சிறிலங்காவுக்கு மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களுக்கும் பெரும் சவால்கள் நிறைந்த போர்க் களமாக மாறிவரும் ஜெனிவா!
ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை அச்சம்! - ஜீ.எல் பீரிஸ் தலைமையில் குழுவொன்று அமெரிக்கா செல்லத்தயார்!
இந்தியாவுக்கு வரும் எங்களது உறவுகள் - அமைச்சர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! மைத்துனர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் ஜெயலலிதாவிடம் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள்.
| 64 வருடங்களுக்கு முன்னர் ஈழத் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட கொடிய நிகழ்வின் காரணமாக
வேதனைச் சிலுவைகளை இப்போதும் சுமக்கிறார்கள். 64 வருடங்களுக்கு முன்னர் சிங்களர்கள்
ஏமாற்றமாட்டார்கள் என்று நம்பிய தமிழர்களால் நாங்கள் புதை குழிக்குள் செல்லக்
காரணமான துயர நாளான பெப்ரவரி 04 மீண்டும் வருகின்றது. |
| இலங்கைத் தீவின் சுதந்திரத்தை பிரித்தானியா 1948 பெப்ரவரி 04 இல் சிங்களத்திடம்
கையளித்தபோது எங்கள் தலைவர்கள் வெள்ளையனே வெளியேறு என்ற காந்தியின் கைத்தடியின்
பின்னே அணிவகுத்து நின்றிருந்த காரணத்தால் எங்கள் இனம் புதைகுழியில்
மாட்டிக்கொண்டது. ஆனாலும், காந்தியமும் எங்களைக் கரைசேர்க்க வரவில்லை. அதற்கான விலையை இன்றும் எம் இனம் செலுத்துகின்றது. இரத்தம் சிந்துகின்றது, உயிர்களை விலையாகத் தருகின்றது. சிங்களத்தின் இன அழிப்பு இன்னும் வேகமாக, இன்னும் மோசமாக இப்போதும் தொடர்கின்றது. இராணுவ ஆக்கிரமிப்பால் தமிழினம் விழிபிதுங்கி நிற்கிறது. புலிக்கொடி பறந்த வன்னி மண்ணில் சிங்களப் பேரினவாதத்தின் சிங்கக் கொடி பறக்கின்றது. வீர வேங்கைகள் கால் படர்ந்த ஈழ மண்ணில் கொடிய சிங்களவன் நிலம் அதிர நடக்கின்றான். வரலாறு திரும்பும், எமது மண்ணில் மீண்டும் கார்த்திகைப் பூக்கள் மலரும். செண்பகங்கள் பறக்கும். வாகைகள் பூச் சொரியும். நாளை தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய பொழுதை எமக்கானதாக்கப் போராடுவோம். எங்கள் மண்ணில் சிந்திய இரத்தம் வீணாகிப் போய்விடாது. எங்கள் மண்ணில் சாய்ந்த புலிகளது இலட்சியம் கனவாகிப் போய்விடக் கூடாது. அங்கே வீழ்ந்த ஒவ்வொருவருமாக நாங்கள் இங்கே எழுவோம்! எங்களுக்கான நீதிக்காய் நாங்கள் ஒன்றாய் எழுவோம்! முள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் விடுதலைத் தேரை வேகம் கொண்டு முன் நகர்த்துவோம்! வாருங்கள் எம் உறவுகளே! பெப்ரவரி 04 இல் எமக்கான சுதந்திரத்தைக் கோரி, இந்த உலகத்துடன் போர் தொடுப்போம்! எம்மிடம் பறிக்கப்பட்ட எமது மண்ணை மீட்க ஒன்றாகப் போராடுவோம். தமிழீழ மக்கள் பேரவை - பிரான்ஸ் |
கிருஷ்ணாவின் இலங்கை பயணத்தால் எதுவித மாற்றங்களும் நிகழப் போவதில்லை - உலகை ஏமாற்றுவதற்கான போலி நாடகமாகும்: வைகோ பரபரப்பான குற்றச்சாட்டு!
13வது திருத்தம் பற்றி கலந்துரையாடல் மட்டுமே நடத்தினேன் - இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லையே: மகிந்த ராஜபக்ச பல்டி.
|
13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு
காணப்போவதாக இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா
அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா,
அண்மையில் கொழும்பு வந்து சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, 13வது
திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக மகிந்த ராஜபக்ச தம்மிடம்
வாக்குறுதி அளித்துள்ளதாக கூறியிருந்தார். |
| அந்தக் கருத்தையே சிறிலங்கா அதிபர் நேற்று நிராகரித்துள்ளார்: இந்தியாவுக்கு தாம் இத்தகைய வாக்குறுதியைக் கொடுக்கவில்லை என்றும், இந்தியாவுடன் இதுபற்றிக் கலந்துரையாடல் மட்டுமே நடத்தியுள்ளதாகவும், நேற்று அலரி மாளிகையில் ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த போது கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ் ஊடகங்களையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபர் "நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால், அந்தக் குழு எடுக்கும் தீர்மானத்திற்கு தாமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது. விடுதலைப் புலிகள் நிபந்தனைகளை முன்வைத்தே முன்பு அரசாங்கத் தரப்பினருடன் பேச்சுக்களில் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதே போக்கில் நிபந்தனைகளை முன்வைக்காமல் அரசாங்கத் தரப்பினரும் பேச்சுக்களைமுன்னெடுக்க வேண்டும். சம்பிக்க ரணவக்கவின் ஹெல உறுமய கட்சியும், விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் 13 திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு குறித்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு குறித்தும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும் இவ்விரு கட்சிகளும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பலர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப்பது மேயாகும். அதற்கு நானும் என்னுடைய அரசாங்கமும் ஒரு போதுமே இடமளிக்கப் போவதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும், பிரிவினைவாதக் கொள்கையை பின்னணியில் வைத்துக் கொண்டே காவல்துறை அதிகாரம், காணி அதிகாரம் ஆகிய அவசியம் என்று கேட்டு வருகின்ற போதிலும, வட பகுதியில் உள்ள மக்களும், இளைஞர்களும் அதைப் பற்றி கவலைப்படவே இல்லை. அவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி வசதி ஆகியனவே தேவையென்று எங்களிடம் கேட்கிறார்கள். இந்நாட்டில் அமைதியும், சமாதானமும் நிலைத்திருக்க வேண்டும். 30 ஆண்டு காலம் யுத்தத்தை நடத்தி ஏற்பட்ட மனித மற்றும் சொத்துக்களின் அழிவு போதாதா? நாம் தொடர்ந்தும் யுத்தம் செய்து கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதனையும் எதிர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஒவ்வொரு சந்திப்பிலும் ஏதாவது ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்து, பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்கிறது. அவர்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகித்து, தங்கள் யோசனைகளை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்த ஏனைய உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுவதுதான் நல்லது. தமிழ் தேசிய கூட்டமைப்பும், விடுதலைப் புலிகளைப் போன்று பேச்சு மேசையில் இருந்து அடிக்கடி தன்னிச்சையாக வெளியேறுகின்றனர். இந்தத் தடவையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுக்களில் இருந்து வெளியேறிய போதும், நாம் எமது நல்லெண்ணத்தை காட்டும் முகமாக மீண்டும் பேச்சுக்கு அழைத்தோம். அவர்களை எப்படியாவது நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தங்கள் பிரதிநிதிகளை முன்மொழியச் செய்வதற்கு இணங்க வைப்பதற்காகவே இந்த பேச்சுக்களை நடத்துகிறோம். செனட் சபை உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் இறுதித் தீர்வை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடமே இருக்கின்றது. நாடாளுமன்ற தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்தால் செனட் சபை ஒன்றை ஏற்படுத்துவது சாத்தியமாகும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் நாங்கள் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக பணிகளை செய்கிறோம். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் அமைச்சரவை குழுவொன்றை அமைத்து, இந்த யோசனைகளை எவ்விதம் சுமுகமாக நிறைவேற்றுவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. ஆணைக்குழு தெரிவித்த சில குற்றமிழைப்பு சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருக்கின்றனவா என்பதை அவதானிக்கும் பொறுப்பு இப்போது சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சட்டமா அதிபர் திணைக்களம் அவற்றை நன்கு ஆராய்ந்து சம்பந்ப்பட்டவர்களை தண்டிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிறைவேற்ற தவறிவருவதாக சில வெளிநாட்டு சக்திகள் எங்களை கண்டிக்கின்றன. அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் 24பேரை கொலை செய்த வழக்கு 7 வருடங்களுக்கு பின்னர் தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதைப்பற்றி யாரும் பெரிதுபடுத்தி பேசுகிறார்களா? அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது என்று சில ஊடகங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் சரியல்ல. சகல கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சேர்ந்து கொண்டு, பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம். 