Showing posts with label வீடியோ செய்திகள். Show all posts
Showing posts with label வீடியோ செய்திகள். Show all posts

Monday, June 25, 2012

யூன்-26 : தாயகப் போராட்டத்திற்கு வலுவூட்டுவோம் : வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அழைப்பு !

யூன்26ல் தமிழர் தாயக தமிழர் தலைவர்களால், ஒன்றினைந்து முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு உந்துசக்தியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்று, புலம்பெயர் நாடுகளில் அணிதிரளவேண்டுமென, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
இனஅழிப்பின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்காலினைத் தொடர்ந்து, கடந்த மூன்றாண்டுகளாக தமிழர் தாயகத்தில் சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கலினை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசின் செயற்பாடானது, ஆழமான பிரச்சனையெனத் தெரிவித்துள்ள வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல்அவர்கள் , இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய காலத்தின் தேவை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


தமிழ் மக்களுடைய தாயகம், தேசியதினை வேரறுக்கும் ஒர் முயற்ச்சியாகவே, சிறிலங்கா அரசாங்கம் இதனைத் செய்துவருவதாகக் தெரிவித்துள்ள வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அவர்கள், சர்வதேசத்தின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விவகாரத்தில் மனித உரிமைகள் குறித்து சர்வதேசம் கரிசனை கொண்டிருந்தாலும், நில அபரகரிப்பு போன்ற விடயத்தில் கூடிய கரிசனை இல்லாத நிலையினைக் சுட்டிக்காட்டிய வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல்அவர்கள், மிகவும் பாரதூரமானவும் , ஆழமானதுமான இவ்விவகாரத்தினை, சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய உடனடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் யூன்26ம் நாள் செவ்வாய்கிழமை, தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்டும் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டங்களுக்கு உந்துசகத்தியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்று, புலம்பெயர் நாடுகளில் அணிதிரளவேண்டுமென உலகத் தமிழர் பேரவை சார்பாக கேட்டுக்கொண்டுள்ளார்.

Wednesday, March 21, 2012

கேணல் ரமேஷ் கொலை: புதிய புகைப்படங்கள் வெளியானது !

கேணல் ரமேஷ் இலங்கை இராணுவத்திடம் 2009ம் ஆண்டு மே மாதம் சரணடைந்தார். அவரை இலங்கை இராணுவம் விசாரணை செய்யும் வீடியோக் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந் நிலையில், புலிகளின் மூத்த தளபதியான கேணல் ரமேஷ் அவர்கள் தலையில் அடித்துக் கொல்லப்பட்ட மேலதிகப் புகைப்படங்கள் கிடைத்துள்ளது. ரமேஷ் உடலத்தில் தலையிலும் இடதுபக்க கைகளிலும் கடுமையா ரத்தம் காணப்படுவது இப் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

இலங்கை அரச படைகளின் சிப்பாய் ஒருவரால் கொடுக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இப் புகைப்படத்தில், அரச படைகளின் முகங்களும் மறைக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.










காணொளியில் சாதாரண உடையில் இருந்த ரமேசிடம் இரணுவ உடைகளை அணுயுமாறு பலவந்தப்படுத்திய சிறீலங்கா படையினர் அதன் பின்னர் அவரை படுகொலை செய்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ரமேஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறப்புத் தளபதியாக பணியாற்றியிருந்தார். அவர் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார்.

ரமேசிடம் விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா படையினரின் அடையாளங்கள் காணொளியில் தெளிவாக காணப்படுகின்றன.

Sunday, March 18, 2012

தொழர் தியாகு, பேராசிரியர் தீரன், ஊடகவியலாளர் புகழேந்தி ஆகியோருடனான கலந்துரையாடல்

தொழர் தியாகு, பேராசிரியர் தீரன், ஊடகவியலாளர் புகழேந்தி ஆகியோருடனான கலந்துரையாடல்.

Sunday, March 04, 2012

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் போர்க் குற்ற வீடியோ!

