15 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தவர் எனக்கு பயிற்சி வழங்கியதாக கூறுவது நகைப்பிற்குரியது: சரத் பொன்சேகா
பதினைந்து வருடங்களாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருந்தவர் இன்று எனக்கு இராணுவத்தில் பயிற்சி வழங்கினார் என்று தெரிவித்திருப்பது நகைப்புக்குரியது என ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தேசப்பற்றாளராகவும், சிறந்த இராணுவத் தளபதியாகவும் என்னை புகழ்ந்தவர்கள் இன்று தேசத்துரோகியென சேறு பூசுகின்றனர் என்று ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பதினைந்து வருடங்களாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருந்தவர் இன்று எனக்கு இராணுவத்தில் பயிற்சி வழங்கினார் என்று தெரிவித்திருப்பது நகைப்புக்குரியதாகுமென்றும் அவர் கூறினார்.
பிட்ட கோட்டே சோலீஸ் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜே.வி.பி.யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்திஜீவிகளுடனான சந்திப்பின் போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது:
யுத்தத்திற்கு அஞ்சி வெளிநாட்டுக்கு ஓடிச் சென்று அங்கு கணனி இயக்குநராக பணிபுரிந்து விட்டு இன்று நாடு திரும்பியவர் எனக்கு இராணுவத் தளபதி பதவியை பெற்றுக் கொடுத்ததாகவும் பயிற்சிகளை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான கணனி இயக்குநர்களுக்கு இராணுவத்தில் கோப்ரல் பதவி மட்டுமே வழங்கப்படும். இவ்வாறான ஒருவர் எனக்கு பயிற்சி அளித்ததாக கூறுகிறார். அத்தோடு, நான் ஓய்வு பெறவிருந்த போது எனக்கு இராணுவத் தளபதி பதவி வழங்கப்பட்டதாகவும் தற்போது பொய்யான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இராணுவத் தளபதி பதவி எனக்கு வழங்கப்படும் போது ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவே ஆட்சியிலிருந்தார். அவர் அரசாங்க மற்றும் படை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதினை 58 ஆக நிர்ணயிக்கும் சட்டத்தை கொண்டு வந்தார். எனக்கு தற்போது 56 வயதாகும். எனவே, ஓய்வுபெறும் போது எனக்கு தளபதி வழங்கப்பட்டதாக கூறப்படுவதில் எதுவிதமான உண்மையும் இல்லை.
அரசாங்கம் யுத்தத்தை விற்றுப் பிழைக்கின்றது. ஆனால், எமது படையினர் அடிப்படை வசதிகளின்றி வளப் பற்றாக்குறையுடன் நெருக்கடியில் வாழ்கின்றனர். இவற்றை நீக்குவதற்கும், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதற்குமான திட்டத்தை நான் முன்வைத்தேன். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. அவ்வாறானவர்கள் இன்று கட்அவுட் அரசியல் செய்கின்றனர்.
பத்து பேர்ச்சஸ் நிலம் இல்லாதவர்களுக்கு 300 ஏக்கர்களுக்கும் மேல் நிலங்கள், வளங்கள், நிறுவனங்கள் சொந்தமாகியுள்ளன. இவையெல்லாம் எங்கிருந்து கிடைத்தன?
எதிர்வரும் வாரங்களில் பல விடயங்கள் தொடர்பான உண்மைகளை நீங்களும் தெரிந்து கொள்வதற்கு ஒலிநாடாக்களை வெளியிடவுள்ளேன்.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட கனரக ஆயுதங்கள் யுத்தத்தில் பாவிக்கப்பட்டன. புதிதாக கொள்வனவு செய்யப்படவில்லை. தோட்டாக்கள் மட்டுமே கொள்வனவு செய்யப்பட்டன.
ஆனால், கனரக ஆயுதங்கள் இலவசமாகவே ஆயுதக் கம்பனிகளால் வழங்கப்பட்டன என்றார்.
தேசப்பற்றாளராகவும், சிறந்த இராணுவத் தளபதியாகவும் என்னை புகழ்ந்தவர்கள் இன்று தேசத்துரோகியென சேறு பூசுகின்றனர் என்று ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பதினைந்து வருடங்களாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருந்தவர் இன்று எனக்கு இராணுவத்தில் பயிற்சி வழங்கினார் என்று தெரிவித்திருப்பது நகைப்புக்குரியதாகுமென்றும் அவர் கூறினார்.
பிட்ட கோட்டே சோலீஸ் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜே.வி.பி.யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்திஜீவிகளுடனான சந்திப்பின் போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது:
யுத்தத்திற்கு அஞ்சி வெளிநாட்டுக்கு ஓடிச் சென்று அங்கு கணனி இயக்குநராக பணிபுரிந்து விட்டு இன்று நாடு திரும்பியவர் எனக்கு இராணுவத் தளபதி பதவியை பெற்றுக் கொடுத்ததாகவும் பயிற்சிகளை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான கணனி இயக்குநர்களுக்கு இராணுவத்தில் கோப்ரல் பதவி மட்டுமே வழங்கப்படும். இவ்வாறான ஒருவர் எனக்கு பயிற்சி அளித்ததாக கூறுகிறார். அத்தோடு, நான் ஓய்வு பெறவிருந்த போது எனக்கு இராணுவத் தளபதி பதவி வழங்கப்பட்டதாகவும் தற்போது பொய்யான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இராணுவத் தளபதி பதவி எனக்கு வழங்கப்படும் போது ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவே ஆட்சியிலிருந்தார். அவர் அரசாங்க மற்றும் படை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதினை 58 ஆக நிர்ணயிக்கும் சட்டத்தை கொண்டு வந்தார். எனக்கு தற்போது 56 வயதாகும். எனவே, ஓய்வுபெறும் போது எனக்கு தளபதி வழங்கப்பட்டதாக கூறப்படுவதில் எதுவிதமான உண்மையும் இல்லை.
அரசாங்கம் யுத்தத்தை விற்றுப் பிழைக்கின்றது. ஆனால், எமது படையினர் அடிப்படை வசதிகளின்றி வளப் பற்றாக்குறையுடன் நெருக்கடியில் வாழ்கின்றனர். இவற்றை நீக்குவதற்கும், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதற்குமான திட்டத்தை நான் முன்வைத்தேன். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. அவ்வாறானவர்கள் இன்று கட்அவுட் அரசியல் செய்கின்றனர்.
பத்து பேர்ச்சஸ் நிலம் இல்லாதவர்களுக்கு 300 ஏக்கர்களுக்கும் மேல் நிலங்கள், வளங்கள், நிறுவனங்கள் சொந்தமாகியுள்ளன. இவையெல்லாம் எங்கிருந்து கிடைத்தன?
எதிர்வரும் வாரங்களில் பல விடயங்கள் தொடர்பான உண்மைகளை நீங்களும் தெரிந்து கொள்வதற்கு ஒலிநாடாக்களை வெளியிடவுள்ளேன்.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட கனரக ஆயுதங்கள் யுத்தத்தில் பாவிக்கப்பட்டன. புதிதாக கொள்வனவு செய்யப்படவில்லை. தோட்டாக்கள் மட்டுமே கொள்வனவு செய்யப்பட்டன.
ஆனால், கனரக ஆயுதங்கள் இலவசமாகவே ஆயுதக் கம்பனிகளால் வழங்கப்பட்டன என்றார்.
பிரான்சில் வரலாறு படைத்த வட்டுக்கோட்டை கருத்துக்கணிப்பு முடிவுகள் - 30936 வாக்குகள்: "தமிழீழமே இறுதித் தீர்வு"
பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.
31148 வாக்குகள் வாக்களிக்கப்பட்டதாகவும் அதில் 30936 வாக்குகள் "ஆம்" என வாக்களிக்கப்பட்டுள்ளது எனவும்,
மேலும், 43 வாக்குகள் மட்டுமே "இல்லை" என வாக்களிக்கப்பட்டதாகவும், 169 வாக்குகள் செல்லுபடியற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்து, பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கு "தமிழீழமே இறுதித் தீர்வு" என எடுத்துக்கூறியுள்ளனர்.
இன்று காலை 11மணிக்கு தமிழீழ மக்கள் பேரவையால் நடத்தப்படும் ஊடகவியலாளர்கள் மாகாநாட்டில் மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும் என தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் நடைபெற்றுள்ள இந்த வாக்கெடுப்பு மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளதை வாக்கெடுப்பின் முடிவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருப்பதாகவும், இது ஏனைய நாடுகளில் நடைபெறப்போகும் வாக்கெடுப்பிற்கும் முன் உதாரணமாக இருக்கும் எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
31148 வாக்குகள் வாக்களிக்கப்பட்டதாகவும் அதில் 30936 வாக்குகள் "ஆம்" என வாக்களிக்கப்பட்டுள்ளது எனவும்,
மேலும், 43 வாக்குகள் மட்டுமே "இல்லை" என வாக்களிக்கப்பட்டதாகவும், 169 வாக்குகள் செல்லுபடியற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்து, பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கு "தமிழீழமே இறுதித் தீர்வு" என எடுத்துக்கூறியுள்ளனர்.
இன்று காலை 11மணிக்கு தமிழீழ மக்கள் பேரவையால் நடத்தப்படும் ஊடகவியலாளர்கள் மாகாநாட்டில் மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும் என தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் நடைபெற்றுள்ள இந்த வாக்கெடுப்பு மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளதை வாக்கெடுப்பின் முடிவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருப்பதாகவும், இது ஏனைய நாடுகளில் நடைபெறப்போகும் வாக்கெடுப்பிற்கும் முன் உதாரணமாக இருக்கும் எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
சரணடைய வந்த விடுதலைப் புலி தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாயவே உத்தரவிட்டார் : சரத் பொன்சேகா தகவல்
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள், நோர்வே மற்றும் வெளிநாட்டு தரப்புக்கள் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன், சமாதான செயலக பிரதானி புலிதேவன் எனப்படும் சீவரட்ணம் பிரபாகரன் மற்றும் சிரேஸ்ட இராணுவ தளபதி ரமேஸ் ஆகியோரும் அவர்களின் குடும்பத்தினரும் படையினரிடம் சரணடையப்போவதை அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை பசில் ராஜபக்ச பின்னர், கோத்தபாய ராஜபக்சவுக்கு தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த மேமாதம் 17 ஆம் திகதி, அதிகாலை, இந்த மூன்று தலைவர்களும் தமது குடும்பத்தினருடன் பசில் ராஜபக்ச மற்றும் வெளிநாட்டு தரப்பு ஆலோசனையின்படி வெள்ளையாடை அணிந்து சரணடைவதற்காக வந்துள்ளனர். இதன் போதே கோத்தபாய ராஜபக்ச, 58 வது படையணித்தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வாவுக்கு எந்த ஒரு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் சரணடைய அனுமதிக்கவேண்டாம் அவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதன்படியே குறித்த தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.எனினும் அரசாங்கம் மே 18 ஆம் திகதி மோதல் ஒன்றின் போது நடேசன்,புலிதேவன் மற்றும் ரமேஸ் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிவித்திருந்தது. இந்த சம்பவம் தமிழீழ விடுதலைப்புலிகள் வெல்லமுள்ளிவாய்க்காலில் 100க்கு 100 மீற்றர் பிரதேசத்திற்குள் அகப்பட்டிருந்தபோதே இடம்பெற்றது என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இராணுவத்தளபதி கருத்து கூற மறுத்துள்ளார்
சரத் பொன்சேகாவின் இந்த தகவல் தொடர்பில், 58 வது படையணித்தளபதி சவேந்திர சில்வாவும், இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரியவும் தமது கருத்தை தெரிவிக்க மறுத்துள்ளதாக இலங்கையின் ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.