13 திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதை நாம் எதிர்க்கவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணாவிடம் இந்தத் தடவை கூறியதை ஏற்கனவே புதுடில்லியில் நடந்த அரச தலைவர்கள் சந்திப்பிலும் தெரிவித்திருந்தேன். இது ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. இந்நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சினைக்கு விடை காணும் விடயத்தில் பங்காளிகளாக இருக்க வேண்டும். அதனால் தான் அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு நல்ல முடிவை எடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது. 13 திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு பற்றிய எனது நிலைப்பாட்டை இங்கு பகிரங்கப்படுத்தினால் அதை வைத்து ஊடகங்கள் எனக்கு எதிராக எழுதி நாட்டில் பிரச்சினையை உருவாக்க எத்தனிக்கும். நாட்டின் அதிபராக இருந்தாலும் இது மக்களுடைய பிரச்சினையாக இருந்து வருவதனால், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு ஒருமனதான முடிவை எடுப்பது அவசியம். நாடாளுமன்றத் தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் நான் ஆதரித்து நடைமுறைப்படுத்துவேன். இது விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். மக்களின் அங்கீகாரத்துடனேயே இந்தத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் விரும்பாத ஒரு தீர்வை ஏற்படுத்தி, நாம் அதனை நடைமுறைப்படுத்துவது முடியாத காரியம். நிச்சயமாக மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை கொடுக்க முடியாது. அப்படி காவல்துறை அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பெந்தர பாலத்தைக் கடந்து தென்னிலங்கைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகும். காணி விடயத்தில் பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ள சட்டங்களே தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றது. அது பிரச்சினைக் குரிய விடயமல்ல. அரசாங்கத்தின் தலைவன் என்ற முறையில் அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தக் கூடிய யதார்த்தபூர்வமான விடயங்களையே நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியுமே ஒழிய நடைமுறைப்படுத்த முடியாத சிக்கலான காவல்துறை அதிகாரங்களை வழங்குவது பற்றிய யோசனைகளை ஏற்றுக் கொள்வது சாத்தியமல்ல. ஊடகவியலாளர்கள் அநாவசியமான விடயங்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். உள்நாட்டு பிரச்சினையை அனைத்துலக மயப்படுத்தி தேசத்திற்கு அபகீர்த்தியையும், பிரச்சினைகளை உண்டு பண்ணுவதையும் ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம், 13 வது திருத்துக்கு அப்பாற்பட்ட திருத்தம் போன்ற விடயங்களில் ஊடகவியலாளர்கள் நடுநிலையில் இருந்து பக்கச்சார்பற்ற முறையில் சரி பிழைகளை புரிந்து கொண்டு தங்கள் ஊடகங்களில் கருத்துக்களை எழுதினால் இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும். சில தமிழ் நாளிதழ்கள் இனவாதக் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன. ஊடகங்கள் தங்கள் கடமையை நடு நிலையுடன் சிந்தித்து செயற்படுத்துவது அவசியம். சிலர் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக தவறான அரச எதிர்ப்பு பரப்புரைகளை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் செய்து வருகின்றனர். இது உண்மையில் நாட்டுக்கே தீங்கிழைக்கிறது. தேர்தல் காலத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான பரப்புரைகளை செய்து அதில் வெற்றி காணலாம். அதை விடுத்து இப்போது நாட்டுக்கு தீங்கிழைப்பது நல்லதல்ல. என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். |
|
அபோதாபாத் உள்ள வீடுகளில் மருத்துவர்களை வைத்து தடுப்பூசிகளைப் போட வைத்த
அமெரிக்க உளவு அமைப்பு, இரத்த மாதிரிகளை மரபணுச்சோதனை நடத்தி அங்கிருப்பது ஒசாமா
பின் லேடன் தான் என்பதை உறுதி செய்த பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க
பாதுகாப்புத்துறை செயலாளர் லியோன் பெனட்டா சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த
நேர்காணலில் இந்த இரகசியத்தை வெளியிட்டுள்ளார். |
| பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ள மருத்துவர் ஷகீல் அப்ரிதி தான் ஒசாமா பின்லேடன்
குறித்த இரத்த மாதிரிகளை சேகரிப்பதற்கு அமெரிக்காவுக்கு உதவியதாகவும் அவர்
ஒப்புக்கொண்டுள்ளார். அபோதாபாத் வீட்டில் தங்கியிருப்பது ஒசாமா தான் என்பதை உறுதி செய்ய அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் டாக்டர் ஷகீல் அப்ரிதி தலைமையிலான மருத்துவர்களை வைத்து அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தடுப்பூசிகள் போட வைத்தது. அவர்கள் தடுப்பூசி போடுவது போலச் சென்று வீடுகளில் இருந்தவர்களின் இரத்த மாதிரிகளை எடுத்து வந்தனர். அந்த இரத்த மாதிரிகளில் சிஐஏ மரபணுச் சோதனை நடத்தியது. அப்போது ஒரு இரத்த மாதிரி ஓசாமாவுடையது என்பது உறுதியானது. இதை வைத்தே அந்த வீட்டில் ஒசாமா பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருத்துவர் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டி கைது செய்திருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன் என்றும் பெனட்டா அதில் தெரிவித்துள்ளார். இருப்பினும் அபோதாபாத் வளாகத்தில் ஒசாமா தங்கியிருந்தது பற்றி பாகிஸ்தானுக்கு முன்பே தெரியுமா என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்றும் பெனட்டா தெரிவித்துள்ளார். இதனிடையே அப்ரிதியை விடுவித்து அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம் அப்ரிதி விவகாரத்தில் சுமூகத் தீவு காண முடியும் என்று பாகிஸ்தான் நம்புவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
ஐரோப்பிய பாராளுமன்றத்தில்(05 .02 .2012 ) இருந்து ஐ. நா (05.03 .2012 ) வரைக்கும்
நடைபயணம் :
எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது.
சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்களை தனது அனுசரணையாளர்களாக மாற்றியது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் எம் போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு முகம் கொடுத்தும் உறுதி தளராமல் தடம் பிரலாமல் இன்றுவரை தொடர்கின்றது .
2009 ஆண்டு மே மாத நடுப்பகுதியில் எமது விடுதலை வீரர்களையும் மற்றும் 3 இட்சத்திற்கும் மேலான எமது உறவுகளையும் குறிகிய நிலப்பரப்பில் அடைக்கப்பட்டு , உயிரா அல்லது விடுதலையா என்று சிங்களத்தாலும் அத்தோடு உலகத்தாலும் கேக்கப்பட்ட பொழுது தமது விடுதலை தான் வேணும் என்று தமது உயிர்களை கொடுத்தார்கள் எமது மாவீரர்களும் மக்களும். நிலத்தில் போராட்டம் மௌனித்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர் மக்கள தொடர்ந்து ஏந்தி செல்கிறார்கள் .
முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத புலம்பெயர் தமிழர்களின் கண்டன பேரணிகளும், நீதி வேண்டிய உண்ணாநோன்பு விரதங்களும், வீதிமறிப்பு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் உலகம் பூராகவும் செய்யப்பட்டது. எம் உறவுகள் தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் தம்மை தாமே தீயிலிட்டு அர்ப்பணித்த நிமிடங்களை மறக்க முடியுமா ?
இன்று இரண்டரை ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு மீதான இனப்படுகொலைக்கு எவ்வித நீதியும் எவ்வித அரசியல் தீர்வும் வழங்காத போதிலும் எமது தொடர் போராட்டம் முள்ளிவாய்க்கால் காலத்திலும் விட அதிவேகத்தோடு முன்னெடுக்கப்படவேண்டும்.
உண்மைகள் அழிவதில்லை என்பது போல தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு செய்த போர்குற்ற ஆவணங்கள் வெளிவரும் தருணத்தில் நாம் எமது தொடர்போராட்டத்தை மிக வலுவோடு முன்னெடுக்கவேண்டும் .