இந்தியாவின் புதிய தலைமுறை தொலைக்காட்சி இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு வீடியோ ஒன்றை ஒளிபரப்பு செய்து உள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென அமெரிக்கா போன நாடுகள் வலியுறுத்தி வருகின்ற சூழலில் இவ்வீடியோ ஒளிபரப்பப்பட்டு உள்ளது.

ஐநா முன்றலில் நாளை சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளும் திரண்டுவரவேண்டும் என்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.

இலங்கைத்தீவில் இனிமேலும் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் நிற்கதியாய் நிற்கும் தமிழ் இனத்திற்கு சர்வதேச சமூகம் நீதியான தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தர வேண்டும் என்று ஐநாவிடம் அறைகூவல் விடுப்பதற்காக நாளைய தினம் உலகத்தமிழினம் ஒன்றுகூடுகின்ற ஐநா
முன்றலுக்கு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளும் உணர்வுடன் அணிதிரண்டு வரவேண்டும் என்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இன்று ( 04.03.12 ) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கடந்த ஒரு மாத காலமாக நீதி கேட்டு நடந்த மூவரது நீதிக்கான நடைப்பயணம் நாளை ஐநா முன்றலில் முற்றுப்பெறுகிறது. இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் உலகத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இன்னும் சுதந்திர தாகம் தீரவில்லை என்பதை மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்திற்கு எடுத்துச்சொல்லவும் பெருந்திரளான தமிழர்கள் ஒன்றுகூட உள்ளனர்.

நாம் அறிந்த வகையில் பிரான்ஸிலிருந்து புகையிரதத்திலும், யேர்மனியிலிருந்து பேரூந்துகளிலும், பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் மற்றும் பேரூந்துகளிலும், நெதர்லாந்து, டென்மார்க், இத்தாலி, நோர்வே மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பேரூந்துகளிலும் விமானங்களிலும் பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் திரண்டுவர இருக்கின்றனர்.

தமிழின விடுதலைப்போருக்கும் தாயக செயற்ப்பாடுகளுக்கும் சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் உணர்வுடன் வழங்கிய பேராதரவை வரலாறு என்றுமே மறந்து போகாது இந் நிலையில் நாளைய தினம் ஐநா சபைமுன்றலிற்கு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் திரண்டு வருகைதர வேண்டும் என்று அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 03, 2012

ஐ.நா மனித உரிமைச் சபையில் விவாதப்பொருளான டக்ளஸ் தேவானந்தா !

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கும் முகமாக ஏற்பாடு செய்திருந்த உப மாநாட்டில் விவாதப்பொருளாக, டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாறியதோடு, அன்றைய உபமாநாட்டில் சிறிலங்காவுக்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்திய விடயமாகவும் இது அமைந்து விட்டதென ஜெனீவாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவினால் ஏற்பாடு செய்திருந்த இந்த உபமாநாடு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி மாணிக்கவாசகர் தெரிவிக்கையில், அண்ணளவாக மூன்று மணி நேரம் இடம்பெற்ற இந்த உப மாநாட்டில், 50க்கும் மேற்பட்ட சிறிலங்கா தரப்பு பிரதிநிதிகளும், 20க்கும் மேற்பட்ட தமிழர்களும் உள்ளடகங்களாக, 150 பேர் பங்கெடுத்திருந்ததாக தெரிவித்தார்.




மேலும் அவர் தெரிவிக்கையில்…

சிறிலங்கா அரசாங்கம் நன்கு திட்டமிட்ட வகையில் பல தமிழர்களை இந்த மாநாட்டில் பங்கெடுக்க வைத்திருந்ததோடு, தன்மீதான குற்றச்சாட்டுக்களை திசை திருப்பும் நோக்கில், அவர்கள் ஊடாகவே, குற்றங்களை விடுதலைப்புலிகள் மீது திசைதிருப்ப முனைந்தது.

