Showing posts with label மலேசியா. Show all posts
Showing posts with label மலேசியா. Show all posts

Saturday, March 17, 2012

சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானத்திற்கு மலேசியா ஆதரவளிக்கவேண்டும்!

ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையை மலேசியா ஆதரவளிக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச் சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி குறித்த பேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பிரேரணை தொடர்பாக எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில் மலேசியா குறித்த பிரேரணைக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பிரதிப் பணிப்பாளர் பில் ரொபர்ட்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளை நம்பி இலங்கைக்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்கக் கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, April 17, 2010

பார்வதி அம்மாளுக்கு மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்கியது மலேசியா!

இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு மலேசிய அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் ஒரு மாதகால விசா வழங்கி இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் ஆறு மாத கால விசாவை பார்வதி அம்மாள் அவர்களுக்கு வழங்கியிருந்த நிலையில், இந்தியாவுக்குள் அவர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதிற்கான காரணம் தெரியவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தான் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமைக்கும், பார்வதி அம்மாள் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டமைக்கும் இடையில்; தொடர்புகள் எதுவும் இல்லை என்றும் சிவாஜிலிங்கம் கூறினார்.

நேற்றிரவு 10.15மணி அளவில் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்த பார்வதி அம்மாள் அவர்கள், குறிப்பிட்ட விமானத்திலிருந்து இறக்கப்படாமல் அப்படியே 10.45மணி அளவில் நுழைவு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். இவரை இலங்கையிலிருந்து மலேசியா செல்வதற்காக சிங்கப்பூர் வரை கே.சிவாஜிலிங்கம் அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.