நாம் தற்போது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இது மக்கள் சக்தியாக உருமாறி சர்வதேசத்தின் கதவுகளை தட்டி மெல்லத் திறந்துள்ளோம். . இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுட்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதை உலகம் மெல்ல உணர்கின்றது. ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு தொடர்ந்து போராட வேண்டும் . ஒரு தனிமனிதனால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் குறிகிய காலத்தில் தேசிய மக்கள் போராட்டமாக மாறியது. அதே போல் இன்றைய காலத்திலும் பல்வேறு காரணத்தால் மக்கள் பங்களிப்பு அதிகமாக இல்லை என்றாலும் எமது போராட்டம் விரிவடைந்து மிக விரைவில் மக்கள் போராட்டமாக வலுவாகும் காலம் விரைவாகும்.
நிலத்தில் எம் சிவில் சமூக உறவுகள் மற்றும் உயர்கல்வி மாணவர்களும் மக்களும் சிங்கள இனவெறியர்களுக்கும் அவர் தம் கூலிகளுக்கும் எவ்வித அச்சமும் அல்லாமல் நீதியை நிலை நாட்ட முயற்சிப்பது , மானத் தமிழர்கள் மடியவில்லை அடிபணியவில்லை என்று உறுதிப்படுத்துகின்றது .
புலத்தில் பிரித்தானியாவில் இருந்து சிவந்தன் தொடக்கம் சுடர்விட்டு எரியத் தொடங்கிய நீதியின் நடைப்பயணம் ஜெகன் அங்கிள் தொடர்ந்து, டென்மார்க் உணர்வாளர்களிடம் விரிந்து, தமிழக உறவுகளிடம் பரந்து, ஜேர்மன் இளையோர்களின் ஈருருளிப் பயணத்தை அடுத்து மீண்டும் டென்மார்க் உணர்வாளர்களிடம் ஈருருளிப் பயணமாக மாறி தொடர்ந்து சென்ற ஆண்டு யூலை மாதத்தில் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து ஆறு தேசிய உணர்வாளர்கள் மூலம் பாரீஸ் நகரத்தை நோக்கி பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொடர்ந்தது .
இன்று எம் இனத்தின் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துப்பட்டிருக்கும் இனப்படுகொலையிலிருந்து எம்மக்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறுபட்ட அரசியல் போராட்டங்களை நாம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த வகையில் எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையகத்திற்கு எமது மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்படும் படுகொலை தொடர்பாக தீர ஆராய்ந்து அனைத்துலக நீதி மன்றில் விசாரணை நடாத்தி எம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில்(05 .02 .2012 ) இருந்து ஐ. நா (05.03 .2012 ) வரைக்கும் நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இறுதி நாள் அன்று மாபெரும் மக்கள் எழுட்சி நிகழ்வும் நடைபெறும் . அதே நேரத்தில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடர் விடையமாக கடந்த பல வாரங்களாக நாடுகள் வாரியான அரசியல் வேலைத்திட்டங்கள் , மற்றும் அரசியல் சந்திப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
நாங்கள் சிந்தும் துளிகள் இன்று கண்ணீராக இருந்தாலும் நாளை மலரப் போகும் தமிழீழத்துக்கு தண்ணீராக மாறும். தமிழீழம் மீட்கும் வரை எம் மக்கள் விடுதலை பெறும் வரை ஓயாது எம் போராட்டம்.
நீதியின் அடிப்படையில், மனிததர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள். (தேசியத் தலைவரின் சிந்தனைகளில் இருந்து )
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் .
நன்றி
ஈழத்தமிழர் மக்கள் அவை- யேர்மனி
எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது.
சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்களை தனது அனுசரணையாளர்களாக மாற்றியது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் எம் போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு முகம் கொடுத்தும் உறுதி தளராமல் தடம் பிரலாமல் இன்றுவரை தொடர்கின்றது .
2009 ஆண்டு மே மாத நடுப்பகுதியில் எமது விடுதலை வீரர்களையும் மற்றும் 3 இட்சத்திற்கும் மேலான எமது உறவுகளையும் குறிகிய நிலப்பரப்பில் அடைக்கப்பட்டு , உயிரா அல்லது விடுதலையா என்று சிங்களத்தாலும் அத்தோடு உலகத்தாலும் கேக்கப்பட்ட பொழுது தமது விடுதலை தான் வேணும் என்று தமது உயிர்களை கொடுத்தார்கள் எமது மாவீரர்களும் மக்களும். நிலத்தில் போராட்டம் மௌனித்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர் மக்கள தொடர்ந்து ஏந்தி செல்கிறார்கள் .
முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத புலம்பெயர் தமிழர்களின் கண்டன பேரணிகளும், நீதி வேண்டிய உண்ணாநோன்பு விரதங்களும், வீதிமறிப்பு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் உலகம் பூராகவும் செய்யப்பட்டது. எம் உறவுகள் தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் தம்மை தாமே தீயிலிட்டு அர்ப்பணித்த நிமிடங்களை மறக்க முடியுமா ?
இன்று இரண்டரை ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு மீதான இனப்படுகொலைக்கு எவ்வித நீதியும் எவ்வித அரசியல் தீர்வும் வழங்காத போதிலும் எமது தொடர் போராட்டம் முள்ளிவாய்க்கால் காலத்திலும் விட அதிவேகத்தோடு முன்னெடுக்கப்படவேண்டும்.
உண்மைகள் அழிவதில்லை என்பது போல தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு செய்த போர்குற்ற ஆவணங்கள் வெளிவரும் தருணத்தில் நாம் எமது தொடர்போராட்டத்தை மிக வலுவோடு முன்னெடுக்கவேண்டும் .
நாம் தற்போது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இது மக்கள் சக்தியாக உருமாறி சர்வதேசத்தின் கதவுகளை தட்டி மெல்லத் திறந்துள்ளோம். . இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுட்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதை உலகம் மெல்ல உணர்கின்றது. ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு தொடர்ந்து போராட வேண்டும் . ஒரு தனிமனிதனால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் குறிகிய காலத்தில் தேசிய மக்கள் போராட்டமாக மாறியது. அதே போல் இன்றைய காலத்திலும் பல்வேறு காரணத்தால் மக்கள் பங்களிப்பு அதிகமாக இல்லை என்றாலும் எமது போராட்டம் விரிவடைந்து மிக விரைவில் மக்கள் போராட்டமாக வலுவாகும் காலம் விரைவாகும்.
நிலத்தில் எம் சிவில் சமூக உறவுகள் மற்றும் உயர்கல்வி மாணவர்களும் மக்களும் சிங்கள இனவெறியர்களுக்கும் அவர் தம் கூலிகளுக்கும் எவ்வித அச்சமும் அல்லாமல் நீதியை நிலை நாட்ட முயற்சிப்பது , மானத் தமிழர்கள் மடியவில்லை அடிபணியவில்லை என்று உறுதிப்படுத்துகின்றது .
புலத்தில் பிரித்தானியாவில் இருந்து சிவந்தன் தொடக்கம் சுடர்விட்டு எரியத் தொடங்கிய நீதியின் நடைப்பயணம் ஜெகன் அங்கிள் தொடர்ந்து, டென்மார்க் உணர்வாளர்களிடம் விரிந்து, தமிழக உறவுகளிடம் பரந்து, ஜேர்மன் இளையோர்களின் ஈருருளிப் பயணத்தை அடுத்து மீண்டும் டென்மார்க் உணர்வாளர்களிடம் ஈருருளிப் பயணமாக மாறி தொடர்ந்து சென்ற ஆண்டு யூலை மாதத்தில் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து ஆறு தேசிய உணர்வாளர்கள் மூலம் பாரீஸ் நகரத்தை நோக்கி பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொடர்ந்தது .
இன்று எம் இனத்தின் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துப்பட்டிருக்கும் இனப்படுகொலையிலிருந்து எம்மக்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறுபட்ட அரசியல் போராட்டங்களை நாம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த வகையில் எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையகத்திற்கு எமது மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்படும் படுகொலை தொடர்பாக தீர ஆராய்ந்து அனைத்துலக நீதி மன்றில் விசாரணை நடாத்தி எம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில்(05 .02 .2012 ) இருந்து ஐ. நா (05.03 .2012 ) வரைக்கும் நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இறுதி நாள் அன்று மாபெரும் மக்கள் எழுட்சி நிகழ்வும் நடைபெறும் . அதே நேரத்தில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடர் விடையமாக கடந்த பல வாரங்களாக நாடுகள் வாரியான அரசியல் வேலைத்திட்டங்கள் , மற்றும் அரசியல் சந்திப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
நாங்கள் சிந்தும் துளிகள் இன்று கண்ணீராக இருந்தாலும் நாளை மலரப் போகும் தமிழீழத்துக்கு தண்ணீராக மாறும். தமிழீழம் மீட்கும் வரை எம் மக்கள் விடுதலை பெறும் வரை ஓயாது எம் போராட்டம்.