எனினும் நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், தமக்கு கடந்த மே மாதம் 17 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் தாம் சரணடையப் போகும் விருப்பத்தை தொலைபேசி மூலம் அறிவித்திருந்ததாக தெரிவித்திருந்தார்
அதேநேரம், தமிழீழ விடுதலைப்புலிகளின் இரண்டு தலைவர்கள், சரணடையப் போவதாக நோர்வே தரப்பு தமக்கு அறிவித்ததாக இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார். எனினும் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தமக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதி நாட்களில் உரியவர்களுடனான தொடர்புகள் அற்றுப்போயிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு செயலாளராக இருந்தவரும் தற்போது ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான தூதருமான பாலித கோஹன, செய்தி நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கையில், நடேசனிடம் இருந்தும் புலிதேவனிடம் இருந்தும் பல செய்திகளை பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, சமபவத்தின் போது, 58 வது படையணி தளபதி சவேந்திர சில்வாவுடன் இருந்த ஊடகவியலாளர்களே தமக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற விடயத்தை கூறியதாக ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளரே சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக அந்த ஊடகவியலாளர்கள் தம்மிடம் தெரிவித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவும் மறுப்பு
சரத் பொன்சேகாவின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துரைத்துள்ள ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச, தாம் நோர்வே தரப்பிடம் இருந்து புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பான எந்த ஒரு தகவலையும் பெற்றிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று தலைவர்கள் சரணடையப்போவதான தகவலை அறிந்திருக்கவில்லையா என பசில் ராஜபக்சவிடம் கேட்டபோது, இல்லை. தாம் அவ்வாறு கூறவில்லை.ஆனால் நோர்வே தரப்பினர் தம்முடன் தொடர்புக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
சகோதரர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இது தொடர்பான செய்தி எதனையும் நீங்கள் வழங்கவில்லையா? என அவரிடம் கேட்டபோது நோர்வே தம்முடன் தொடர்புகொள்ளாத முதல் விடயம் நடக்காத போது, இரண்டாவது விடயமும் நடந்திருக்க வாய்ப்பில்லை என பதிலளித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த கருத்துக்கள் செய்திகள் தொடர்பாக இலங்கையின் ஆங்கில ஊடகம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உதவி வேண்டுமா? இராணுவத்தில் தமிழர்கள் சேர்க்கப்படவேண்டும் ஒபாமா நிருவாகம் இலங்கைக்கு நிபந்தனை.
இலங்கையில் இறுதிக்கட்ட போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு ராணுவ உதவி செய்ய புதிய கட்டுப்பாடு விதிக்கும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
ஓரிரு நாளில் கட்டுப்பாடு
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சிங்கள ராணுவம் நடத்திய இறுதிக்கட்ட போரில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் பரவலாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. இப்பிரச்சினையை அமெரிக்கா கடுமையாக அணுக முடிவு செய்துள்ளது. இலங்கை ராணுவத்துக்கு ராணுவ உதவி செய்ய புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட, 2010 ஆம் ஆண்டின் நிதிஒதுக்க மசோதாவில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இம்மசோதா, செனட் சபையில் ஓரிரு நாளில் நிறைவேற்றப்பட உள்ளது.
அம்மசோதாவில், இலங்கைக்கு நிதி உதவி அளிப்பது குறித்து ஒரு பிரிவு இடம்பெற்றுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
போர் முடிந்த பிறகும், ஏராளமான தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு இருப்பதும், அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலைப் பற்றி செய்தி வெளியிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் கவலை அளிக்கிறது.
தமிழர்கள் மற்றும் இதர சிறுபான்மை இனத்-தவருடன் நல்லிணக்கம் ஏற்பட இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கவலை அளிக்கிறது.
இலங்கைமீது கட்டுப்பாடு
இறுதிக்கட்ட போரில் ஏராளமான படுகொலைகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் ஈடுபட்ட ராணுவத்தினரை சஸ்பெண்டு செய்தோ அல்லது நீதியின் முன்பு நிறுத்தியோ இலங்கை அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்து இருப்பதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க நிதிஒதுக்க கமிட்டியிடம் உறுதிப்படுத்த வேண்டும். அதுவரை, இலங்கைக்கு அமெரிக்கா ராணுவ உதவி எதுவும் அளிக்கக்கூடாது. இத்தகைய மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசோ, சர்வதேச அமைப்புகளோ விசாரணை நடத்தி இருக்கிறதா? என்றும் ஹிலாரி கிளிண்டன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இலங்கைக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள் நிதி உதவி அளிக்கவிடாமல் அந்த நிறுவனங்களில் உள்ள அமெரிக்க செயல் இயக்குனர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நிதி உதவி செய்வதற்கு எதிராக ஓட்டுப் போட வேண்டும்.
இந்த நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பிறகு, இலங்கைக்கு அளிக்கப்படும் அமெரிக்க ராணுவ உதவியை, சிங்-கள ராணுவத்தில் தமிழர்களை சேர்ப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் இலங்கை அரசு பயன்படுத்த வேண்டும். சிங்கள ராணுவத்தினருக்கு தமிழ் மொழி பயிற்சி அளிப்பதற்கும், மனித உரிமை பயிற்சி அளிப்பதற்கும் இந்த நிதி உதவியை பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
ஓரிரு நாளில் கட்டுப்பாடு
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சிங்கள ராணுவம் நடத்திய இறுதிக்கட்ட போரில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் பரவலாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. இப்பிரச்சினையை அமெரிக்கா கடுமையாக அணுக முடிவு செய்துள்ளது. இலங்கை ராணுவத்துக்கு ராணுவ உதவி செய்ய புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட, 2010 ஆம் ஆண்டின் நிதிஒதுக்க மசோதாவில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இம்மசோதா, செனட் சபையில் ஓரிரு நாளில் நிறைவேற்றப்பட உள்ளது.
அம்மசோதாவில், இலங்கைக்கு நிதி உதவி அளிப்பது குறித்து ஒரு பிரிவு இடம்பெற்றுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
போர் முடிந்த பிறகும், ஏராளமான தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு இருப்பதும், அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலைப் பற்றி செய்தி வெளியிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் கவலை அளிக்கிறது.
தமிழர்கள் மற்றும் இதர சிறுபான்மை இனத்-தவருடன் நல்லிணக்கம் ஏற்பட இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கவலை அளிக்கிறது.
இலங்கைமீது கட்டுப்பாடு
இறுதிக்கட்ட போரில் ஏராளமான படுகொலைகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் ஈடுபட்ட ராணுவத்தினரை சஸ்பெண்டு செய்தோ அல்லது நீதியின் முன்பு நிறுத்தியோ இலங்கை அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்து இருப்பதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க நிதிஒதுக்க கமிட்டியிடம் உறுதிப்படுத்த வேண்டும். அதுவரை, இலங்கைக்கு அமெரிக்கா ராணுவ உதவி எதுவும் அளிக்கக்கூடாது. இத்தகைய மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசோ, சர்வதேச அமைப்புகளோ விசாரணை நடத்தி இருக்கிறதா? என்றும் ஹிலாரி கிளிண்டன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இலங்கைக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள் நிதி உதவி அளிக்கவிடாமல் அந்த நிறுவனங்களில் உள்ள அமெரிக்க செயல் இயக்குனர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நிதி உதவி செய்வதற்கு எதிராக ஓட்டுப் போட வேண்டும்.
இந்த நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பிறகு, இலங்கைக்கு அளிக்கப்படும் அமெரிக்க ராணுவ உதவியை, சிங்-கள ராணுவத்தில் தமிழர்களை சேர்ப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் இலங்கை அரசு பயன்படுத்த வேண்டும். சிங்கள ராணுவத்தினருக்கு தமிழ் மொழி பயிற்சி அளிப்பதற்கும், மனித உரிமை பயிற்சி அளிப்பதற்கும் இந்த நிதி உதவியை பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
வடகொரியாவில் இருந்து கனரக ஆயுதங்களை சிறீலங்காவுக்கு எடுத்த சென்ற விமானம் ஒன்றை தாய்லாந்து அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். அதில் பயணம் செய்த சிப்பந்திகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆயுதங்களில் பெருமளவான ஏவுகணைகளும், கிறனைட் லோஞ்சர்களும் இருப்பதாக தாய்லாந்து தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆர்.பி.ஜி உந்துகணைகள், உந்துகணை செலுத்திகள், விமான எதிர்ப்பு சாம் ஏவுகணைகள், வெடிபொருட்கள் பெருமளவில் விமானத்தில் உள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.
விமான சிப்பந்திகளில் ஐந்து வெளிநாட்டவர்கள் அடங்கியுள்ளதுடன், விமானத்தில் 35 தொன் கனரக ஆயுதங்களும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இனம்தெரியாத இந்த விமானம் தாய்லாந்தின் டொன் மியன்ங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. வடகொரியாவில் இருந்து சிறீலங்கா நோக்கி பயணித்து கொண்டிருந்த ரஸ்யா தயாரிப்பான ஐஎல்-76 இராணுவ சரக்கு விமானம் தயாலாந்தில் எரிபொருள் நிரப்புவதற்காக அனுமதி கோரியிருந்தது.
அதனை தொடர்ந்தே தாய்லாந்து அதிகாரிகள் விமானத்தை கைப்பற்றியுள்ளனர். தற்போது 100 மேற்பட்ட தாய்லாந்து காவல்துறையினர் விமானத்தை சோதனை செய்து வருகின்றனர். விமான சிப்பந்திகளில் ஒரு பெலரேசியன், 4 கசாகஸ்தான் நாட்டு சிப்பந்திகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விமானம் சிறீலங்காவுக்கு சென்றதை தாய்லாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே விமானம் இன்று அதிகாலை தாய்லாந்தில் எரிபொருளை நிரப்பிய பின்னர் வடகொரியா சென்று ஆயுதங்களை ஏற்றிய பின்னர் மீண்டும் எரிபொருள் நிரப்புவதற்கு மாலை 4.00 மணிக்கு அனுமதி கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அரசின் தகவல்களை தொடர்ந்தே தாய்லாந்து காவல்துறையினர் விமானத்தை கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே விமானத்தில் இருந்த ஆயுதங்களை தாய்லாந்து அரசு இராணுவ வண்டிகள் மூலம் தரையிறக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த ஆயுதங்களில் பெருமளவான ஏவுகணைகளும், கிறனைட் லோஞ்சர்களும் இருப்பதாக தாய்லாந்து தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆர்.பி.ஜி உந்துகணைகள், உந்துகணை செலுத்திகள், விமான எதிர்ப்பு சாம் ஏவுகணைகள், வெடிபொருட்கள் பெருமளவில் விமானத்தில் உள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.