மாநாட்டின் தொடக்கத்தில், மூன்று முஸ்லிம் அமைச்சர்களை ஒருபுறமும், டக்ளஸ் தேவானந்தாவை மறுபுறமும் என நடுநாயகமாக இருந்த மகிந்த சமரசிங்க அவர்கள், சிறிலங்கா அரசாங்கம் முஸ்லிம்- தமிழர்களை இருபக்கமும் அணைத்துக் கொண்ட இனநல்லிணக்க அரசாங்கம் என தெரிவித்தார்.

தொடர்ந்து, 2009 ஆண்டு போரின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு, பொறுப்புக்கூறுவதில் இருந்து சிறிலங்கா தவறிவிட்டது என்ற அழுத்தம் சர்வதேசத்தினால் சிறிலங்கா அரசாங்கம் மீது முன்நிறுத்தப்படும் நிலையில், 2009க்கு முந்திய போர் காலத்துக்கு சென்று, குற்றச்சாட்டுக்களை விடுதலைப் புலிகள் மீது சுமத்துதிலேயே சிறிலங்கா இலக்காக இருந்தது.

நல்லிணக்க ஆணைகுழு அறிக்கையின் பக்கம் விவாதம் திரும்பிய போது, ஒட்டுக்குழுவொன்றின் ஆயுததாரித் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை இங்கு கூட்டி வைத்துக் கொண்டு, நீங்கள் நல்லிணக்க ஆணைக்குழு பற்றி கதைப்பது எந்த அடிப்படையில் என புலம்பெயர் அமைப்பு பிரதிநிதிகளால் கேள்வி எழுப்பபட்டபோது, சிறிலங்கா அரச தரப்பினர் பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடினர்.

இந்தக் கேள்விகளுக்கு இந்த உப மாநாட்டை சூடுபிடிக்க வைத்ததோடு தொடர்சியாக பல மனித உரிமை அமைப்புக்களினாலும் வேறுபலராலும் முன்னிறுத்தப்பட்ட கேள்விகளுக்கு ஒருபதட்டத்துடன் பதில்களைக் கூறிவிட்டு சிறிலங்கா தரப்பினர் கலைந்து சென்றனர் என தெரிவித்தார்.

Monday, February 27, 2012

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !

இதுவரை தாம் பல வேற்றுக்கிரக மனுதனர்களைக் கண்டதாகவும், அவர்கள் பறக்க பாவிக்கும் விமானங்களையும் தாம் கண்டதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். பல வீடியோக்களும் வெளியாகியுள்ளது. இருப்பினும் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ உலகையே அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. இக் காணொளியானது உண்மையாகப் படமெடுக்கப்பட்டது என அதனைப் பகுப்பாய்வுசெய்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இனி முடிவை நீங்களே எடுங்கள்.

Thursday, February 23, 2012

தமிழர் படையை கண்டு சிங்களம் சிதறி ஓடட்டும் 05.03.2012 அன்று ஜெனிவா நோக்கி படையெடுப்போம் வாருங்கள்

அணியணியாய் திரண்டு சிங்களத்தின் முகத்திரையை ஜெனிவாவில் கிழிப்போம் அலைகடலென பொங்கி வாருங்கள். உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன்

Thursday, January 12, 2012

நெடுந்தீவில் பல பொண்டாட்டிகளை வைத்துள்ள டக்ளஸ்! ( காணொளி இணைப்பு )

நெடுந்தீவுப் பகுதிகளில் பல மனைவிமார்களை வைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பாராமன்றில் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் விஜயகலா எம்.பி.

பாராளுமன்றத்தில் முழங்கிய விஜயகலா எம்.பி., மகேஸ்வரனைக் கொன்றது முதல் தென்மராட்சிப் பகுதியில் கொலை செய்தது வரை எல்லாமே நீங்கள்தான் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது சொற்தாக்குதல் நடத்தியுள்ளார்.

இவரின் துணிகரப் பேச்சினால் பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் கரகோஷம் எழுப்பியதுடன், டக்ளஸ் தேவானந்தாவின் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.