நீதியின் அடிப்படையில், மனிததர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள். (தேசியத் தலைவரின் சிந்தனைகளில் இருந்து )
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் .
நன்றி
ஈழத்தமிழர் மக்கள் அவை- யேர்மனி
அவுஸ்திரேலியாவில் உள்ள கான்பெரா நகரில் நேற்று தேசிய நாள் விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள ஒரு விடுதியில் நடந்த விழாவில் பிரதமர் ஜுலியா கில்லார்டு எதிர்க்கட்சி தலைவர் டோனி அல்போட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் பழங்குடி அமைப்பை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் விழா நடந்த விடுதியினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது வன்முறை வெடித்தது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதிமீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின. பின்னர் விடுதிக்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயன்றனர். அதைத் தொடர்ந்து மிகப்பெரிய விபரீதம் நடைபெற போவதை அறிந்த போலீசார் பிரதமர் கில்லார்டு மற்றும் எதிர்க்கட்சி தலைவர் டோனி அப்போட் ஆகியோரை விடுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இருந்தும் போராட்டக்காரர்கள் விடவில்லை. பிரதமர் கில்லார்ட் மீது கற்களை வீசி தாக்கினர். அப்போது அவரை பாதுகாப்பு அதிகாரி மனித கேடயம் போன்று சுற்றி நின்றபடி காருக்கு இழுத்து வந்து காப்பாற்றினார். அதேபோன்று எதிர்க் கட்சி தலைவரும் காப்பாற்றப்பட்டார். இவர்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீசாரும் பலத்த பாதுகாப்பு கொடுத்தனர்.நட்சத்திரவிடுதியில் இருந்து தப்பி வெளியே வந்த கில்லார்ட் கால் தவறி கீழே விழுந்தார். அப்போது அவரது காலணிகள் கழன்றன. அவற்றை சுமந்து வந்த போலீசார் காரில் ஏறியதும் அவரிடம் வழங்கினர்.
இச்சம்பவம் கான்பரா நகரில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.கடந்த 1788-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி அன்று ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து தனது காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்தியது. அதைதான் ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக கொண்டாப்படுகிறது.இதற்கு ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தேசிய நாள் அல்ல. ஆஸ்திரேலியா மீது இங்கிலாந்து படையெடுத்து வந்து ஆக்கிரமிப்பு செய்த நாள். எங்களுக்கு உரிய மரியாதையும்இ உரிமையும் வழங்க வேண்டும். அதற்காக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என பழங்குடியின தலைவர் ஹூப்பர் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் பழங்குடி அமைப்பை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் விழா நடந்த விடுதியினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது வன்முறை வெடித்தது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதிமீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின. பின்னர் விடுதிக்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயன்றனர். அதைத் தொடர்ந்து மிகப்பெரிய விபரீதம் நடைபெற போவதை அறிந்த போலீசார் பிரதமர் கில்லார்டு மற்றும் எதிர்க்கட்சி தலைவர் டோனி அப்போட் ஆகியோரை விடுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இருந்தும் போராட்டக்காரர்கள் விடவில்லை. பிரதமர் கில்லார்ட் மீது கற்களை வீசி தாக்கினர். அப்போது அவரை பாதுகாப்பு அதிகாரி மனித கேடயம் போன்று சுற்றி நின்றபடி காருக்கு இழுத்து வந்து காப்பாற்றினார். அதேபோன்று எதிர்க் கட்சி தலைவரும் காப்பாற்றப்பட்டார். இவர்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீசாரும் பலத்த பாதுகாப்பு கொடுத்தனர்.நட்சத்திரவிடுதியில் இருந்து தப்பி வெளியே வந்த கில்லார்ட் கால் தவறி கீழே விழுந்தார். அப்போது அவரது காலணிகள் கழன்றன. அவற்றை சுமந்து வந்த போலீசார் காரில் ஏறியதும் அவரிடம் வழங்கினர்.
இச்சம்பவம் கான்பரா நகரில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.கடந்த 1788-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி அன்று ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து தனது காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்தியது. அதைதான் ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக கொண்டாப்படுகிறது.இதற்கு ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தேசிய நாள் அல்ல. ஆஸ்திரேலியா மீது இங்கிலாந்து படையெடுத்து வந்து ஆக்கிரமிப்பு செய்த நாள். எங்களுக்கு உரிய மரியாதையும்இ உரிமையும் வழங்க வேண்டும். அதற்காக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என பழங்குடியின தலைவர் ஹூப்பர் தெரிவித்துள்ளார்.
'இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!' என்று ஈழ மண்ணின் குரல் ஒன்று தமிழகத்தில் ஒரு பேரலையை உருவாக்கியுள்ளது. இத்தனைக்கும் அவர் ஆயுதம் ஏந்தி, தேச விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலி அல்ல. எழுத்துக்களால் ஏவுகணைகளை வடிக்கும் ஒரு பேனாப் போராளி. அதுவும், அறுபதுகளையும் தாண்டிய ஒரு பெண் படைப்பாளி. தமிழ்க் கவி என்ற பெயருடன் தமிழர்களுக்கெல்லாம் அறிமுகமான அவர் ஒன்றும் சிங்கள அடக்குமுறைக்கும், ஆயுதங்களுக்கும் பயந்து, அகதியாகத் தமிழகம் நோக்கிக் கடல் கடந்தவரல்ல.
தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் இறுதிவரை புலிகளுடன் இருந்து, போர் முடிவுக்கு வந்த நாளில் தன் பணியைத் தொடர்வதற்காக ஈழ மண்ணிலேயே சிங்களம் அமைத்த முள்வேலி முகாம் சித்திரவதைகளையும் அனுபவித்து, ஈழத்து மக்களின் அத்தனை துயரங்களின் சாட்சியாக அண்மையில் தமிழகம் வந்து சேர்ந்தவர். அண்மைக் காலமாக தமிழீழ மண்ணில் அத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி ஒலிக்க ஆரம்பித்திருக்கும் விடுதலைக் குரல்களின் மொத்த வடிவமாக தமிழ்க் கவி தமிழகத்தில் தன் உச்சக் குமுறலைக் கொட்டித் தீர்த்துள்ளார். இதுதான் ஈழத் தமிழர்களது உண்மையான குரல். அவர்களது விடுதலை வேட்கையின் வெடி மருந்து. பாரதப் போர் முடிந்து, அதில் கௌரவர்களும், பின்னர் பாண்டவர்களும் மண்ணை விட்டு அகன்றபோதும், அந்தப் போர்க் களத்தில் கண்ணன் உபதேசித்த கீதை மட்டும் காலங்கள் கடந்தும் வாழ்வது போலவே, தமிழ்க் கவி அவர்களது வார்த்தைகளும் இன்னொரு கீதையாக, எங்கள் தேசத்தினதும், இனத்தினதும் விடுதலைக்கு உரமூட்டும் என்பது உறுதி. ஆயுத பலம் மட்டுமே மக்களது முடிவுகளைத் தீர்மானிப்பதாக இருக்க முடியாது.
அந்த நம்பிக்கை கோழைகளுக்கு மட்டுமே சொந்தமானது. தமிழீழ வீர மறவர்களுக்கு அது இன்னொரு விளையாட்டுக் களமாகவே இருக்கும்.
இப்போது உருப் பெருத்துள்ள சிங்களத்துப் படைகளும், பெருக்கி வைத்துள்ள படைக் கருவிகளும் எப்போதும் அவர்களைக் காப்பாற்றும் என்றால், உலகில் ஒருபோதும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க முடியாது. பிரித்தானியாவின் ஆயுத பலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நீடித்து நிலைக்கவில்லை. சோவியத் யூனியனின் அசுர பலம் அதிலிருந்து பல தேசங்கள் உதிர்ந்து போவதைத் தடை செய்ய முடியவில்லை. ஆயுத பலத்தால் உலகை ஆள விரும்பிய ரோம ராஜ்ஜியம் இத்தாலிக்குள் சுருங்கிக்கொண்டதும் வரலாறு கற்றுத் தரும் பாடம். எனவே, ஆயுதங்கள் கோழைகளின் தற்காப்புக் கவசம் மட்டுமே. வீரர்கள் கோபம் கொள்ளும்வரையே அது அவர்களைக் காப்பாற்றும். அதன் பின்னர் காட்சிகள் மாறிவிடும்.
தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்தில் அவரிடம் இருந்தது துருப்பிடித்த பழைய 'பிஸ்டல்' எனப்படும் துப்பாக்கி ஒன்று மட்டுமே. ஏற்கனவே, நடைபெற்று முடிந்த ஜே.வி.பி. கிளர்ச்சியின் அனுபவங்களுடன் சிங்கள இராணுவம் ஏ.கே.47, கவச வாகனங்கள் என்ற பருத்த பலத்துடனேயே பவனி வந்துகொண்டிருந்தது. தலைவர் அவர்களது விடுதலை இலட்சியத்திற்கும், உறுதிக்கும் முன் அவை எல்லாமே அவருக்கு வேட்டைப் பொருட்களாகவே தெரிந்தன. விடுதலைப் புலிகளது ஆயுத பலத்திற்கு, சிங்களப் படைகளிடமிருந்து அடித்துப் பறித்த ஆயுதங்களே பெரும் பங்கை வகித்தன. இப்போதும் நிலமை அதுவே. பருத்துக் கொழுத்த படைகளின் பலவீனங்களை அறிந்துகொண்டால், சிங்களப் படைகளின் ஆயுதங்கள் தமிழர் படைகளின் கைகளில் வந்து சேர்ந்துவிடும். எனவே, சிங்களப் படைகளின் பிரமாண்டத்தைக் கண்டு யாரும் திகைப்படைந்து போக வேண்டிய அவசியம் கிடையாது. சிங்கள தேசம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்த காலங்களில், அவற்றில் பாதியாவது விடுதலைப் புலிகளிற்கானதாகவே இருந்த காலத்தை நாம் மறந்துவிட முடியாது.
எங்களுக்கான எங்களது போர்க் கருவிகளை இப்போது அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். அவ்வளவேதான்.
இதற்காகத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதே இலட்சியம் என்பதல்ல. எதிரியின் நோக்கம் எங்களை அச்சத்துள் வாழ விடுவது என்பதே. எதிரியின் அந்த நம்பிக்கையை நாம் சிதறடிக்க வேண்டும். எங்கள் தேசமும், எங்கள் தேசத்து மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டுமானால், நாம் எதிரியின் சதிக்குள் சிக்கிவிடக் கூடாது. அச்சப்படுதலிலிருந்து நாம் எம்மை விடுவித்துக்கொண்டால், ஆயுதம் ஏந்தியவன் சலித்துவிடுவான். இப்போது சில தமிழர்களும் எதிரியின் அச்சப்படுத்தல்களுக்குள் தமிழர்களைப் புதைத்துவிட முயல்கிறார்கள். சிங்களத்தைத் தோற்றடிக்கப்பட முடியாத பிரமிப்பாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள். அதற்காகவே, தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளையும், ஆரோக்கியமற்ற கருத்துக்களையும் விதைக்கின்றார்கள். அது புலம்பெயர் தேசங்கள் வரை வியாபிக்கப்படுகின்றது.
உலகத் தமிழர்களது மக்கள் தொகையில், சிங்களம் மடுவளவு. உலகத் தமிழர்களது பொருளாதார பலத்தில் சிங்களம் சிறு கல்லளவு. உலகத் தமிழர்களது கற்றறிவில் சிங்களம் கடுகளவு. இத்தனை பிரமாண்டங்களையும் கொண்ட தமிழர்களால் சிங்களத்திடமிருந்து தமிழீழத்தை மீட்க முடியாதா? ஆம், முடியும்! நம்மால் முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும். அதற்கு எங்கள் பொது எதிரியை நோக்கி, நாங்கள் ஒன்றுபட வேண்டும். தமிழீழத்திற்கு வெளியே தமிழர்கள் ஒன்றுபட்டுவிடுவார்களோ? என்ற பயத்துடன் சிங்களத்து ஒற்றர்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் விதைக்கப்பட்டுள்ளார்கள். நல்லவர்கள் போலவும், வல்லவர்கள் போலவும் எங்கள் மத்தியில், எங்கள் அருகே, எங்களுடன் இருந்துகொண்டே குழிபறித்து வருகின்றார்கள். இதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எங்கள் தேசத்தை மீட்கும் போராட்டத்தில் எங்களில் யாரும் பிளவுபட்டு நிற்க முடியாது. எங்களுக்குள் இரண்டு துருவங்கள் எப்போதும் சாத்தியமாகாது. இரண்டு மாவீரர் தினம் எதனைச் சாதித்தது? தமிழீழ போர்க் களத்தில் எத்தனையே படைகள் இருந்தது போல், எத்தனை அணிகளும் உருவாகலாம். ஆனால், தமிழீழ விடுதலைப் போர்க் களம் ஒன்றேதான். அதற்கான போர்ப் படைகளாகவே அத்தனை அணிகளும் இயங்க வேண்டும். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. மக்களை இருதுருவப்படுத்தும் சிந்தனைகள் இனியும் வேண்டாம். பெப்ரவரி 04, சிங்கள தேசத்தின் சுதந்திர நாளைக் கரிநாளாக ஒன்றாக இணைந்து புறக்கணிப்புப் முற்றுகையை நடாத்துவோம்! மார்ச் 05, சிங்கள ஆட்சியாளர்கள் மீதான போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தி ஜெனிவா முருகதாசன் திடலில் போராட்டம் நடாத்துவோம்! தமிழீழத்தின் விடுதலையையும், தமிழினத்தின் விடுதலையையும் மட்டுமே மனதில் கொண்ட தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக இணைவோம்!
இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!
- இசைப்பிரியா
தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் இறுதிவரை புலிகளுடன் இருந்து, போர் முடிவுக்கு வந்த நாளில் தன் பணியைத் தொடர்வதற்காக ஈழ மண்ணிலேயே சிங்களம் அமைத்த முள்வேலி முகாம் சித்திரவதைகளையும் அனுபவித்து, ஈழத்து மக்களின் அத்தனை துயரங்களின் சாட்சியாக அண்மையில் தமிழகம் வந்து சேர்ந்தவர். அண்மைக் காலமாக தமிழீழ மண்ணில் அத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி ஒலிக்க ஆரம்பித்திருக்கும் விடுதலைக் குரல்களின் மொத்த வடிவமாக தமிழ்க் கவி தமிழகத்தில் தன் உச்சக் குமுறலைக் கொட்டித் தீர்த்துள்ளார். இதுதான் ஈழத் தமிழர்களது உண்மையான குரல். அவர்களது விடுதலை வேட்கையின் வெடி மருந்து. பாரதப் போர் முடிந்து, அதில் கௌரவர்களும், பின்னர் பாண்டவர்களும் மண்ணை விட்டு அகன்றபோதும், அந்தப் போர்க் களத்தில் கண்ணன் உபதேசித்த கீதை மட்டும் காலங்கள் கடந்தும் வாழ்வது போலவே, தமிழ்க் கவி அவர்களது வார்த்தைகளும் இன்னொரு கீதையாக, எங்கள் தேசத்தினதும், இனத்தினதும் விடுதலைக்கு உரமூட்டும் என்பது உறுதி. ஆயுத பலம் மட்டுமே மக்களது முடிவுகளைத் தீர்மானிப்பதாக இருக்க முடியாது.
அந்த நம்பிக்கை கோழைகளுக்கு மட்டுமே சொந்தமானது. தமிழீழ வீர மறவர்களுக்கு அது இன்னொரு விளையாட்டுக் களமாகவே இருக்கும்.
இப்போது உருப் பெருத்துள்ள சிங்களத்துப் படைகளும், பெருக்கி வைத்துள்ள படைக் கருவிகளும் எப்போதும் அவர்களைக் காப்பாற்றும் என்றால், உலகில் ஒருபோதும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க முடியாது. பிரித்தானியாவின் ஆயுத பலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நீடித்து நிலைக்கவில்லை. சோவியத் யூனியனின் அசுர பலம் அதிலிருந்து பல தேசங்கள் உதிர்ந்து போவதைத் தடை செய்ய முடியவில்லை. ஆயுத பலத்தால் உலகை ஆள விரும்பிய ரோம ராஜ்ஜியம் இத்தாலிக்குள் சுருங்கிக்கொண்டதும் வரலாறு கற்றுத் தரும் பாடம். எனவே, ஆயுதங்கள் கோழைகளின் தற்காப்புக் கவசம் மட்டுமே. வீரர்கள் கோபம் கொள்ளும்வரையே அது அவர்களைக் காப்பாற்றும். அதன் பின்னர் காட்சிகள் மாறிவிடும்.
தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்தில் அவரிடம் இருந்தது துருப்பிடித்த பழைய 'பிஸ்டல்' எனப்படும் துப்பாக்கி ஒன்று மட்டுமே. ஏற்கனவே, நடைபெற்று முடிந்த ஜே.வி.பி. கிளர்ச்சியின் அனுபவங்களுடன் சிங்கள இராணுவம் ஏ.கே.47, கவச வாகனங்கள் என்ற பருத்த பலத்துடனேயே பவனி வந்துகொண்டிருந்தது. தலைவர் அவர்களது விடுதலை இலட்சியத்திற்கும், உறுதிக்கும் முன் அவை எல்லாமே அவருக்கு வேட்டைப் பொருட்களாகவே தெரிந்தன. விடுதலைப் புலிகளது ஆயுத பலத்திற்கு, சிங்களப் படைகளிடமிருந்து அடித்துப் பறித்த ஆயுதங்களே பெரும் பங்கை வகித்தன. இப்போதும் நிலமை அதுவே. பருத்துக் கொழுத்த படைகளின் பலவீனங்களை அறிந்துகொண்டால், சிங்களப் படைகளின் ஆயுதங்கள் தமிழர் படைகளின் கைகளில் வந்து சேர்ந்துவிடும். எனவே, சிங்களப் படைகளின் பிரமாண்டத்தைக் கண்டு யாரும் திகைப்படைந்து போக வேண்டிய அவசியம் கிடையாது. சிங்கள தேசம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்த காலங்களில், அவற்றில் பாதியாவது விடுதலைப் புலிகளிற்கானதாகவே இருந்த காலத்தை நாம் மறந்துவிட முடியாது.
எங்களுக்கான எங்களது போர்க் கருவிகளை இப்போது அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். அவ்வளவேதான்.
இதற்காகத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதே இலட்சியம் என்பதல்ல. எதிரியின் நோக்கம் எங்களை அச்சத்துள் வாழ விடுவது என்பதே. எதிரியின் அந்த நம்பிக்கையை நாம் சிதறடிக்க வேண்டும். எங்கள் தேசமும், எங்கள் தேசத்து மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டுமானால், நாம் எதிரியின் சதிக்குள் சிக்கிவிடக் கூடாது. அச்சப்படுதலிலிருந்து நாம் எம்மை விடுவித்துக்கொண்டால், ஆயுதம் ஏந்தியவன் சலித்துவிடுவான். இப்போது சில தமிழர்களும் எதிரியின் அச்சப்படுத்தல்களுக்குள் தமிழர்களைப் புதைத்துவிட முயல்கிறார்கள். சிங்களத்தைத் தோற்றடிக்கப்பட முடியாத பிரமிப்பாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள். அதற்காகவே, தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளையும், ஆரோக்கியமற்ற கருத்துக்களையும் விதைக்கின்றார்கள். அது புலம்பெயர் தேசங்கள் வரை வியாபிக்கப்படுகின்றது.
உலகத் தமிழர்களது மக்கள் தொகையில், சிங்களம் மடுவளவு. உலகத் தமிழர்களது பொருளாதார பலத்தில் சிங்களம் சிறு கல்லளவு. உலகத் தமிழர்களது கற்றறிவில் சிங்களம் கடுகளவு. இத்தனை பிரமாண்டங்களையும் கொண்ட தமிழர்களால் சிங்களத்திடமிருந்து தமிழீழத்தை மீட்க முடியாதா? ஆம், முடியும்! நம்மால் முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும். அதற்கு எங்கள் பொது எதிரியை நோக்கி, நாங்கள் ஒன்றுபட வேண்டும். தமிழீழத்திற்கு வெளியே தமிழர்கள் ஒன்றுபட்டுவிடுவார்களோ? என்ற பயத்துடன் சிங்களத்து ஒற்றர்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் விதைக்கப்பட்டுள்ளார்கள். நல்லவர்கள் போலவும், வல்லவர்கள் போலவும் எங்கள் மத்தியில், எங்கள் அருகே, எங்களுடன் இருந்துகொண்டே குழிபறித்து வருகின்றார்கள். இதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எங்கள் தேசத்தை மீட்கும் போராட்டத்தில் எங்களில் யாரும் பிளவுபட்டு நிற்க முடியாது. எங்களுக்குள் இரண்டு துருவங்கள் எப்போதும் சாத்தியமாகாது. இரண்டு மாவீரர் தினம் எதனைச் சாதித்தது? தமிழீழ போர்க் களத்தில் எத்தனையே படைகள் இருந்தது போல், எத்தனை அணிகளும் உருவாகலாம். ஆனால், தமிழீழ விடுதலைப் போர்க் களம் ஒன்றேதான். அதற்கான போர்ப் படைகளாகவே அத்தனை அணிகளும் இயங்க வேண்டும். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. மக்களை இருதுருவப்படுத்தும் சிந்தனைகள் இனியும் வேண்டாம். பெப்ரவரி 04, சிங்கள தேசத்தின் சுதந்திர நாளைக் கரிநாளாக ஒன்றாக இணைந்து புறக்கணிப்புப் முற்றுகையை நடாத்துவோம்! மார்ச் 05, சிங்கள ஆட்சியாளர்கள் மீதான போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தி ஜெனிவா முருகதாசன் திடலில் போராட்டம் நடாத்துவோம்! தமிழீழத்தின் விடுதலையையும், தமிழினத்தின் விடுதலையையும் மட்டுமே மனதில் கொண்ட தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக இணைவோம்!
இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!
- இசைப்பிரியா
| தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இப்பகுதியில் ஆயுதப்போட்டியை தவிர்க்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இந்தியா முறைப்படி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் தனது கவலையை வெளியிட்டுள்ளது. |
| இஸ்லாமாபாத்தில் நிருபர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவுத்துறை
செய்தித்தொடர்பாளர் அப்துல் பசித்திடம் இந்தியா, ரஷ்யாவிடமிருந்து பெற்ற அணுசக்தி
நீர்மூழ்கி கப்பல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், தெற்காசிய பிராந்தியம் ஏழ்மை மற்றும் நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள நாடுகள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயல்களில் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் ஆயுதப்போட்டி ஏற்படாத வகையில், நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார். மேலும், ரஷ்யாவுடனான தங்கள் நாட்டின் உறவுகள் மேம்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா ரஷ்யாவிடம் சுமார் ஒரு பில்லியன் டாலர் செலுத்தி, 8140 டன் எடை கொண்ட அகுலா 2 என்ற அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை 10 ஆண்டு குத்தகைக்கு பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த 1988ம் ஆண்டு ரஷ்யா கட்டிய நீர்மூழ்கி கப்பலை இந்தியா 3 ஆண்டு குத்தகைக்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளளது. அதே நேரம் இந்தியா சொந்தமாக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றையும் கட்டி வருகிறது. இந்தாண்டு இறுதியில் இப்பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை இயக்க இந்திய வீரர்களுக்கு ரஷ்யா உதவி செய்ய முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
விக்கி லீக்ஸ் இலங்கை குறித்து பல தகவல்களை வெளியிட்டு வருவது யாவரும் அறிந்த விடையமே. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவில் உள்ள தலைமையகத்துக்கு பாதுகாப்பான கேபிள் மூலம் அனுப்புவது வழக்கம்ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்த கருணா இலங்கை அரசுடன் சேர்வதற்கு முன்னரே இலங்கை அரசோடு இணைந்து வேலைசெய்யும் ஒரு நபர் என்றும் அவர் ஒரு கிரிமினல் என்றும் அமெரிக்க தூதரகம் கருதியுள்ளது. துணை ஆயுதப்படையை வைத்திருக்கும் டக்ளஸை வைத்து கோத்தபாய பல காரியங்களை செய்துள்ளார் என்றும் தேர்தல் சமயங்களில் இக் குழு கள்ளவோட்டுக்களை குத்தியதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து இலங்கை அரசுடன் சேர்ந்தபோது அவர் மகிந்தரின் செல்லப்பிள்ளையாக மாறியதாகவும் இதனால் கருணா மற்றும் டக்ளஸுக்கு இடையே யார் அரசுடன் கூட ஒட்டிக்கொள்வது என்பது போன்ற பிரச்சனைகள் தோன்றியதாகவும் அறியப்படுகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களைச் சமாளிக்க டக்ளஸையும் வெளிநாட்டில் உள்ள தமிழர்களை சமாளிக்க கருணாவையும் பயன்படுத்த இலங்கை அரசு திட்டம் தீட்டி இருந்ததாம். இருப்பினும் கருணாவின் செயல்பாடுகளை கோத்தபாய விரும்ப ஆரம்பித்ததாகவும் அவர் பின்னர் டக்ளஸை கைவிட்டதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. கப்பம் பெறுதல் ஆட்கடத்தல் போன்ற நடவடிக்கைக்கு கருணா குழு பயன்படுத்தப்பட்டதாக தாம் சந்தேகிப்பதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான ஹீத் ஷோல்லர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவர் டக்ளஸை சந்திக்கவேண்டும் என இலங்கையால் கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாம். டக்ளஸை சந்திக்கவேண்டாம் என அமெரிக்க தூதரகம் ஹீத் ஷோல்லருக்கு அறிவுரை கூறியுள்ளது. இருப்பினும் இலங்கையின் கடும் அழுத்தம் காரணமாக புகைப்படம் எடுக்காமல் தனிப்பட்ட ரீதியில் சந்திப்பதாயின் தாம் தயார் என ஹீத் ஷோல்லர் கூறியுள்ளார். 1998 ல் நடந்த உள்ளூராட்ச்சித் தேர்தல்களில் கள்ளவோட்டு பலவற்றைப் போட்டு ஈ.பி.டி.பி யினர் வென்றதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்காவுக்கு ஆதரவாக சுமார் 50,000 வோட்டுகளை திரட்டியுள்ளனர் ஈ.பி.டி.பி குழுவினர். அவை அனைத்துமே கள்ளவோட்டுகளாக இருக்கலாம் என்கிறது அமெரிக்க தூதரகச் செய்திகள்.