விமான சிப்பந்திகளில் ஐந்து வெளிநாட்டவர்கள் அடங்கியுள்ளதுடன், விமானத்தில் 35 தொன் கனரக ஆயுதங்களும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இனம்தெரியாத இந்த விமானம் தாய்லாந்தின் டொன் மியன்ங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. வடகொரியாவில் இருந்து சிறீலங்கா நோக்கி பயணித்து கொண்டிருந்த ரஸ்யா தயாரிப்பான ஐஎல்-76 இராணுவ சரக்கு விமானம் தயாலாந்தில் எரிபொருள் நிரப்புவதற்காக அனுமதி கோரியிருந்தது.
அதனை தொடர்ந்தே தாய்லாந்து அதிகாரிகள் விமானத்தை கைப்பற்றியுள்ளனர். தற்போது 100 மேற்பட்ட தாய்லாந்து காவல்துறையினர் விமானத்தை சோதனை செய்து வருகின்றனர். விமான சிப்பந்திகளில் ஒரு பெலரேசியன், 4 கசாகஸ்தான் நாட்டு சிப்பந்திகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விமானம் சிறீலங்காவுக்கு சென்றதை தாய்லாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே விமானம் இன்று அதிகாலை தாய்லாந்தில் எரிபொருளை நிரப்பிய பின்னர் வடகொரியா சென்று ஆயுதங்களை ஏற்றிய பின்னர் மீண்டும் எரிபொருள் நிரப்புவதற்கு மாலை 4.00 மணிக்கு அனுமதி கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அரசின் தகவல்களை தொடர்ந்தே தாய்லாந்து காவல்துறையினர் விமானத்தை கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே விமானத்தில் இருந்த ஆயுதங்களை தாய்லாந்து அரசு இராணுவ வண்டிகள் மூலம் தரையிறக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்காக நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய தனது அறிக்கையின் முதலாவது வரைபை நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் மதியுரைக்குழு நிறைவு செய்துள்ளது.இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான உருவாக்கக்குழுவுக்கான மதியுரைக்குழு டிசம்பர் 3- 6 வரையிலான திகதிகளில் தனது சந்திப்பினை லண்டன் மாநகரில் மேற்கொண்டது.
நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்காக நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய தனது அறிக்கையின் முதலாவது வரைபை இச் சந்திப்பில் மதியுரைக்குழு நிறைவு செய்தது.
புலத்துத் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து முன்வெக்கப்பட்டிருந்த பல்வேறு கேள்விகள், கருத்துக்கள், ஆலோசனைகள் இவ் வரைபில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
அடித்தளமாக அமைய வேண்டிய வழிகாட்டிக் கோட்பாடுகள், அறிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து தேர்தல்கள் நடைபெற்று நாடு கடந்த தமிழீழ அரசு அமையும் நாள் வரையிலான காலப்பகுதியில் மதியுரைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் ஈமத் தமிழ் மக்களின் நலன்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அறிஞர் குழாம் ஒன்று ஒழுங்கமைக்கப்படல் ஆகியன உள்ளடங்கியிருந்தன.
மதியுரைக்குழு, நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான பிரித்தானியச் செயற்பாட்டுக்குழுவினருடனும் சந்திப்பினை மேற்கொண்டு செயற்திட்டத்தை முன்நோக்கி நகர்த்துவது தொடர்பாகக் கருத்துப்பரிமாற்றங்களையும் நிகழ்த்தியது.
மேலும், லண்டன் மாநகரில் வாழும் ஈழத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்பினை மேற்கொள்ளும் வாய்ப்பும் மதியுரைக்குழுவுக்குக் கிடைத்தது.
இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான மனிதாபிபான நெருக்கடிகளைக் கவனத்திற் கொண்ட மதியுரைக்குழு, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது பெற்றோரைப் பிரிந்து தடுப்பு முகாம்களில் வாடும் பிள்ளைகளை பெற்றோரோடு ஒன்று சேர்ப்பது, அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அனைத்துலக பாதுபாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றிற்கான வழிவகைகளை ஆழ்ந்து ஆராய்ந்தது. இவ்வாறு தடுப்பு முகாம்களில் வாடும் பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகளின் தகவல்களை மதியுரைக்குழு தொடர்ச்சியாகச் சேகரித்து ஆவணப்படுத்தி வருகிறது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுடன் மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் தங்கு தடையில்லாத தொடர்பைப் பேணிப் பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்குமாறு அனைத்துலக சமூகத்தினை மதியுரைக்குழு இச் சந்தர்ப்பத்தில் கோருகிறது.
இம் மக்கள் மீளக்குடியமரும் போது அவர்களது பாதுகாப்பு மற்றும் ஏனைய நலன்கள் குறித்தும் அவர்களின அடிப்படை மனித உரிமைகள் மீறப்படாது பாதுகாக்கப்படுவது உட்பட ஏனைய தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுகின்றனவா என்பது குறித்தும் மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் கண்காணிப்பு செய்ய அனுமதிக்கப்படுவதனையும் அனைத்துலக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும்.
மக்கள் தடுப்பு முகாம்களிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதனையும், இவ்வாறு விடுவிக்கப்பட்ட மக்கள் புதிய இடங்களில் விசாரணை, மீள் கைது போன்ற துன்புறுத்தல்களுக்கு உள்ளாகாமல் இருக்கக்கூடிய உத்தரவாதங்கள் வழங்கப்படுவதனையும் அனைத்துலக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மதியுரைக்குழு கோருகிறது.
நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான முயற்சியில் தனது பங்களிப்பை தொடர்ந்தும் வழங்குவதில் மதியுரைக்குழு தனது முழுமையானபற்றுறுதியை வெளிப்படுத்துகிறது.
நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்கவதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கை தொடர்பான வேலைகள் வகுக்கப்பட்டு இந்த திட்டத்திற்கு அமைவாக முன்னேறி வருவதனையும், 2010 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் இவ் அறிக்கை மக்கள் முன் வைக்கப்படும் என்பதனையும் மதியுரைக்குழு மகிழ்வுடன் அறியத் தருகிறது.
வி. உருத்ரகுமாரன்
இந்தோணிசியா கடற்பரப்பில் தடுத்து வைக்கபட்டுள்ள அகதிகளில் பெண் ஒருவர் மீது கடற்ப்படை சிப்பாய்ஒருவர் தப்பாக நடக்க முயற்சி செய்தாக தெரிவிக்கபடுகிறது? வீடியோ இணைப்பு
இந்தோணிசியா கடற்பரப்பில் தடுத்து வைக்கபட்டுள்ள அகதிகளில் பெண் ஒருவர் மீது இந்தோணிசியா கடற்படை சிப்பாய் ஒருவர் தப்பாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோணிசியா கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் தனது குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்டதை அடுத்தும் அதே நேரம் கப்பலில் இருக்கும் இன்னொருவருக்கும் கண்ணில் கோளறு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மொழிப்பிரச்சனை காரணமாக மொழி பெயர்ப்பாளராகவும் இந்தோணிசியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கு கடற்ப்படை சிப்பாய் ஒருவர் தப்பாக நடக்க முயற்சி செய்தாக தெரிவிக்கபட்டுள்ளது
"ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் கருத்துக்களை உள் வாங்கி அதற்கு அமையவே தீரமானம் எடுக்கும்."; என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார் "ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மர்றுபட்ட கருத்துக்களையும்; செய்திகளையும் வெளியிட்டு வந்தாலும் அது அவர்களின் சொந்த கருத்தேயன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்லஎமது கட்சி பாராளுமன்ற உறுப்பினரக்ளைப் பொறுத்த வரை கொள்கை ரீதியாக ஒன்று பட்டு உறுதியுடன் இருக்கின்றார்கள். இந் நிலையில் இது தொடர்பாக தமிழ் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை " என்றும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளள சில விடயங்கள் வருமாறு:-
"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே பல தடவைகள் கூடி பல்வேறு கருத்துக்களை ஆராய்ந்துள்ளார்கள்.இதன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்டங்களுக்கு சென்று மக்களின் கருத்துக்களை அறியும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்
தமிழ் மக்களின் கருத்துக்களின் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும்.தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியான வேட்பாளரொருவரை நிறுத்துவதில்லை என்று ஏக மனதாக முடிவெடுத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்த வரை எந்த வேட்பாளரை ஆதரிப்பது ?அல்லது தேர்தல் பகிஸ்கரிப்பா ? அல்லது வாக்கு சீட்டு நிராகரிப்பா ? போன்ற விடயங்கள் குறித்தும்
பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது ?என்பது குறித்தும் ஆழமாக பரிசீலித்துமே இறுதி முடிவு எடுக்கப்படும் .
மக்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களே தவிர பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக மக்கள் இல்லை என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.." என்றும் கூறப்பட்டுள்ளது.
இலங்கை விடயத்தில் யதார்த்தபூர்வ கொள்கையை உருவாக்குங்கள்: ஒபாமாவிடம் நோர்வே ஈழத்தமிழர் அமைப்பு வலியுறுத்து
இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்க செனட்டின் வெளிவிவகாரக் குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து கவலை தெரிவித்துள்ள நோர்வே ஈழத் தமிழர்கள் கவுன்ஸில் தமிழர் தேசியப் பிரச்சினை மற்றும் அமெரிக்காவின் நலன் ஆகியவற்றுக்கு உகந்த யதார்த்தபூர்வமான கொள்கைத் திட்டமொன்றை உருவாக்குமாறு அமெரிக்க ஜனாதிபதியைக் கோரியுள்ளது. நோர்வேயின் ஈழத் தமிழர்கள் கவுன்ஸில் அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெறுவதற்காக நோர்வேக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்புப் பேரணியொன்று நோர்வேயில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை ஒபாமாவிற்கான மேற்படி கடிதத்தில் நோர்வே தமிழர்கள் அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு :
நோர்வேயில் வாழும் ஈழத் தமிழர்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட ஈழ மக்களின் நோர்வே கவுன்ஸில், அமெரிக்க செனட் குழு இலங்கையுடனான உறவுகளை மீள வடிவமைப்பது தொடர்பில் தெரிவித்துள்ள பரிந்துரைகள் குறித்து கவலை அடைந்துள்ளது.
