாண அரசு அமைந்துள்ள நிலையில் எமது இளைஞர்களின் உயிர்த்தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை மீள அமைக்கவேண்டும்” என்று தெரித்தார். இந்தப்பிரேரணைக்கு ஈ.பி.டி.பி உறுப்பினரான ஞானலிங்கம் என்பவர் மட்டும் எதிர்ப்புத்தெரிவித்தார். ஆயினும் மற்றவர்கள் எல்லோரும் ஆதரிக்க தீர்மானம் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிவராம் ஞாபகார்த்த மண்டபம் யாழினில் திறப்பு!!

மாமனிதர் தராகி சிவராம் ஞாபகார்த்த மண்டபம் நாளை புதன்கிழமை யாழ்ப்பாணத்தினில் திறந்து வைக்கப்படவுள்ளது.யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டினில் திறந்து வைக்கப்படவுள்ள இம்மண்டபம் ஊடகவியலாளர்களது அறிவு வள மேம்பாட்டிற்கென உருவாக்கப்பட்டுள்ளது.தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான புகழ் பெற்ற ஊடகவியலாளர்கள் ஊடக பயிற்றுவிப்பாளர்கள் யாழ்ப்பாண ஊடகவியலாளர்களிற்கு இங்கு பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

யாழ்.நகரின் இராசாவின் தோட்டம் வீதியினில் திறக்கபடவுள்ள இம்மண்டபத்தினில் நாளைய தினம் உத்தியோகபூர்வமான பயிற்சி நெறியினை பிஸப் சௌந்தரம் ஊடக கற்கை மைய இயக்குநர் வணபிதா றூபன் மரியாம்பிள்ளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

திறப்பு விழா நிகழ்வினில் வடமாகாணசபை பிரமுகர்கள் மற்றும் மூத்த ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, October 14, 2013

தோழர் தியாகுவின் உடல் நிலை கவலைக்கிடம்


இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் தியாகு அவர்கள் சென்னையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.
இன்று 14 ஆவது நாளாகவும் தோழர் தியாகு உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார்.
சாகும் வரையான உண்ணாவிரதத்தை கைவிட திரு.தியாகு அவர்கள் மறுத்து வருகின்றார்.
இனியும் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடர்ந்தால் அவருடைய உறுப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்படுவதுடன் இனி எந்த நொடியிலும் அவருக்கு திடீர் மரணம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இனியும் பொறுமையுடன் இருந்தால் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் இழந்துவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.
எந்த நேரமும் தோழர் தியாகு கைது செய்யப்படும் நிலை
கொமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி 14 நாட்களாக உண்ணா விரதப் போராட்டத்தில்
ஈடுபட்டு வரும் தோழர் தியாகுவின் உண்ணா விரத போராட்ட பந்தலை காவல் துறையினர் முற்றுகையிட்டுள்ளனர். எந்த நேரமும் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் தோழர் கைது செய்யப்படும் நிலையே காணப்படுகின்றது. இதனால் தோழரின் ஆதரவாளர்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.
தோழருக்கு ஆதரவு வழங்கி வருகின்றது மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு.இவர்கள் தோழர் தியாகுவின் தியாகத்தை மதித்து கடிதம் மூலம் தொடர்பும் கொண்டுள்ளனர்.

Sunday, October 13, 2013

தமிழர்களின் சுயாட்சியை வென்றெடுக்கும் ஆளுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது என்கிறார் சிதம்பரம்

தமிழர்களின் சுய ஆட்சியை வென்றெடுக்கும் ஆளுமை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிதி அமைச்சர் பி.சிதம்பரம் இதனை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 25 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி பெற்றது. 