ஏன் எனில் தமிழர்கள் வாழும் பிற மாவட்டங்களில் தமிழர்கள் சந்திரிக்காவை எதிர்த்துப் போட்டியிட்ட நபருக்கே தமது வாக்குகளை அளித்திருந்தனர். அப்படி இருக்கும்போது யாழ்ப்பாணத்தில் மட்டும் எப்படி இவ்வளவு வோட்டு விழுந்திருக்கும் என அமெரிக்க தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது. இவ்வாறு இலங்கை அரசுக்கு பல வருடமக வாலாட்டிய டக்ளஸின் நிலை தற்போது கவலைக்கிடம் என்றும் காட்டிக்கொடுத்த கருணாவைத் தான் இலங்கை அரசு தலைமேல் வைத்து கொண்டாடுவதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
கருணாவின் குழு கடத்தலில் ஈடுபடுவதையும் கப்பம் பெறும் நடவடிக்கையில் ஈடுபடுவதையும் அமெரிக்க அரசு தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருக்கும் மோர் என்பவரால் இத் தகவல்கள் அமெரிக்க தலைமைக்கு அனுப்பட்டுள்ளது.
தமிழீழ நிலப்பரப்பிலிருந்து சிங்கள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வேண்டும். அதற்கான சர்வதேச சூழ்நிலையை நாம்தான் உருவாக்க வேண்டும்.
மாவீரா நாளைக் குறிவைத்து ஒரு தாக்குதல் களத்தை உருவாக்கிய சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்கள், எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 19 வது கூட்டத் தொடரை நோக்கிய பலமானதொரு நகர்வை மேற்கொண்டுள்ளதுகடந்த செப்ரம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவையில் 18 வது கூட்டத் தொடரை புலம்பெயர் தமிழர்கள் தமக்கானதொரு அரசியல் களமாக மாற்றியதுடன் ஜெனிவாவில் பொங்குதமிழ் பேரெழுச்சியையும் நடாத்தி முடித்தார்கள். மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரை மையப்படுத்தி, பிரான்ஸ் தமிழர் ஒருங்கிளைப்புக் குழு ஐரோப்பிய பாராளுமன்றத்திலிருந்து ஐ.நா. வரைக்குமான நடை பயணம் ஒன்றிற்கான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இந்த நடை பயணம் ஜெனிவாவை வந்தடையும் நாளில் மீண்டும் ஒரு பேரெழுச்சிக்கான முழுமையான ஆயத்தங்களும் தமிழ்த் தேசிய தளங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
புலம்பெயர் தமிழர்களது இந்தப் பெரெழுச்சி நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றால், சிங்கள ஆட்சியாளாகள் மீதான சர்வதேச அழுத்தங்கள் பல மடங்காக அதிகரிக்கும் என்பதுடன், அனைத்துலக நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும் தொடுக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத நெருக்கடியும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுவிடும்.இதனாலேயே, புலம்பெயர் தமிழர்களது தமிழீழ விடுதலை நோக்கிய நகர்வினை முறியடிக்கும் முயற்சியில் சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்கள் முழு மூச்சுடன் களம் இறங்கியுள்ளார்கள்.
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு வந்து ஜெனிவாவின் ஐ.நா. முன்றலில் நீதி கோரும் போராட்டத்தை முறியடிக்கும் ஆள் பலமோ, ஆதரவு பலமோ இல்லாத நிலையில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள பிளவுவாத சக்திகளைத் தூண்டிவிட்டு, மாவீரர் தினத்திற்குப் போட்டியாக இரண்டாவது மாவீரர் தினத்தை நடாத்தத் தூண்டியது போலவே, தமிழ்த் தேசிய தளங்களது இந்தப் போர்க் களத்தைச் சிதைப்பதற்கும் அதே பிளவுவாத சக்திகளையே களம் இறக்க முயற்சி செய்கின்றது.
சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்களது நோக்கங்களை முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் தங்கள் தலைக்கு அளவான முடிகளைத் தேடும் கிளர்ச்சியாளர்கள் புரிந்து கொள்ள மறுத்தாலும், புலம்பெயர் தமிழர்கள் தங்களது தாயக இலட்சியத்தைத் தோற்கடிக்கும் சிங்கள தேசத்தின் சூழ்ச்சிகளுக்குப் பலியாகிவிடக் கூடாது.இன்று போராடுவதை விடவும், ஒன்றுபட்டு நின்று, ஒரே குரலில் நமது தேசத்தின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் எழுப்புவதே புலம்பெயர் தமிழர்களது முதன்மையான பணியாக இருக்க வேண்டும்.
நாங்கள் பல கூறாகப் பிளவுபடுத்தப்பட்டுவிட்டால், எதிரி எப்போதும் வெற்றிப் பாதையில் சென்றுகொண்டே இருப்பான். தமிழீழ மக்கள் நிரந்தர அடிமைகளாக, அதற்குள் உயிர்வாழக் கற்றுக்கொண்டுவிடுவார்கள். அல்லது, இறுதித் தமிழனும் அங்கிருந்து வெளியேறும்படியான அவலங்களை எதிர்கொள்வான்.
எங்களுக்கேயான எங்களது தேசம் எங்களுக்கு மீண்டும் கிடைக்க வேண்டுமானால், தமிழீழ நிலப்பரப்பிலிருந்து சிங்கள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வேண்டும். அதற்கான சர்வதேச சூழ்நிலையை நாம்தான் உருவாக்க வேண்டும். அதற்கான போர்க் களத்தில் நாம் ஒன்றாகவே நிமிர்ந்து நின்று உரத்துக் குரல் எழுப்ப வேண்டும். இது காலமும், எங்கள் தேசத்து மக்களும், விடுதலைப் புலிகளும், தேசியத் தலைவரும் எமக்கு இட்ட கட்டளை. இந்த வரலாற்றுக் கடமையிலிருந்து யாரும் தப்பித்துக்கொள்ள முடியாது.
தமிழீழ இலட்சியம் ஒன்றைத் தவிர எதையுமே எதிர்பாராமல், தமிழீழக் கனவினை மட்டும் எடுத்துச் சென்ற மாவீரர்களும், மக்களும் சிங்திய குருதியும், அர்ப்பணிப்புக்களும் வீணாகிப் போய்விடக் கூடாது.
தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்காகக் களமாடிய பெண் போராளிகள் மட்டுமல்ல, தமிழிச்சியாகப் பிறந்ததனால் சிங்களக் காமுகர்களால் சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டு மரணித்துப்போன எங்கள் உடன் பிறப்புக்களின் அவலங்கள் எங்கள் உள்ளங்களில் தீயாகப் பரவட்டும்.