ஈழத் தமிழர்கள் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் கடப்பாட்டை இந்த அறிக்கை முற்றிலுமாக அலட்சியம் செய்துள்ளது. மாறாக செனட் குழுவின் இவ்வறிக்கை அரசியல் தீர்வு குறித்தோ அல்லது மனிதாபிமான நிவாரணம் பற்றியோ எவ்வித பரிந்துரையையும் முன்வைக்கவில்லை.
இலங்கை அரசை அமெரிக்காவின் கேந்திர நலன்களுக்காகப் பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பலப்படுத்துவதன் அவசியம் பற்றியே அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பூகோள கேந்திர நலன் குறித்த கரிசனைகளை நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம்.
இதேவேளை அமெரிக்காவின் நலனும், இலங்கைத் தமிழர்களின் நலனும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டிருப்பதை செனட் குழுவின் பரிந்துரைகள் கணக்கில் எடுக்காதமை கவலை அளிக்கின்றது.
மாறாக அதற்கு எதிராக அந்த அறிக்கை அமைந்துள்ளது. தமிழர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்கள் அமெரிக்காவின் நண்பர்களாகவே உள்ளனர்.
வெளிவிவகார கொள்கைகளில் புதிதாகப் புகுத்தப்படும் விடயங்கள் கேந்திர முக்கித்துவம் வாய்ந்த தென் இந்திய இலங்கைப் பிராந்தியத்தில், தந்திரோபாய முக்கியத்துவம் பெற்ற தமிழ் அமெரிக்க உறவிற்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
இலங்கைத் தமிழர் விடயத்திற்கு அரசியல் தீர்வே அவசியம் என அமெரிக்கா எப்போதும் தெரிவித்துள்ளது.
எனினும் உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஈழத்தமிழர்கள் இராணுவத் தீர்வின் துயரத்தையும் அதிர்ச்சியையும் சந்திக்கும் துரதிஷ்ட நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழர்களின் நீண்டகால அபிலாஷைகளுக்கான அரசியல் தீர்வைக் கைவிடுவது அல்லது தள்ளிப் போடுவது எவ்வாறு எவருக்காவது பூகோள ரீதியில் நண்மையளிக்கும் என்பது புதிராகவே உள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.
இராணுவ ஆட்சியில் எனக்கு ஆர்வம் இருந்திருந்தால், அதனை முன்னர் எப்போதோ யுத்தம் வெல்லப்படுவதற்கு முன்பே கூட செய்திருப்பேன். ஆனால் நான் ஒழுங்குக் கட்டுப்பாடுள்ள இராணுவத்தைத் தளபதியாக வழிநடத்திய ஒழுக்கம்மிக்க ஒரு ஜெனரல். எனவே அப்படிச் செய்யமாட்டேன்.இப்படிக் கூறியிருக்கின்றார் முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடுபவருமான ஜெனரல் சரத் பொன்சேகா.
"அசோசியேட்டட் பிரஸ்" செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு:
யுத்த வெற்றி என்ற போர்வையின் கீழ் யாராவது தனது குடும்பத்தின் கௌரவத்தை உயர்த்த முயன்றால் அல்லது தனது விசுவாசிகளின் குடும்பத்தினரை ஊக்குவித்தால் அது உண்மையான சமாதானமாக அமையாது. அமைதி திரும்பிவிட்டது என நீங்கள் சொல்ல முடியாது.
நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகளவு அதிகாரங்களைக் குறைப்பேன். நாடாளுமன்றத்தைப் பிரதமரின் தலைமையின் கீழ் பலப்படுத்துவேன்.
இராணுவ ஆட்சி பற்றி நான் ஆர்வம் கொண்டிருந்திருந்தால் எப்போதோ அதனை செய்திருக்கலாம். யுத்தத்தை வெல்வதற்கு முன்னரே அதனைச் செய்திருக்க முடியும். நான் ஓர் ஒழுக்கக் கட்டுப்பாடு நிறைந்த இராணுவத் தளபதி. ஒழுக்கம் நிறைந்த இராணுவத்திற்கு தலைமை வகித்தார்.
யுத்தம் குற்றம் இழைக்கப்பட்டதாக நான் அறியவில்லை
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு, அரச தலைவர்களுக்காகச் செயற்படும் குழுக்கள் காரணமாக இருக்கலாம். இராணுவத்தைப் பொறுத்தவரை எந்த யுத்தக் குற்றமும் இழைக்கப்பட்டதாக நான் அறியவில்லை. படையினரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நான் அவதானித்தேன்.
பொதுமக்களின் பாதுகாப்பை நாங்கள் அலட்சியம் செய்திருந்தால் எம்மால் காப்பாற்றப்பட்ட மூன்று லட்சம் பொதுமக்களில் அரைவாசிப் பேர் கொல்லப்பட்டிருப்பர். இராணுவத் தளபதியாக இருந்தபோது, தமிழர்களுக்கு நீதி வழங்கினேன். பயங்கரவாதத்தை அழித்து பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றினேன்.
நான் ஜனாதிபதியானால், சகல சமூகங்களுக்கும் சமமான நீதி மற்றும் உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வேன். எனினும், தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக எதிர்கால நாடாளுமன்றமே தீர்மானிக்கமுடியும் என்றார் அவர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மானும் மரணமடைந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளது.இந்த உறுதிப்படுத்தல் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்று திரும்பிய ஜனாதிபதியின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரை உள்ளடக்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு முடிவுறுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கையின் ஆங்கில இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பிரபாகரனினதும் பொட்டு அம்மானினதும் மரணங்களை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை இலங்கையிடம் இந்தியா கோரியிருந்தது. இந்த கோரிக்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் மற்றும் அப்போதைய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கடந்த மே மாதத்தில் இலங்கை வந்திருந்த போது கோரியிருந்தனர்.
இதேவேளை குறித்த இருவரினதும் மரணங்களை உறுதிப்படுத்திய சான்றிதழ்கள் தமிழக பூந்தமல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணையை முடிவுறுத்தமுடியும் என இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான் உட்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் 26 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதில் நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரரிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நூற்றாண்டில் ஐரோப்பிய படையெடுப்பாளர்களிடம் இறைமையையும், சுதந்திரத்தையும் ஈழத்தமிழ் மக்கள் இழந்ததின் பின் 19ஆம் நூற்றாண்டில் அதனை சிங்களவர்கள் கையில் விட்டுச் சென்றனர் ஆங்கிலேயர். அதன் பின் தொடர்ந்த சிங்கள பேரினவாத வன்முறை தழுவிய அடக்குமுறையைத் தொடர்ந்தும், 1972ல் சிங்களம் தனித்துவமாக அமுல் நடத்திய குடியரசு அரசியல் திட்டத்தைத் தொடர்ந்தும், 1976ல் அன்றைய தமிழர் தலைவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்திற்கு வந்தனர்.இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் தனித்துவமான தேசியமும், பாரம்பரியத் தாயகமும், சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இத் தீவின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழ் ஈழ அரசு மீண்டும் உருவாக வேண்டும் என அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை வட்டுக்கோட்டைத் தொகுதியில் மேற்கொண்டனர்.
இலங்கைத் தீவி;ல் அனைத்துத் தமிழ்க்கட்சிகளாலும் 1976ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு, 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் அமோக ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மான அரசியல் அடிப்படைகளின் இன்றைய வலுவுடைமையைக் கணிக்க கனடா வாழ் ஈழத்தமிழர்கள் மத்தியில் வரும் டிசம்பர் 19ஆம் நாள் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 9 மணிவரை கனடா தழுவிய தமிழ் மக்கள் வாக்குக்கணிப்பு நடைபெறும் என தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழர் பெரும்பான்மையான வாழும் Nhரரன்ரோ பெரும் பாகமான ரொரன்ரோ, ஸ்காபுரோ, எற்றோபிக்கொ, மாக்கம், றிச்மண்ட்கில், வோன், மிசுசாகா, பிரம்டன், பிக்கரிங், ஒட்டாவா, மொன்றியல், வோட்டலு, கோன்வேல், வின்ப்பெக், கல்கரி, எட்மிண்டன், வன்கூவர், கலிபக்ஸ் ஆகிய பெரு நகரங்களில் 25க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையஙிகள் அமையவுள்ளதாக தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள், அதாவது 1991ஆம் ஆண்டிற்கும் அதற்கு முன்னரும் பிறந்தவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இலங்கைத்தீவில் பிறந்த தமிழ் பேசும் மக்கள் அனைவரும், அவர்களை திருமணம் செய்தவர்களும், அவர்களின் வழித்தோன்றல்களும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் எனவும் தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு அறிவ்த்துள்ளது.
தேர்தலுக்கான பூர்வாங்க வேலைகள் முடிவடைந்துள்ளன எனவும், கனடிய தேர்தல் கம்பனி ஒன்றின் மேற்பார்வை அணுசரனையிலேயே தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று திருப்புமுனையாகவும் வரலாறாகவும் அனையவுள்ள இத்தேர்தலில் கலந்து கொள்ள கனடிய ஈழத்தமிழ் மக்கள் அதீத ஆர்வம் காட்டுவதாகவும் எமது பெருநகர செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாக்குக்கணிப்பு குறித்த தரவுகளுக்கும், வாக்களிப்பை சிறப்புற நடாத்த அணுசரனையாக முன்கூட்டிய வாக்காளர் பதிவிற்கும் இணையத்தளம்: www.tamilelections.ca இற்கோ அல்லது ரொரன்ரோ 416-953-7778, ஸ்காபரோ 416-451-1365 அல்லது 647-299-4624 அல்லது 416-835-1700 அல்லது 416-939-9481, மிசுசாகா 416-833-9016 அல்லது 416-830-4305, பிரம்டன் 416-917-3358 அல்லது 416-319-0206, எற்றோபிக்கோ 416-901-9368 அல்லது 416-545-7955, மாக்கம் 647-284-9058, வோன் 647-822-4972, மொன்றியல் 514-621-7899 என்ற தொலைபேசி இலங்கங்களுடனோ உடன் தொடர்பு கொள்ளுமாறு தமிழ் மக்கள் வேண்டப்படுகின்றனர்.
எதிர்வரும் 12ம், 13ம திகதிகளில் பிரான்சு தழுவிய ரீதியில் நடைபெறப்போகும் கருத்துக்கணிப்பு தேர்தலின் பங்கு கொண்டு வாக்களித்து பெரு வெற்றியை பிரான்சு வாழ் தமிழ்மக்கள் தாயத்திற்கு பெற்றுக்கொடுக்குமாறு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:-
அன்பான தமிழீழ மக்களே!
1948 ம் ஆண்டு இலங்கைதீவு ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து விடுபட்டு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து அந்ந மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ்மக்களாகிய எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டதும் அவற்றை பெற்றுக்கொள்வதற்காக அகிம்சை வழியில் போராடியதும், அதனை இலங்கை பேரினவாத அரசுகள் வன்முறைமூலம் எமது போராட்டத்தை ஒடுக்கியதால் 1976ம் ஆண்டிலிருந்து எமது உரிமையை மீட்டெடுப்பதற்காகவும், எமது அடையாளங்களை காப்பதற்காகவும் ஆயுதப்போராட்ட தமிழ் மக்களின் பேரதரவுடன், அர்ப்பணிப்புடனும் ஆரம்பிக்கப்பட்டது.