இதனால் கிழந்தது டக்ளஸி்ன் முகமூடி.

Thursday, December 01, 2011

Sunday, November 27, 2011

தமிழ்ஈழத்தில் மிக விரைவில் புலிக்கொடி பறக்கும் இந்நாளில் தமிழர்கள் உறதி ஏற்போம் – புலவர் புலமை பித்தன் (Video in)

தமிழீழத் தேசியத் தலைவருக்கு புலவர் புலமை பித்தன்அவர்களின் வாழ்த்து மற்றும் மாவீரர் நாள் சூளுரை .


Monday, November 21, 2011

முன்னாள் விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பிலான காணொளி ஆவணம்: அல்ஜசீரா தயாரிப்பு.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதத்துடன் முடிவிற்கு வந்த பின்னர் நாடு புதிய சுற்றுலாப் பயணிகளையும் வர்த்தகர்களையும் கவர்ந்திழுத்து வருகின்றது. ஆனால் இலங்கையின் சமூகங்கள் முன்பைவிடவும் மேலும் பிரிவினையாகியிருப்பது போலத் தோன்றுவதால் இன்னொரு பிரச்சினை தோன்றக் கூடிய அபாயம் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளியேறி தமது வீடுகளுக்குத் திரும்புகையில் தமது வாழ்க்கையில் இராணுவத்தின் நுழைவு இன்னமும் தொடர்ந்திருப்பதைக் காண்கின்றார்கள் என அல்ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.




இதேவேளை போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்குக்கு கிடையாது என கூறுபவர்களால் போரின் இறுதிக்கால கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க அதிகாரம் கிடையாதென விமர்சிக்கப்பட்டும் வருகின்றது.

இந்த அறிக்கை நேற்று ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் 'இலங்கை இணைகின்றது' போன்ற குழுக்கள் நாட்டிற்கு நல்லதொரு எதிர்காலம் உள்ளதென்றே பார்க்கின்றனர்.

இந்த இளையோர் அமைப்பு இலங்கை முழுவதும் பயணித்து இனக்குழுக்களிடையே ஒற்றுமையையும் சமாதானத்தையும் தூண்டும் நகர்வுகளைச் செய்துவருகின்றன. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் அனேகமானவர்கள் விடுதலை செய்யப்பட்டள்ளனர் என அரசு தெரிவித்து வருகிறது. அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு சுமூகமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அல்ஜசீரா, முன்னாள் விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பிலான காணொளி ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது. அக் காணொளி இங்க தரப்படுகிறது. இலங்கை போரிற்குப் பின்னதான கசப்பான இனப் பிரிவினையை மாற்ற என்ன தான் வழி ?

Friday, June 17, 2011

பிரித்தானியாவின் கரங்களிலும் தமிழரின் இரத்தம்! பிரித்தானிய நாடாளுமன்றில் தெரிவிப்பு

அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை திருப்பியனுப்புவதன் மூலம் எமது கரங்களிலும் தமிழரின் இரத்தத்தினை வழிந்தோட விடப்போகின்றோமா என்று பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Siobhain McDonagh நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து தமிழர்கள் சிலர் பிரத்தியேகமாக அமர்த்தப்பட்ட தனியார் வானூர்தியில் இன்று திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்கள் தமது சொந்த இடங்களை சென்றடைவார்களா என்பது பற்றி தெரியாது.

இதனைவிட மிக மோசமாக செயற்பாடு என்னவெனில் இவர்களில் சிலரது இரகசிய ஆவணங்களை பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவரமைப்பும், குடிவரவுத் திணைக்களமும் இலங்கைத் தூதரகத்துடன் பரிமாற்றம் செய்திருக்கின்றன.

என்னைப் பொறுத்தளவில் இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்புப் பிரச்சினை இருக்கின்றது. இது தொடர்பாக ஆதாரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள நிலையிலும், இவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இலங்கைக்கு திரும்பிச் செல்லும் தமிழ் அகதிகள் அங்கே கைது மற்றும் வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவார்கள் எனத் தெரிந்து கொண்டும் பிரித்தானிய அரசாங்கம் நேற்று 40 தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது.