ஈழத் தமிழினம் தோற்றுவிடக் கூடாது என்ற ஆதங்கத்துடன் தன்னை எரித்துக் களமாடிய முத்துக்குமாரன் முதல், செங்கொடிவரை அத்தனை ஈகப் பேரொளிகளது ஆத்மாக்களும் எங்களுக்கான கதவுகளைத் திறக்கட்டும்.வாருங்கள்! அத்தனை தமிழர்களும் ஒன்றாகக் கரம் கோர்த்து மார்ச் 5 ஆம் திகதி முருகதாசன் திடலில் நின்று எமது தேசத்தின் அவலங்களுக்கு நீதி கோருவோம்! இனி எங்களைப் பிளவு படுத்தவும், பிரித்தாளவும் எவனுக்கும் இடமில்லை என்று அறைந்து முரசொலிப்போம்!
இசைப்பிரியா
வன்னிப் போரின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை காப்பாற்றுகின்றமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்.
போரில் மிஞ்சிய புலிகளுக்கு இராணுவத்திடம் சரண் அடைகின்றமைக்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றமைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரடியாக பாடுபட்டு இருக்கின்றார்.
இதற்கான ஏற்பாடுகளை செய்கின்றமை தொடர்பாக கே.பி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, அமெரிக்க தூதரக அதிகாரிகள் உட்பட வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் போன்ற பல தரப்பினரோடும் தொடர்பில் இருந்திருக்கின்றார்.
புலிகளை சரண் அடைய வைக்கின்றமைக்கான ஏற்பாட்டில் நேரடியாக பங்கேற்கின்றமைக்காக கிறிஸ்தவ மத குரு ஒருவருடன் வன்னியில் யுத்த பிரதேசத்துக்கு செல்கின்றமைக்கு தயாராகவும் இருந்திருக்கின்றார்.
ஆனால் பசில் ராஜபக்ஸ கடைசி நேரத்தில் இவரை கை விட்டு விட்டார். கஜேந்திரகுமாரும் கே.பியும் 2009 ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி இரவு தொலைபேசியில் பேசி இருக்கின்றனர்.
3000 பேர் அன்று கொல்லப்பட்டமையுடன் 25000 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்று குமாருக்கு கே.பி சொல்லி இருக்கின்றார். எறிகணைத் தாக்குதல் தொடர்கின்றன என்றும் கே.பி சொல்லி இருக்கின்றார்.
சரண் அடைகின்றமைக்கு புலிகள் தற்போது தயாராக உள்ளனர் என்றும் கே.பி சொல்லி இருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சரண் அடைதலுக்கு ஏற்பாடு செய்கின்றமைக்கு பாதிரி ஒருவருடன் கூடவே யுத்த பிரதேசத்துக்கு செல்ல தயார் என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் ஜனாதிபதியுடன் குமார் ஏற்கனவே கலந்துரையாடி இருக்கின்றார்.
ஜனாதிபதியுடன் ஏற்கனவே பேசி இருந்தமைக்கு அமைய யுத்த பிரதேசத்துக்கு செல்கின்றமைக்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசிலை குமார் கேட்டு இருக்கின்றார். ஜனாதிபதி இணங்கி இருக்கின்றார்.
ஜனாதிபதி ஜோர்தானுக்கு சென்று விட்டு திரும்பி வந்திருந்த நேரம் அது. ஆனால் பசில் மறுத்து விட்டார்.
இநிலையில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு குமார் 17 ஆம் திகதி அழைப்பு மேற்கொண்டு பசிலின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தி இருக்கின்றார்.
2009 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்வளவு தகவல்களையும் பெற முடிந்து உள்ளது.
போரில் மிஞ்சிய புலிகளுக்கு இராணுவத்திடம் சரண் அடைகின்றமைக்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றமைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரடியாக பாடுபட்டு இருக்கின்றார்.
இதற்கான ஏற்பாடுகளை செய்கின்றமை தொடர்பாக கே.பி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, அமெரிக்க தூதரக அதிகாரிகள் உட்பட வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் போன்ற பல தரப்பினரோடும் தொடர்பில் இருந்திருக்கின்றார்.
புலிகளை சரண் அடைய வைக்கின்றமைக்கான ஏற்பாட்டில் நேரடியாக பங்கேற்கின்றமைக்காக கிறிஸ்தவ மத குரு ஒருவருடன் வன்னியில் யுத்த பிரதேசத்துக்கு செல்கின்றமைக்கு தயாராகவும் இருந்திருக்கின்றார்.
ஆனால் பசில் ராஜபக்ஸ கடைசி நேரத்தில் இவரை கை விட்டு விட்டார். கஜேந்திரகுமாரும் கே.பியும் 2009 ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி இரவு தொலைபேசியில் பேசி இருக்கின்றனர்.
3000 பேர் அன்று கொல்லப்பட்டமையுடன் 25000 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்று குமாருக்கு கே.பி சொல்லி இருக்கின்றார். எறிகணைத் தாக்குதல் தொடர்கின்றன என்றும் கே.பி சொல்லி இருக்கின்றார்.
சரண் அடைகின்றமைக்கு புலிகள் தற்போது தயாராக உள்ளனர் என்றும் கே.பி சொல்லி இருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சரண் அடைதலுக்கு ஏற்பாடு செய்கின்றமைக்கு பாதிரி ஒருவருடன் கூடவே யுத்த பிரதேசத்துக்கு செல்ல தயார் என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் ஜனாதிபதியுடன் குமார் ஏற்கனவே கலந்துரையாடி இருக்கின்றார்.
ஜனாதிபதியுடன் ஏற்கனவே பேசி இருந்தமைக்கு அமைய யுத்த பிரதேசத்துக்கு செல்கின்றமைக்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசிலை குமார் கேட்டு இருக்கின்றார். ஜனாதிபதி இணங்கி இருக்கின்றார்.
ஜனாதிபதி ஜோர்தானுக்கு சென்று விட்டு திரும்பி வந்திருந்த நேரம் அது. ஆனால் பசில் மறுத்து விட்டார்.
இநிலையில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு குமார் 17 ஆம் திகதி அழைப்பு மேற்கொண்டு பசிலின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தி இருக்கின்றார்.
2009 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்வளவு தகவல்களையும் பெற முடிந்து உள்ளது.
|
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம் நிகழ்வு டென்மார்க்கின்ற நகரில்
இடம்பெறவுள்ளதாக தகவற்றுறை அமைச்சகத்தின் ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22-01-2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 15:30 மணிக்கு Industrivej 15A / 7200 Grindsted
எனும் முகவரியில் இடம்பெறுவதாக ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|
சமகால அரசியல் நிலைவரம் மற்றும் நா.த.அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தான
விழிப்பூட்டல் நிகழ்வாக இடம்பெறவுள்ள இப்பொதுக் கூட்டத்தில் நா.தஅரசாங்கத்தின்
உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் கலந்து கொள்கின்றார். உள்துறை அமைச்சின் டென்மார் பிரதிநிதி இளையராஜா சிதம்பரநாதனின் ஒழுங்குபடுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் அரங்கம் நிகழ்வில் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
தேசிய பாதுகாப்பு மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்கள் தவிர ஏனைய நோக்கங்களுக்கு காணிகள் விநியோகிப்பதை தற்காலிகமாக தடைசெய்வதான சர்ச்சைக்குரிய காணிச் சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை, சட்டமா அதிபரின் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திருமதி முருது பெர்ணான்டோ இன்று வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இந்த சுற்றுநிருபமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கென விசேடமாக விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபம் தேசிய பாதுகாப்பு மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்கள் தவிர ஏனைய நோக்கங்களுக்காக காணிகளை விநியோகிப்பதை தற்காலிகமாக தடைசெய்திருந்தது.
இந்நிலையில், குறித்த காணிச் சுற்றுநிருபத்தை ரத்து செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மேல்முறையீட்டு நீதிமன்றில் ஆணைக்கோரும் விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மன்றில் ஆஜரான சட்டமா அதிபரின் பிரதி சொலிஸ்டர் ஜெனரல், மேற்படி சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதான அறிவித்தலை விடுக்குமாறு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தனக்கு ஆலோசனை வழங்கியதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து, சுமந்திரன் எம்.பி. சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகேஸ்வரன், ‘மேற்படி சுற்றுநிருபம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், இந்த சுற்றுநிருபத்துக்கு எதிரான வழக்கினை வாபஸ் பெறுவதா? இல்லையா? என்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்’ என்று கூறினார்.
இதனைத்தொடந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையினை எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
