நேர்த்தியான தலைமையினாலும் உயிர் அர்ப்பணிப்பினாலும் மண்ணின் மானம் காக்க எதையும் இழக்க தயாரான சந்ததியின் போராட்டத்தை சர்வதேசம் பயங்கரவாத என்கின்ற முத்திரையை குத்தி இன்று அதை இல்லாதொழித்துள்ளது. இந்த வகையில் தான் சகல உரிமைகளையும் இழந்த தமிழ் மக்கள் தாம் இழந்த உரிமைகளை மீளப்பெற ஐனநாயகவழியில் தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்த செயற்பாடுகளைச் செய்வதற்காகவும் இதுவரை காலமும் தமிழ் மக்களின் இறையாண்மையை பெறுவதற்காக செயற்பட சகல தமிழ் அமைப்புக்களும் இணைந்த நாடு தழுவிய ரீதியல் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் பேரவை என்ற அமைப்பினை உருவாக்கியதனூடாக வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை ஏற்று இறைமையுள்ள தமிழீழ தாயகத்தை நிறுவுவதோடு தமிழரின் பாரம்பரிய கொடியான புலிச்சின்னத்தை கொண்ட கொடியே தமிழரின் தேசியக்கொடி என்ற கொள்கையோடும் செயற்படுவதோடு எமது தேசிய ஆன்மாவின் சிந்தனைக்கு அமைய பாதைகள் வேறாயினும், பயணமும், இலட்சியமும் ஒன்றாகவே அமையும் பட்சத்தில் நாடுகடந்த தமிழீழ அரசுஇ உலகத்தமிழர் பேரவையுட்பட ஏனைய அமைப்புகளுடன் இந்த மக்கள் பேரவை இணைந்து செயற்படும்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் மக்கள் பேரவையின் அடிப்படை கொள்கைகளாக அமைவதோடு மக்கள் பேரவையில் உள்ள உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகளாக கருதப்படுவர்.
இவ்வாறு இவ் ஆண்டு ஆரம்பத்தில் உருவாக்கம் கண்டுள்ள பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையான பல செயற்திட்டங்களை நடாத்தியிருந்தது. இதில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் சில பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாநில மாநகர முதல்வர்களுடன் பல்வேறு சந்திப்புகள்
அரச, அரசசார்பற்ற மற்றும் சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்கள், மனிதவுரிமைகள் அமைப்பு, எல்லைகள் அற்ற அமைப்பு போன்றவற்றுடன் சந்திப்புக்கள்.
சர்வதேச அமைப்புகளிடம் தமிழ்மக்களுக்கான மனிதாபிமான உதவி செய்யக்கோரியமை உம்(வணங்கா மண்). இலங்கை அரசிற்கு பெரும் பெருளாதார பங்களிப்பை கொடுத்து வந்த ஜி,எல்,பீரிஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட நடிவடிக்கை.
இவ்வாறாக ஏற்படுத்தப்பட்ட பல சந்திப்புக்களின் பயனாக தாயகத்தில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் எற்பட்ட தமிழ்மக்களுக்கு மேலான மனிதப்படுகொலையும், மனிதவுரிமை மீறல்களும், பேரழிவுகள் தொடர்பில் சுதந்திர விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையை பிரெஞ்சு அரசாங்கம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழினத்தின் பேரளிவுக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் கொண்டு வரும் அண்மைகால செயற்பாடுகள் இலங்கை அரசை சீற்றம் கொள்ள வைத்துள்ளது. இவ்வகையான செயற்பாடுகளுக்கு உலகம் வாழ் தமிழீழ மக்கள் கடும் குளிருக்கும், வெயிலுக்குள்ளும், மழைக்குள்ளும், குழந்தைகள் முதல் பெரியவர்களும் வீதிகளில் இறங்கி போராடியதும் இன்றுவரை ஒன்றுகூடல்கள் நடாத்திவருவதும் இவ்வாறான ஐனநாயக வழிப்போராட்டங்கள் எல்லாமே எல்லாநாடுகளிலும் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்ற விடயமாகவே பார்க்கப்பட்டன.
புலம் பெயர்ந்த மண்ணில் வாழும் எமது மக்களின் தாயக பற்றினை சீர்குலைக்கவும், அவர்களின் நற்பெயரினை கலங்கப்படுத்தவும், தமிழ் மக்களின் மனிதநேயப்பணியாளர்கள் கைதுகளும், அவர்கள் மீது நீதிக்கும், உண்மைக்கும் மாறான தீர்ப்பும், இன்னும் பல்வேறு திட்டமிட்ட செயற்பாடுகளையும் பின்புலமாக நின்று இலங்கை தூதரகங்களே நடாத்தி வருகின்றன.
இவர்களின் செயற்பாடுகளை புறம் தள்ளிய எமது மக்கள் கடந்த நவம்பர் 27 மாவீரர்நாள் நிகழ்வில் இதுவரைகாலமும் இல்லாத வகையில் மக்களின் வருகையும், பங்களிப்பும், உணர்வும் மெய்சிலிர்க்க வைத்துள்ளதும், தமிழீழ மக்கள்;ள பேரவையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் தம்மை அங்கத்தவர்களாகவும் இணைத்துக்கொண்டுள்ளனர்.
இந்த வகையில் தற்போதைய செயற்பாடாக எதிர்வரும் 12ம், 13ம திகதிகளில் பிரான்சு தழுவிய ரீதியில் நடைபெறப்போகும் கருத்துக்கணிப்பு தேர்தலின் வேலைதிட்டங்கள் யாவும் நிறைவு பெற்றுள்ளன.
இது சம்பந்தமாக மாவட்டங்கள், மாநில, மாநகர ரீதியில் தமிழ் மக்களுக்காக சந்திப்புக்ள் தமிழீழ மக்கள் பேரவையால் தொடர்சியாகவும் மேற்கொள்ளபட்டன. இச்சந்திப்புக்களில் மக்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் தெரிவித்திருந்ததும், ஐயப்பாடுகளையும் கேட்டுத்தெரிந்து கொண்டனர். இக்கருத்துக்கணிப்பில் இளைய சமூகத்தினர் மிகவும் கரிசணை கொண்டுள்ளதும் அதற்கான காரணம் தமது மண்ணின் விடுதலைக்காகவும், தமது மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும் எனது வாக்கு கணிப்பு பயன்படப்போகின்றது என்பதை நினைக்கும் போது சந்தோசமாவுள்ளது என்று கண்ணீர் மல்க கூறியபோது அது அவர்களின் ஆனந்தக்கண்ணீரா அல்லது வேதனையின் உள்ளக்குமுறல்களா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறு பல பெரியவர்களும் இதுவரை தாயகத்தில் இருக்கும் போது எவருக்கும் வாக்களிக்காதவர் தான் இப்பொழுது ஒரு நல்ல விசயத்ததிற்காக வாக்களிக்கப்போவதையும் அதனால் சந்தோசமான அந்ந நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்தாகவும் குறிப்பிட்டிருந்தார். இன்னும் பலர் இத்தேர்தலின் முக்கியத்துவம் கருதி வேலைதிட்டங்களை மேற்கொள்வதற்காக வந்து இணைந்து கொண்டுள்ளனர்.
இத்துடன் தமிழ்மக்களின் தொடர்பு சாதனங்கள் வரலாற்றின் கடமையை உணர்ந்து தமது பங்களிப்பை நல்கி வருகின்றன. வானொலிகள், இணையத்தளங்களில் தமிழ்மக்கள் கலந்து கொண்டு தமது ஐயப்பாடுகளையும் வாக்களிப்பு நிலையங்களின் விபரங்களை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அனைத்து தமிழர் அமைப்புக்களின் ஒத்துழைப்புடனும், பங்களிப்புடனும் நடைபெறவிருக்கும் கருத்துக்கணிப்பு தேர்தலில் பங்கு கொண்டு வாக்களித்து பெரு வெற்றியை பிரான்சு வாழ் தமிழ்மக்கள் தாயத்திற்கு பெற்றுக்கொடுப்பார்கள் என்று நம்பிக்கை கொள்கின்றோம்.
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை
ஜனாதிபதி, அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்கு திருட்டு ஒப்பந்தங்கள் செய்கின்றார்: தேசிய பிக்குகள் முன்னணி
நழுவிச் செல்லும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு சூழ்ச்சிகளையும் திருட்டு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வருகிறார். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. தேசப்பற்று, தேசத்துரோகம் மற்றும் சூழ்ச்சிகள் என்பன பற்றி பரவலாக பேசப்படும் இந்த சந்தர்ப்பத்தில் உண்மையான தேசத்துரோக சூழ்ச்சிக்காரர்கள் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமையாகும் என்று தேசிய பிக்குகள் முன்னணியின் ஊடகச் செயலாளர் வகல்லே உதிதஹிம் தேரர் கூறினார்.
தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், பிரபாகரன் இல்லாத போதும் அவருடைய ஈழக்கனவை நிறைவேற்றிக்கொள்ளும் வகையிலான டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கிப் போகின்றது. இது மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகும்.
அதிகாரத்தை விட நாட்டை பற்றியே அதிகமாக சிந்திக்கவேண்டிய தருணமே இதுவாகும், ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த தருணத்தில் தனது அதிகாரத்திற்காக பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த நாட்டை பிரிவினைவாதிகளுக்கு காட்டிக்கொடுக்க முயற்சிக்கின்றார். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவரும் வாய்திறக்காமல் இருக்கின்றார்கள்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 10 அம்ச கோரிக்கைகளுடனேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். அக்கோரிக்கைகளில் சுயாட்சி மற்றும் 13 ஆம் திருத்தச்சட்டத்திற்கு அப்பாற் சென்று அதிகார பரவலாக்கல் மேற்கொள்ளல் போன்ற அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவினை வாத கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளது. இவ்வாறான தேசத்துரோக சூழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் எவரும் எந்த கருத்துக்களையும் தெரிவிக்காமல் இருக்கின்றார்கள்.
எனவே இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய மற்றும் பொதுமக்கள் ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகள் தமது நிலைப்பாடுகளை தெரிவிக்கவேண்டும். இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் தமது அதிகாரத்திற்கு சவாலான ஒரு சூழ்நிலைவரும் போதும் இவ்வாறான இரகசிய ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளார்கள். எனவே தான் மஹிந்த ராஜபக்ஷவும் தமது அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்வதற்காக அவ்வாறான இரகசிய ஒப்பந்தங்களை செய்து கொள்கின்றார்கள்.