எனவே, மதிப்பிற்குரிய துணை சபாநாயகர் அவர்களே, தமிழர்களை திருப்பி அனுப்புவது பற்றி பிரித்தானிய நாடாளுமன்றம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

திருப்பி அனுப்பாது தடுக்கப்போகின்றோமா அல்லது எமது கரங்களிலும் தமிழ் இரத்தத்தினை வழிந்தோட விடப்போகின்றோமா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

திருப்பி அனுப்பப்படும் தமிழ் அகதிகள் இலங்கை அரசாங்கத்தால் துன்புறுத்தப்படும் சில சம்பவங்களை அனைத்துலக மன்னிப்புச்சபையானது அடையாளம் கண்டுள்ளதால் பிரித்தானியாவிடம் அரசியல் தஞ்சம் கோரி நின்ற இலங்கைத் தமிழர்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களிற்குத் திருப்பி அனுப்பப்படக் கூடாது என மன்னிப்புச் சபை மீண்டும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

பொது நலவாய அமைப்பில் முக்கிய பங்காற்றும் பிரித்தானியா, அரசியல் தஞ்சம் கோரி பிரிட்டனில் அடைக்கலம் புகுந்திருந்த தமிழ் மக்கள் விடயத்தில் தனது கண்களை இறுக மூடிக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

Thursday, April 28, 2011

சிறீலங்கா இராணுவத்தால் கேணல் ரமேஸ் கோரமாகப் படுகொலை – புதிய ஆதாரம்

ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரின் ஏற்பாட்டில் சிறீலங்கா இராணுவத்தின் 58 ஆவது படையணியிடம் சரணடடைந்த விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதி கேணல் ரமேஸ் சிறீலங்கா இராணுவத்தால் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நெற் இணையத்தளம் புதிய ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.

ரமேஸ் இடம் சிறீலங்கா இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொள்ளும் காணொளிகள் வெளியாகிய நிலையில் தற்போது அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



கடந்த 2009 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் சிறீலங்கா இராணுவத்தினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா (18.08.1964) என ரமேசின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

காணொளியில் சாதாரண உடையில் இருந்த ரமேசிடம் இரணுவ உடைகளை அணுயுமாறு பலவந்தப்படுத்திய சிறீலங்கா படையினர் அதன் பின்னர் அவரை படுகொலை செய்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ரமேஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறப்புத் தளபதியாக பணியாற்றியிருந்தார். அவர் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார்.

ரமேசிடம் விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா படையினரின் அடையாளங்கள் காணொளியில் தெளிவாக காணப்படுகின்றன.

இதனிடையே, விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளாராக கடமையாற்றிய ரமேஸ் என அழைக்கப்படும் இளங்கோவும் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் நடேசனுடன் சரணடைந்திருந்தார். ஆனால் அவரின் நிலை என்ன என தெரியவில்லை.

இளங்கோ சரணடைந்ததை சிறீலங்காவின் அதிகாரி பாலிதா கோகன்னா உறுதிப்படுத்தியிருந்தார்.

Sunday, April 17, 2011

சனல் 4 செய்தியாளர் சமீபத்தில் இலங்கை சென்று ஆதாரங்களை திரட்டியுள்ளார் !



தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதாக அது மேலும் தெரிவித்துள்ளது. அத்தோடு சர்வதேச சுயாதீன ஆணைக்குழு ஒன்று விசாரணை நடத்தவேண்டும் எனவும் சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் பட்ட இன்னல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் முதன்மை ஊடகமாக சனல் 4 தொலைக்காட்சி விளங்குகிறது. இதற்கு தமிழர்கள் அனைவரும் என்றுமே நன்றிக்கடன் பட்டவர்களா இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

சேர்பியாவை ஒத்த படுகொலைகள் இலங்கையில் நிகழ்ந்துள்ளதாக கோடன் வைஸ் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சியில் இன்று நடைபெற்ற செய்திநேரத்தில் மேற்படி கருத்துக்களை முன்வைத்துள்ளார் இலங்கைக்கான முன்நாள் ஐ.நா பேச்சாளர். பொஸ்னியாவில் சேர்பியர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டது போல இலங்கையிலும், இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வகை தொகை இன்றி கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள கோடன் வைஸ், அப் பகுதியில் நடைபெறும் கொலைகளை யாரும் பார்க்கக்கூடாது என இலங்கை அரசு முன்னரே திட்டமிட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

லிப்பியா மீது உடனடி நடவடிக்கை எடுத்த ஐ.நா ஏன் இலங்கையில் போர் நடைபெற்றவேளை அதனைப் பாராமுகமாக இருந்தது எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த கோடன் வைஸ் , சீனாவும் இந்தியாவும் சேர்ந்து இலங்கையைக் காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்ததற்கு சீனாவும், இந்தியாவும் பதில் கூறவேண்டி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் ரஜபட்க்ஷ குடும்பத்தினரே போர் குற்றவாளிகள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஐ.நா வின் அறிக்கை வெளியான நாள் தொடக்கம், தனது செய்தி நேரங்களில் எல்லாம் இலங்கையில் இறந்த மக்களைக் குறித்து மேற்குலக மக்களுக்கு தெளிவுபடுத்திவரும் சனல் 4 தொலைக்காட்சிக்கு அனைத்துத் தமிழர்களும் கடமைப்பட்டுள்ளனர்.

சனல் 4 தொலைக்காட்சி தற்போது கொடுத்துவரும் அழுத்தம் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது எனவும் அறியப்படுகிறது.

Thursday, April 14, 2011

இலங்கை இராணுவமே எனது மகனைக் கொன்றது! டாக்டர் மனோகரன் - சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய வீடியோ

2006 ம் ஆண்டு திருகோணமலையில் கொல்லப்பட்ட 5 மாணவர்களுள் ஒருவரின் தந்தையான டாக்டர். மனோகரன் தனது மகனை இலங்கை இராணுவமே சுட்டுக் கொன்றது எனத் தெரிவித்துள்ளார்.

இவர் நீதி வேண்டி சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆதரவுடன் பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றார்.

இந்தக் கொலைக்கான நியாயம் தனக்கு கிடைக்கும் வரை இலங்கை அரசுக்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றனவா என்பது பற்றி ஐ.நா.செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் டொக்டர். மனோகரனின் கூற்று பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
திருமலையில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மாணவர்கள் மீதான படுகொலைக்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்து 55,000 மக்களின் கையெழுத்துக்களை பெற்றுக்கொண்ட டாக்டர் மனோகரன் அதனையும் ஐ.நாவில் சமர்ப்பித்திருந்தார்.

சிறீலங்காவில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், பல ஆயிரம் மக்கள் காணாமல் போயுள்ளனர். ஆனால் அங்கு தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை என அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறீலங்கா தொடர்பான பிரதிநிதி ஜோலந்தா போஸ்ரர் தெரிவித்துள்ளார்.

Friday, April 08, 2011

தளபதி ரமேஸ் அவர்களை விசாரிக்கும் சிங்கள இராணுவம் அடுத்த கானொளி வெளியானது!

தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான தளபதி ரமேஸ் அவர்களை சிங்கள இராணுவம் விசாரிக்கும் கானொளி ஒன்று ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அடுத்த கானொளி வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கானொளியில் தளபதி ரமேஸ் அவர்களை இராணுவம் படகு ஒன்றில் அழைத்துச் செல்வதாக தெரிகின்றது. அவ்வாறு அழைத்துச் செல்லும் போதே அவர் சில இராணுவத்தினரால் விசாரிக்கப்படுகின்றார்.