இது வரலாற்று சாதனையாகவே கருதப்பட வேண்டும். இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வழங்குகின்ற ஆதரவின் அடிப்படையில், தமிழர்களுக்கும், ஏனைய சிறுபான்மையினருக்குமான சுயஆட்சி, சுயகௌரவம், சமஉரிமை மற்றும் அதிகார பகிர்வு போன்ற விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பால் விரைவில் பெற்றுக் கொடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Saturday, October 12, 2013

தமிழரசு கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை பேணத் தவறியுள்ளது: நிகழ்வைப் புறக்கணித்தமைக்கான காரணம் கூறும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ


வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வினை புறக்கணித்தமைக்கு பதவி அங்கலாய்ப்பே காரணம் என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் மக்களுடைய உணர்வுகளை மதிக்கவும், உட்கட்சி ஜனநாயகத்தை பேணவும் தமிழரசு கட்சி தவறியுள்ளமையினாலேயே அதனைப் புறக்கணித்தோம் என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தெரிவித்துள்ளன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் மற்றும் ரெலோ அமைப்பினர் இணைந்து யாழ்.நகரப் பகுதியிலுள்ள விடுதியொன்றில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றினை இன்று காலை நடத்தியிருக்கின்றனர்.
குறித்த சந்திப்பிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இச்சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாகவும், தேர்தலின் பின்னரும் கூட்டமைப்பிற்குள் உள்ள சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாமல் தமிழரசு கட்சி தொடர்ந்தும் தான்தோன்றித்தனமாகவே நடந்து கொண்டிருக்கின்றது. இதன் தொடர்ச்சியே அமைச்சரவை தெரிவும்.
குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சர்வவேஷ்வரனுக்கு அமைச்சுப் பதவி கேட்டதாக தமிழரசு கட்சி கூறுகின்றது. அதே தமிழரசு கட்சி தகுதி அடிப்படையில் அமைச்சுப் பதவிகளை வழங்கியதாகவும் கூறுகின்றது. எனவே சர்வேஷ்வரன் அரசியல் விஞ்ஞான பட்டதாரி அவர் எவ்வகையில் அமைச்சுப் பதவிக்கு தகுதி அற்றவர்?
அதனைவிட நாம் அதிகாரங்கள் உள்ள ஒரு அமைச்சுப் பதவியை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்க வேண்டும் என்றே கேட்டிருந்தோம். அதுவும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் எமது எதிர்ப்பிற்கு காரணம் எமக்கு அமைச்சுப் பதவிகள் தரப்படவில்லை என்பதற்கானது அல்ல. கூட்டமைப்பிற்குள் உள்ள அனைத்துக் கட்சிகளினதும் அங்கீகாரத்துடன் அமைச்சுக்கள் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே.
குறிப்பாக கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களை தமிழரசு கட்சி தெரிவு செய்திருந்தது. அதே மாதிரியான உரிமை கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளுக்கும் உள்ளது. அதனையே நாங்கள் கேட்டோம். அதற்காக நாம் பதவிகள் மீது மோகம் கொண்டவர்கள் என்ற அர்த்தம் கிடையாது.
மேலும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்வதை மாவை சேனாதிராசா மற்றும் நாம் முற்றாக நிராகரித்தோம். ஏனென்றால் நாமே எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர் ஒரு போர்க்குற்றவாளி என குறிப்பிட்டிருக்கின்றோம்.
பிரபாகரன் மாவீரன் என பேசியிருக்கின்றோம் அவ்வாறு பேசியும், எழுதியும் மக்களிடம் வாக்கு பெற்றுவிட்டு ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் ஏற்பது தவறு, எனவே நாங்கள் அதனை சுட்டிக்காட்டினோம்.
மேலும் ஆயுதப் போராட்டங்களில் இருந்து வந்தவர்கள் மீது தொடர்ந்தும் தமிழரசு கட்சி சேறுபூசும் நடவடிக்கையினை செய்கின்றது. சரி பிழைகளுக்கு அப்பால் நாம் இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள். எங்கள் மக்களுடைய அபிலாஷைகளை அடைய முடிந்த வழியில் அடைவதற்காகவே நாங்கள் ஜனநாயக வழிக்கு திரும்பினோம்.
எம்மை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. எனவே நாம் தொடர்ந்தும் தமிழ்த் தேசியத்தின் பாதையில் பயணிப்போம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த தொடர்ந்தும் பாடுபடுவோம் என அவர்கள் கூறியுள்ளனர்.