எனவே இப்பாரதூரமான இந்த இரகசிய ஒப்பந்தம் தொடர்பில் நாட்டின் பிரஜைகளான நாம் ஒவ்வொருவரும் அவதானத்துடன் செயல்படவேண்டும். தேசப்பற்றாளர்கள் என்று தம்மை இனங்காட்டிக்கொண்டு இரகசியமாக மேற்கொள்ளும் இவ்வாறான தேசத்துரோக சூழ்ச்சிகளை நாம் தோல்வியடையச் செய்யவேண்டும்.
அன்று ஜனாதிபதியுடன் இருந்தவர்கள் இன்று எதிரணியில் சென்று செயற்படுவதற்கான காரணமென்ன? நாட்டை தேசத்துரோகிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
பயங்கரவாதத்திற்கெதிராக பெற்றுக்கொள்ளப்பட்ட இராணுவ வெற்றியை பாதுகாக்கவேண்டும் என்பதற்காகவேயாகும்.
தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை நடத்துவதானது தமது சூழ்ச்சி நடவடிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே என்பது தற்போது தெட்டத்தெளிவாகியுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கையாளர் உருத்திரகுமாரனுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டாது எனவும், அவர் அமெரிக்காவில் எவ்வித குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகவில்லை எனவும் இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் அமரிக்கா எந்த ஒரு தரப்புக்கும் ஆதரவாக செயற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளக் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்கா இலங்கையின் சுதந்திரமானதும் நியாயமானதுமான ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் மாற்றம் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இன்னும் இலங்கையின் வர்த்தக பங்காளியாக திகழ்கிறது. அதேநேரம் கல்வி,விஞ்ஞானம் மற்றும் கலாசாரங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் வலுவாகவே உள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தோல்வியின் மூலம் இலங்கையில் நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன என குறிப்பிட்ட அவர் இலங்கை மக்கள் இணக்கமான ஒரு தீர்வுக்காகவும் புனர்நிர்மாணத்திற்காகவும் உழைக்கவேண்டும் என கேட்டுள்ளார்
ஊடக சுதந்திரம் உட்பட்ட அனைத்து சுதந்திரங்களும் இலங்கையில்,பேணப்பட்டு மனித உரிமைக்காப்புகள் முன்னேறவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
இலங்கையில் கடத்தல்களும் காணாமல் போதல்களும் தற்போது குறைந்துள்ளமை வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் அமெரிக்காவுக்கு வந்திருந்தபோது யுத்தக்குற்றம் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் அவர் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.
அதேநேரம், அமரிக்காவில் வசிக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கையாளர் உருத்திரகுமாரனுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைளும் எடுக்கப்படமாட்டாது எனத் தெரிவித்த அவர், உருத்திரகுமாரன் அமெரிக்காவில் எவ்வித குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்
இலங்கையிலிருந்து மூன்று உயர் அதிகாரிகளைக் கொண்ட பிரதிநிதிகள் குழு ஒன்று இன்றிரவு புதுடெல்லி சென்றுள்ளது. இலங்கை ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபஷ, ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரை இந்தக் குழுவினர் நாளை வியாழக்கிழமையன்று சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளனர்.
இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுற்றிருக்கும் நிலையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.
தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காக, இந்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் 500 கோடி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. இந்த நிலையில், அங்கு நடைபெறும் மீள்குடியேற்றம் தொடர்பாக இந்தியாவிடம் எடுத்துரைக்கவும், மறுவாழ்வுத் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கவும் இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக, இலங்கையில் ஜனவரி இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வவுனியாவில் அமைந்துள்ள மெனிக்பாம் தடுப்பு முகாமுக்கு இன்று புதன்கிழமை மகிந்த ராஜபக்ச பயணம் செய்துள்ளார். அங்கு தமிழ் மக்கள் மத்தியில் தமிழில் உரையாற்றியுள்ளார்
எதிர்வரும் சனவரி 31ம் நாளுக்குள் இடம்பெயர்ந்த மக்கள் தங்களின் சொந்த இடங்களக்கு மீளக் குடியமர்த்தப்படுவர் எனக் கூறியுள்ளார்.
இதேநேரம் இன்று முதல் முதலாக மன்னார் சென்ற மகிந்த ராஜபக்சவை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராசப்பு ஜோசப் அவர்கள் வரவேற்றார்.
அத்துடன் மன்னார் மடுமாதா கோயிலுக்குச் சென்று இறைவழிபாட்டில் மகிந்த ஈடுபட்டுள்ளார்.
எதிர்வரும் சனவரி 31ம் நாளுக்குள் இடம்பெயர்ந்த மக்கள் தங்களின் சொந்த இடங்களக்கு மீளக் குடியமர்த்தப்படுவர் எனக் கூறியுள்ளார்.
இதேநேரம் இன்று முதல் முதலாக மன்னார் சென்ற மகிந்த ராஜபக்சவை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராசப்பு ஜோசப் அவர்கள் வரவேற்றார்.
அத்துடன் மன்னார் மடுமாதா கோயிலுக்குச் சென்று இறைவழிபாட்டில் மகிந்த ஈடுபட்டுள்ளார்.
புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இவ்வருடம் மே மாதம் இறுதிச் சமர் நடைபெற்ற புதுமாத்தளன் பிரதேசத்துக்கு இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்து, அங்கு படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியைத் திறந்து வைத்தார்.
இலங்கையில் 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாதத்தை, புலிகளுடன் கடுமையாகப் போரிட்டு முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டை ஒன்றுபடுத்திய படை வீரார்களின் பெருமையை என்றும் பறைசாற்றும் வண்ணம் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது
இந் நினைவுத் தூபி, ஆயுத கிளர்ச்சி இறுதியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைக் குறிக்குமே ஒழிய, அதனை தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதை குறிக்கும் ஒன்றாகக் கொள்ள முடியாது என்று இலங்கை தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.
அதேவேளை, இந்தப் போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் நினைவிடம் ஒன்றை அமைப்பது குறித்தும் தான் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நினைவுத்தூபி திறப்புவிழா நிகழ்வில் ஐனாதிபதியுடன், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, முப்படைகளின் பிரதானி சீவ் ஏயார் மார்ஷல் ரொசான் குணதிலக, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, கடற்படைத் தளபதி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையில் 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாதத்தை, புலிகளுடன் கடுமையாகப் போரிட்டு முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டை ஒன்றுபடுத்திய படை வீரார்களின் பெருமையை என்றும் பறைசாற்றும் வண்ணம் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது
இந் நினைவுத் தூபி, ஆயுத கிளர்ச்சி இறுதியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைக் குறிக்குமே ஒழிய, அதனை தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதை குறிக்கும் ஒன்றாகக் கொள்ள முடியாது என்று இலங்கை தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.
அதேவேளை, இந்தப் போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் நினைவிடம் ஒன்றை அமைப்பது குறித்தும் தான் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நினைவுத்தூபி திறப்புவிழா நிகழ்வில் ஐனாதிபதியுடன், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, முப்படைகளின் பிரதானி சீவ் ஏயார் மார்ஷல் ரொசான் குணதிலக, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, கடற்படைத் தளபதி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்வதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய, பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற ஜெனரல் சரத் பொன்சேகா,
"நான் முன்னர் வகித்த பதவிகளில் அதற்குரிய சலுகைகள் கிடைத்தன. அவை போதாது என்பதைக் காரணம் காட்டி ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட வரவில்லை. எனக்கு எந்தவிதப் பிரச்சினையும் இருக்கவில்லை. நான் இறுதியாக அரசாங்க பதவி வகித்த காலத்தில் பாதுகாப்புக்கென 25 வாகனங்களுடன் 600 படையினர் வழங்கப்பட்டிருந்தார்கள்.
எனக்கென தனிப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அந்தச் சலுகைகள் அனைத்தும் எனது தராதரத்தில் இருந்த அனைத்து உயரதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தன.
எனக்கு அந்தப் பதவியில் இருந்து அனைத்து சலுகைகளையும் அனுபவித்திருக்க முடியும். அமைச்சுப் பதவியொன்றை வழங்குவதற்குக் கூட ஜனாதிபதியின் செயலாளர் என்னிடம் வந்து கதைத்தார். ஆனால், இவை எல்லாவற்றையும் விடுத்து மக்கள் நலனுக்காக களமிறங்கத் தீர்மானித்தேன்.
நாட்டில் ஜனநாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதிலும் நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்.
வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு சரியானதொரு தீர்வு எட்டப்பட வேண்டும். நான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் வாழ்க்கைச் செலவுகளை குறைத்து பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை ஏற்படுத்த உழைப்பேன்.
பெண்களின் உழைப்பை குறைத்து மதிப்பிட முடியாது. யுத்தத்தில் கூட பெண்களுக்கு மிக முக்கியமானதொரு பங்கு உண்டு. இலங்கையில் ஐம்பது வீதத்திற்கு மேற்பட்டோர் பெண்களே இருக்கின்றனர். எனக்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக என்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்யும்படி நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
மீண்டும் வரலாறு எமக்குத் தந்த சந்தர்ப்பத்தின நமதாக்கி, சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாட்டினையும் எதிர் கொண்டு தமிழீழ தனியரசிற்கான பணியை விரைவுபடுத்துவோம்
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மீது அளவுகடந்த பாசத்தினையும் பற்றுறுதியினையும் தமிழீழ தாயகத்தின் மீது அதீத நம்பிக்கையும் அதோடினைந்த எதிர்பார்ப்பினையும் கொண்டவர்களாக விளங்கியவர்களுக்கு திருப்தியளிக்கக்கூடியவாறும், தமிழீழ தேசியத்தலைமையினையும், தமிழ் இனத்தினையும் முற்றாக அழித்தொழிப்பதையே முதன்மை நோக்கமாக கொண்டு செயற்பட்டுவரும் சிங்களத்திற்கும் அதற்கு ஒத்தாசை வழங்கி(ய)வரும் வல்லாதிக்க நாடுகளிற்கும், சிங்களத்திற்கு சேவகம் செய்து எஞ்சிய வாழ்நாட்களை விரயமாக்கி வரும் துரோகிகள் கூட்டத்தினரிற்கும் ஏமாற்றம் அளிக்கக் கூடியவாறும் அமைந்து விட்டது இந்த கார்த்திகை 27 மாவீரர் நாள்.
இந்த ஆண்டு மாவீரர் நாள் கொள்கை விளக்க உரையில் என்னவிடயம் இடம்பெறும் என்பதை விடுத்து தலைவர் வெளிப்படுவாரா… இல்லையா… என்று எதிர்பார்த்திருந்த நிலைமாறி எல்லோரும் ஒன்றினைந்து என்றுமில்லாதவாறு புலம்பெயர் வாழ் நாடுகளில் மிகவும் எழுச்சியாக மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுத்து தாயகக் கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து சாவடைந்த மக்களிற்கும் வீரவணக்கம் செலுத்தியது புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
என்றுமில்லாத எழுச்சி
கடந்த இருபது வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்ட மாவீரர் தினத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில், தேசியத்தலைமையின் வெளிப்பாடு இன்றி இம்முறை இருந்தபோதும் உலகெங்கும் சிறப்பான முறையில் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது மாவீரர்தினம்.