சிங்கள இராணுத்திடம் பிடிபட்ட பல தமிழீழ விடுதலைப்புலிகளிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள் தலைவர் மற்றும் குடும்பத்தினர் எங்கே என்பதுதான் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது அப்படி எவரையும் விசாரிக்கவில்லை என மறுத்திருந்தது சிங்கள அரசும் இராணுவமும் ஆனால் தற்போது அது அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போதை முதலாவது கேள்வி தளபதி ரமேஸ் அவர்கள் எங்கே?

Saturday, March 26, 2011

காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !

நாம் தமிழர் சார்பாக காங்கிரசுக்கு எதிராக காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நடக்கும் சட்டமன்றத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும், எதற்காக மாற்றம் வேண்டும் என இக் காணொளி மிகத் துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை இக் காணொளி நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Wednesday, March 23, 2011

ஐநா சபை தமிழர்கள் படுகொலை செய்யபட்டமையை தடுக்கத் தவறிவிட்டது! ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி உரை

இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் வெளிக்காட்டவில்லை என ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின்கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா குற்றஞ்சாட்டினார்.
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 16வது கூட்டத் தொடரில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளான சுகிந்தன் முருகையா, ஜனர்தனன் புலேந்திரன்(சந்தோஸ்), சிறிசஜீதா சிவராஜா ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.

22 மார்ச் 2011 - செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொதுநிலவரங்களுக்கான பிரிவில், தமிழர் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா ஆற்றிய உரையில், ஆயதப்போர்கள் இடம்பெறும் சுழல்களில், பெரும் இனப்படுகொலைகள் இடம்பெறும் வாய்ப்புக்கள் உள்ளது பற்றி, சர்வதேச சமூகம் விழிப்புடன் இருத்தல் வேண்டும் எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே, முன்னாள் ஐநா பொதுச்செயலாளர் கொபி அனன் ஆலோசனை கூறியிருந்த போதும், பல்வேறு ஆயதப் போர்ச்சூழல்களில் பொதுமக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலைமை, கவனிப்பாக கையாளப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.



இலங்கைத் தீவில் இடம்பெற்ற போரினை, அதற்கான உதாரணமாக முன்வைத்த சிறிசஜீதா சிவராஜா அவர்கள், தொடர்ந்து தனதுரையில், தமிழர் தாயகப் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மையங்கள், தாக்கி அழிக்கப்பட்டு 100000 மேற்பட்ட மக்கள் போரின் இறுதி வாரத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. 40000 மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐநா அதிகாரிகளே சொல்லியிருந்த போதும், ஐநா அமைதி காத்துள்ளது.

இன்று செயலாளர் நாயகத்தின் சிறப்புக் குழு போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று கூறுகின்றது என்றும், நேரிடையான முறையில் ஐநாவின் அன்றைய செயலற்றதன்மையை தமிழ் பிரதிநிதி எடுத்துரைத்தார்.

இன்று தமிழ்மக்களின் நிலைமை போர்க்காலத்திலும் பார்க்க மோசமாகவுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய தமிழர் பிரதிநிதி, சிங்கள அரசு, உலகம் முழுவதும் பயணம் செய்து, புலம்பெயர்ந்த தமிழ்சமூகத்தினை குற்றஞ்சாட்டுவதிலும், அவர்களது சனநாயக நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதிலும், கவனம் செலுத்துகின்றது என்றும் நாடுகடந்த அரசு பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா சுட்டிக்காட்டினார்;.

உலகசமூகம், தமிழ்மக்களிற்கு உதவிடும் என நம்பிக்கையை வெளியிட்ட தமிழர் பிரதிநிதி, ஐநாவின் இனத்துவேசத்திற்கு எதிரான சிறப்புப்பிரதிநிதியும் சிறீலங்காவின் நடவடிக்கைகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோளை விடுத்தார்.

இறுதியாக, உலக நாடுகள், புலம்பெயர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் உரையாடல்களை நிகழ்த்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
கடந்தாண்டு 15வது மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடரிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.