Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Sunday, February 06, 2011

ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.

ஒன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

கணினி பயன்படுத்தும் அனைவரும் விரும்பும் பொதுவான ஒன்று நாம் கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகரிக்க வேண்டும் என்பது தான்.

டைப்ரைட்டிங் வகுப்புக்கு கூட செல்ல நேரம் இருக்காது இந்தநிலையில் நாம் ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவத்தான் இந்தத்தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.keybr.com

இந்தத் தளத்திற்கு சென்றவுடன் முகப்பிலேயே டைப்ரைட்டிங் கீபோர்டு தெரியும். இதில் நாம் தட்டச்சு செய்யும் வேகத்தை மட்டும் கொடுத்து விட்டு Type செய்ய தொடங்கலாம். ஒவ்வொரு எழுத்தாக மேலே கொடுக்க நாம் தட்டச்சு செய்ய வேண்டியது தான்.



தினமும் சராசரியாக 1 மணி நேரம் செலவு செய்தால் 40 நாட்களுக்குள் நாம் கணினியில் தட்டச்சு செய்வதில் வல்லவர்கள் ஆகலாம். முதலில் வேகம் குறைவாக தட்டச்சு செய்ய ஆரம்பித்து அதன் பின் நாட்கள் செல்ல செல்ல நாம் தட்டச்சு செய்யும் வேகத்தை கூட்டலாம்.

தட்டச்சு பழக விரும்பும் அனைவருக்கும் இந்தச் செய்தி பயனுள்ளதாக இருக்கும்.

Monday, November 22, 2010

ஆயுளை 10 வருடங்கள்வரை அதிகரிக்கும் மருந்துவில்லை

மனித ஆயுளை சுமார் 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய மருந்துவில்லையைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்னும் ஆய்வு நிலையில் உள்ள இந்த மருந்து விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

முதுமையைத் தடுத்து மனிதனின் ஆயுளை நீடிப்பதற்கான வழிமுறைகள் பற்றி அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றனர்.

' செர்டுயின் ' என்ற ஜீனே முதுமையை கட்டுப்படுத்துகின்றது. இதனைத் தூண்டும் மருந்தினையே ஆராய்ச்சியாளர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.

ஒரு மாத்திரையை உட்கொள்ளும் போது, வயதானாலும் நினைவாற்றல் குறையாது, உடல் உறுப்புகள் தளராது, மாரடைப்பு ஏற்படாது என ஆய்வில் தெரிவிக்கப்படுகின்றது.

விலங்குகள் மற்றும் மனிதர்களிடமும் இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை எந்த பக்கவிளைவுகளையும் இது ஏற்படுத்தவில்லை.

ஆனால் ஆயுளை மேலும், மேலும் நீடிக்க இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் பின்விளைவுகள் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.