இதுவரை தமிழீழத்தில் மாத்திரமே எழுச்சியோடு நடைபெற்றுவந்த மாவீரர்தின நிகழ்வு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் உணர்வெழுச்சியோடு அதுவும் இதுவரை மாவீரர் நாள் நிகழ்வு உள்ளிட்ட தமிழர் எழுச்சி நாள் நிகழ்வுகள் இடம்பெறாத நாடுகளில் கூட இம்முறை பேரெழுச்சியுடன் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஈழவிடுதலைக்கு ஆதரவான அலை கட்டுமீறி வெடித்தெழுந்து தமிழீழம் நோக்கி புறப்பட இருந்த வேளை அதனை நீர்த்துப்போக செய்த பெருமைக்குரியவர்கள் வரிசையில் தமிழக முதல்வர் கருணாநிதி, அ.தி.மு.க.பொதுச் செயலாளளர் செயலலிதா வரிசையில் மூன்றாவதாக இடம்பெற்று அதன் பிரதிபலனாக இன்று லண்டனிலும் அப்பணியை தலைமைதாங்கி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டிருக்கும் அம்சா மேற்கொண்ட பொய் பரப்புரைகளையும் குழப்பகரமான தகவல்களையும் தாண்டி லண்டனில் நடைபெற்ற மாவீரர் தினத்தில் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் ஒன்று கூடி வீர அஞ்சலி செய்து ஒன்று பட்ட எழுச்சியை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
இவ்வாறு கனடா, பிரான்சு, செர்மனி, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, அவுத்ரேலியா, அமரிக்கா, சுவிசு போன்ற நாடுகளிலும் அயர்லாந்து, தாய்லாந்து, சைபிரசு, பெல்யியத்திலும் சிறப்பாக மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் ஈழ ஆதரவு தலைவர்களால் எதிர்ப்புக்களையும் தடைகளையும் மீறி கொண்டாடப்பட்டுவந்த நிலைமாறி ஒட்டு மொத்த தமிழகமே எழுச்சிக்கோலம் பூண்டு ஈழவிடுதலைக்காக தம்முயிரை ஈகம்செய்த தாயக, தமிழக உடன்பிறப்புகளிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செயலலிதாவின் சுழ்ச்சியும், தமிழரின் பிரிவு நிலையும்
மேற்கூறியவாறு தமிழகத்தில் தமிழீழ ஆதரவு நிலை நீர்த்துப் போக காரணமானவர்கள் வரிசையில் தமிழக முதல்வரிற்கும், முன்னால் இந்தியாவிற்கான சிறிலங்கா தூதுவர் அம்சாவிற்கும் இடையே செயலலிதா ஏன் இடம் பெற்றுள்ளார் என்ற கேள்வி இதனை படித்துக் கொண்டிருக்கும் உங்களிற்கு எழுவதில் ஒன்றும் வியப்பில்லை.
கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிய போதுதான் எமது உறவுகள் மீது கொத்துக் குண்டுகள், வெள்ளை பொசுபரசு குண்டுகள் உள்ளடங்கலாக தடைசெய்யப்பட்ட குண்டுகளையும் வீசி ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலை மிகவும் அதிகரித்ததுடன் தொடர்ந்தும் இடம்பெற்று வந்ததனால் தாய்த் தமிழகத்தில் கொதிநிலை ஏற்பட்டது. அது ஆளும் தி.மு.க., காங்கிரசு கட்சிகளுக்கு எதிராக விசுவரூபம் எடுத்திருந்தது. அதன் உச்சமாக 16 தமிழக உடன்பிறப்புக்கள் அக்கினித் தீயில் தம்மை ஆகுதியாக்கிய நிகழ்வு தமிழக மக்களது உணர்வுகளை உலுப்பவிட்டது.
இத்தருணத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராசா தலைமையில் செந்தமிழன் சீமான் உள்ளிட்டவர்கள் காங்கிரசு கட்சிக்கு எதிரான பிரச்சாரகளத்தில் குதித்து ஈழஆதரவாளர்கள் ஓர் அணியில் சேர்ந்தால் என்ன என்ற நிலை ஏற்பட்ட போது, தனி ஈழமே ஈழத்தமிழரிற்கு தீர்வாக அமையும் அதனை அ.தி.மு.க. கட்சி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நிறைவேற்றும் என வாக்குறுதி அளித்து அந்த உணர்வலையினை தன் பக்கம் திருப்பிக் கொண்டார்.
ஈழ ஆதரவு கொள்கை கொண்டவர்கள் ஒன்றினைந்தால் அ.தி.மு.க.வினது நிலை கேள்விக் குறியாகிவிடும் என அச்சப்பட்ட செயலலிதா வழங்கியிருந்த வாக்குறுதியினை தேர்தல் முடிவு தெரிந்த மறுநாளே காற்றில் பறக்கவிட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.
தமிழர்கள் ஒன்றுபட்டுவிட முடியாதவாறு காலத்திற்கு காலம் இவ்வாறு பிரித்தாளும் தலைமைகள் உருவாகிக் கொண்டு உள்ளதற்கு எமது ஒற்றுமையின்மையே காரணமாகும்.
இந்த மாவீரர் நாள் வரும் வரை மிக மிக மெதுவாக சுழன்ற காலச்சக்கரம் அதன் பின்னர் வேகம் பிடித்து எதிர்வரும் காலங்கள் விரைவாக உருண்டோடிவிடும். நாளை என்பது நாளையும் வரும். ஆனால் இன்று என்பது இன்றைக்கே ஆகையால் நாம் உடனடியாக தமிழீழ தனியரசுக்கான பணியை ஆரம்பிக் வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
முன்னரைப்போன்று அல்லாது மாவீரர் நாளில் கூடியாகிவிட்டது வீரவணக்கம் செலுத்தியாகிவிட்டது இனி அடுத்த எழுச்சிநாள் வரட்டும் எனக்காத்திருக்காது ஒவ்வொருநாளையும் பயனுள்ளதாக மாற்றவேண்டும். இந்த எழுச்சி, ஒற்றுமை தமிழீழ தனியரசு கிடைக்கும் வரை உறுதியாக இருக்கவேண்டும். அப்போதுதான் தமிழீழ தனியரசு என்ற உயர்ந்த இலக்கின எட்ட முடியும்.
எமது இனத்திற்கு விதிக்கப்பட்ட சாபக்கேடுபோல் வரலாற்றுவழிபட்டு வந்து கொண்டே இருப்பது துரோகங்களும், காட்டிக் கொடுப்புக்களும் ஆகும். இந்நிலை எமது ஒற்றுமை இன்மையால் ஏற்பட்டதாகும். நாம் அற்ப காரண காரியங்களை முன்வைத்து பல்வேறு குழுக்களாகவும், இயக்கங்களாகவும், அமைப்புக்களாகவும் பிரிந்து நிற்பதன் விளைவே காக்கை வன்னியர்களும், தேவானந்தாக்களும், கருணா(நிதி)களும் உருவாகுவதற்கு வாய்பாக அமைந்துவிடுகின்றது.
இதனால் நாங்கள் இழந்தது கொஞ்சமல்ல. பல நூற்றாண்டு கடந்தும் அகதிகளாக அவலங்களை சுமந்து பூமிப்பந்தின் மூலை முடுக்கெல்லாம் பரவிவாழும் இந்த நிலைக்கு காரணமும் முள்ளிவாய்கால் பகுதியில் எமது விடுதலைப் போரட்டமும் அதன் கட்டமைப்புக்களும் விலமதிப்பற்ற இலட்சத்திற்கு மேற்பட்ட எமது உறவுகளும் அழித்தொழிக்கப்பட்டபோதும் தடுத்து நிறுத்த முடியாதவர்களாக நிற்கும் கையறு நிலைக்கும் அந்த பிளவு நிலையே காரணமாகும்.
இப்போது கூட தமிழனத்தின் வரலாற்று வழிவந்த தமிழீழ அரசும், அதன் கட்டமைப்புகளும் முள்ளிவாய்க்காலில் புதையுண்டு போயுள்ளன. அதனை அப்படியேவிட்டு விட்டு நாம் இருந்துவிட முடியாது.
மானுட தர்மத்தை மீறி தமிழர்களின் தலைமையினை அழிக்க முற்படும் உலக நாடுகள்
மானுட தர்மத்தின் அடிப்படையில் எம் மக்கள் பக்கம் நின்று நியாயம் பெற்றுத்தர வேண்டிய உலக வல்லரசு நாடுகளினது இன்றைய நிலை சிங்களத்துடன் உறவாடுவதாகவே உள்ளது. சிங்களத்துடன் இனைந்து எஞ்சியுள்ள தமிழர்களது தலைமையினையும் கட்டபை;புகளையும் அழித்தொழிப்பதிலையே குறியாக உள்ளனர். இதனையே அன்மையில் நிகழ்ந்த மூன்று சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.
ஒன்று: கடந்த மே மாதம் 17ம் நாளுடன் எமது விடுதலைப் போராட்மும், தமிழீழ விடுதலைப்புலிகளும் அழித்தொழிக்கப்பட்டதாக கூறப்பட்டுவரும் நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்து அனுப்பியதாக தமிழர் ஒருங்கினைப்புக் குழுவைச் சேர்ந்த 21 பேருக்கு பிரான்சு நீதிமன்றம் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளும் குறைந்த பட்சம் ஆறு மாதங்களும் சிறைத்தண்டை வழங்கி தீர்பளித்துள்ளது.
இந்த நூற்றாண்டு கண்டிராத மனிதப் பேரவலத்தினை முள்ளிவாய்க்கால் பகுதியல் அரங்கேற்றி தமிழர்களை கொன்று குவித்து இராசாயன துகள்களை வீசி சாம்பலாக்கியும் புல்டோசர் ஏற்றி கொன்றும் எஞ்சியவர்களை உயிருடன் குழிகளில் போட்டு மூடியும் மிகப்பெரும் இன அழிப்பை கண்முன்னே நிகழ்த்திவிட்டு தற்போது அதிகார பீடத்திற்காக அடிபட்டு கொண்டிருக்கும் ராசபக்சவையும் அவரது சகோதரர்களையும், சரத்பொன்சேகாவையும் முழு சுதந்திரமாக உலாவ விட்டு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்களிற்கு தண்டனை வழங்கியுள்ளமை கடைந்தெடுக்கப்பட்ட அயோக்கியத்தனமாகும்.
இரண்டு: தேசியத்லைவரது பிறந்தநாள், மாவீர் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்காக கனடா சென்ற “நாம் தமிழர்” இயக்கத்தலைவர் சீமானை கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது கனேடிய அரசு. தேசியத்தலைவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் இளையோர்கள் ஏற்பாடு செய்த நிகழ்வில் பங்குபற்றி கருத்துரையாற்றியதின் அடிப்படையிலையே நாடுகடத்தப்பட்டுள்ளார் சீமான் அவர்கள்.
பதிலுக்கு பதில், இரத்தத்திற்கு இரத்தம் என தமிழர்கள் அனுபவித்த அவலங்களை சிங்களத்திற்கும் திருப்பிக் கொடுக்காது எதிரியின் துப்பாக்கி முணை தன்னருகில் நெருங்கிவந்த போதும் கூட வீரத்துடன் போரிட்டு முற்றுகையினை உடைத்தெறிந்து பலநூறு கரும்புலி வீரர்களது தியாகத்தின் அடித்தளத்தில் தளபதிகளுடன் வெளியேறிச் சென்று தமது இருப்பினை உறுதி செய்துள்ளார் எம்தலைவர்.
சிங்களத் தலைவர்கள் தமது ஆட்சி அதிகாரத்திற்கு வலுச்சேர்ப்பதற்காகத்தானே ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை அழித்தொழித்தார்கள். அவர்கள் சிந்திய இரத்தத்தை பங்கு போட்டு தேர்தல் வெற்றியாக்கி கொள்ளத்தானே அதிபரும் முன்னால் இராணுவத் தளபதியும் துடியாய் துடிக்கின்றனர்.
இதனையே தேசியத்தலைவர் செய்திருந்தால் கிளிநொச்சியை கூடவிட்டு செல்லவேண்டியிருந்திருக்காது. ஒற்றை சிங்களனுக்கும் தீங்கு நேரக்கூடாது என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்து மெய்ப்பித்தவர் எமது தேசியத்தலைவர்.
இதனைத்தானே சீமான் தனது ஆதங்கமாக, மனிதநேயம் குறித்து வாய்கிழிய பேசிவரும் உலக வல்லரசு நாடுகளைப் பார்த்து கேட்டிருந்தார். அது தவறா?
சனநாயக விழுமியங்களை கட்டிக்காப்பாற்றும் நாடுகளில் ஒன்றாக கருதப்படும் கனடாவில் கூட அடிப்படையற்ற குற்றச்சாட்டை சுமத்தி இரு கைகளையும் பின்பக்கமாக வைத்து விலங்கிட்டு ஏதோ அதிபயங்கர குற்றவாளி போன்று நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதனால்தான் தொடர்ந்து உரையாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது என்று கனேடிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த போதும் விசாரனையை மேற்கொண்டது என்னவோ இந்திய சீக்கிய அதிகாரியே..! அதிலும் குற்றம் சாட்ப்பட்டதற்கு துளியளவேனும் சம்மந்தம் இல்லாத ராசீவ் காந்தி படுகொலை தொடர்பாகவும் விசாரனை நடாத்தியுள்ளமை உங்கப்பன் புதரிற்குள் இல்லை என்பது போன்று சம்பந்தப்பட்டவர்களை இனம் காட்டியுள்ளது.
தமிழர்களை வழிநடாத்தி மீண்டும் ஒன்றினைத்து செல்வதற்கு எந்தத் தலைமையும் உருவாகிவிடக் கூடாது என்பதில் இவர்கள் எல்லோரும் உறுதியாக இருப்பது தெளிவாகிறது.
மூன்று: 2011 ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டினை நடாத்துவதற்கான அனுமதியினை பெற்று, நடாத்தி முடிக்கப்பட்ட தமிழினப்படுகொலைகள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், போர்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பித்து கொள்வதற்கு முற்பட்ட சிறிலங்காவிற்கு ஆதரவாக 53 நாடுகள் பிரதிநிதித்துவம் வகிக்கும் காமன்வெல்த் அமைப்பினைச் சேர்ந்த 45 நாடுகள் இந்தியாவின் பின்னால் அணிவகுத்துநின்று ஆதரவு தெரிவித்து நின்றனவே..! இந்நிலையினை என்னவென்று சொல்ல? இருப்பினும் லண்டன் பிரதமரின் எதிர்ப்பினை அடுத்து கனடா, நியூசிலாந்து நாடுகளது பிரதமர்களும் இணைந்து கொடுத்த அழுத்தம் காரணமாக அம்முயற்சி தோற்கடிக்கப்பட்டிருந்தமை ஓரளவிற்கு ஆறுதலான விடயமாகும்.
சிறிலங்கா அரசின் தூதரக நெருக்கடிகளுக்கு உட்பட்டு தத்தமது நாடுகளில் உள்ள தமிழர் தலைமைத்துவங்களை வேரோடு அழிக்கும் முயற்சியில் மனிதாபிமானம் பற்றியும் மனிதநேயம் பற்றியும் உலகிற்கு போதனை செய்யும் இவ் உலகநாடுகள் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வரலாறு மீண்டும் எமது கைகளில் தந்திருக்கும் சனாதிபதி தேர்தல் களம்
வரலாறு மீண்டும் மீண்டும் எமது கைகளிலேயே எமக்கான தலைவிதியை தீர்மாணிக்கும் பொறுப்பினை கையளித்து நிற்கின்றது. அவ்வாறு தற்போது எமக்கு கிட்டியிருக்கும் வாய்ப்பு சிறிலங்கா சனாதிபதி தேர்தல் களமாகும்.
“தமிழரின் தேசிய தனித்துவத்தை அங்கீகரித்து அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை பகிர்ந்தளித்து, அரவணைத்து வாழ சிங்கள தேசம் மறுத்துவருகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இதுகாலம்வரை இந்த அரசியல் புறக்கணிப்பு தொடர்கிறது. வேண்டப்படாத இனத்தவராக ஒதுக்கப்பட்டு, புறந்தள்ளி வைக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து சலித்துப்போன தமிழர், சிங்கள ஆட்சியமைப்பையும் அதன் அதிகாரபீடத்தினையும் ஒதுக்கி புறக்கணிக்கத் தீர்மாணித்து விட்டனர். சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாக்களிக்காமை இந்தப்புறக்கணிப்பின் காத்திரமான வெளிப்பாடாகும்” இவ்வாறு கடந்த சனாதிபதி தேர்தல் தொடர்பாக 2005ம் ஆண்டு மாவீரர்தின உரையில் தேசியத்தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
இது முற்றிலும் உண்மை நிலையாகும். சிறிலங்காவினது ஆட்சி, அதிகாரபீடங்கள் எதுவானாலும் தமிழர்களிற்கு விரோதமாவே செயற்பட்டு வந்துள்ளமை கடந்த காலங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்களத்தின் அனைத்து கட்டமைப்புக்களும் ஒன்றிணைந்து தமிழர்களை அழித்தொழித்தும் எஞ்சியவர்களை முட்கம்பி வேலிக்குள் சிறைவைத்து சிதைத்தும் வந்த நிலையில் நாட்டை ஆளுவதற்கான போட்டிக்களத்தை திறந்துவிட்டு அவற்றை மூடிமறைப்பதற்கு முற்பட்டு நிற்கின்றது சிங்கள தேசம்.
இறுதிப்போரில் பயங்கரவாதத்தின் பெயரால் அனைத்துலக நாடுகளும் சிங்களத்துடன் இணைந்து செயற்பட்டு வந்தநிலையில் அதற்கு பின்னரான தீர்வுத்திட்டம் குறித்து வாக்குறுதி அழித்தவாறு சிறிலங்கா அரச தலைமை எந்தவித ஆக்கபூர்வ முன் முயற்சிகளையும் எடுக்காததோடு சிறிலங்காவை முற்றுமுழுதாக சீனத்திடம் அடகு வைக்கும் செற்பாட்டில் முழு மூச்சாக இறங்கியதனை அடுத்து அரசியல், பொருளியல் ரிதியான அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளன இந்த வல்லாதிக்க நாடுகள்.
இவற்றில் முக்கியமாக முட்கம்பி வேலிக்குள் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்ளை அவர்களது சொந்த இடங்களிற்கு திருப்பி அனுப்பவேண்டும், இறுதிப்போர் நடைபெற்ற போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்படுவதோடு போர்க்குற்ற விசாரணை எத்தருணத்திலும் ஆரம்பிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் நிலையினையும் தக்கவைத்து வருகின்றன வல்லாதிக்க நாடுகள்.
இதனையே அன்மைக்காலங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவிற்கான அனைத்துலக பிரதிநிதிகளின் வருகை உறுதிப்படுத்துகின்றது.
இதனை சற்றும் எதிர்பாராத சிங்களம் அதனை திசைதிருப்புவதற்கும், தற்காலிக ஓய்வுநிலையில் அக்கோரிக்கைகளை வைத்திருப்பதற்குமாகவே சனாதிபதி தேர்தலை அறிவித்துள்ளது.
யுத்தவெற்றியின் பிராதான கதாநாயகனாக சிங்கள மக்களால் கருதப்படும் முன்னால் இராணுவத் தளபதியும் கட்டளை அதிகாரியுமான சரத்பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பூரண ஆதரவுடன் எதிர்க் களத்தில் நிற்பதனையும், இன்னும் இரண்டு ஆண்டுகள் தனது பதவிக்காலத்தில் எஞ்சியிருப்பதையும் கருத்தில் கொள்ளாது அவசர அவசரமாக சனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதன் நோக்கம் இதுவாகவே இருக்கும்.
மேற்குலக நாடுகளது அச்சுறுத்தலுக்கு மத்தில் எஞ்சிய இரண்டு ஆண்டுகளாக ஆட்சியை நடாத்துவது என்பது மிகவு கடினமான விடயமாகும். இவ் இக்கட்டில் இருந்து சீனாவினால் கூட சிறிலங்காவை காப்பாற்ற முடியாது என்பதுதான் யதார்த்த நிலையாகும்.
சீனாவினால் முதலீடுகளையும் நிதியுதவிகளையும்தான் நேரடியாக வழங்கமுடியும். அவ்வாறே அனைத்துலக நாணய நிதியம் வழங்கிய கடனிற்கு இணையான தொகையை சிறிலங்காவிற்கு வழங்கி தனது நிலையை உறுதி செய்ய முற்பட்டுள்ளது சீனா.
தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆளுமையின் வீச்சு வலுவிழக்கக்கூடியவாறான இந் நகர்வுகளை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது.
அதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள அய்க்கிய நாடுகள் பொதுச்சபை உள்ளிட்ட உலக மன்றங்கறளினூடாக சிங்களத்திற்கு அரசியல், பொருளியல் ரீதியிலான நெருக்கடிகளை ஏற்படுத்த முனைந்து நிற்கின்றது. இந் நெருக்கடியை சீனாவினாலோ அல்லாது தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் பிரசன்னத்தினை விரும்பாத சக்திகளாலோ தடுத்து சிங்களத்தினை காப்பாற்றிவிட முடியாது என்பதே இன்றைய நிலையாகும்.
இதனை முற்றிலுமாக உணர்ந்து கொண்டதனால்தான் சனாதிபதித் தேர்தலை அறிவித்து தற் காலிகமாக தன்னை பாதுகாக்க முற்பட்டுள்ளது சிங்களம்.
தமிழர் சிந்திய இரத்தத்தை வைத்து நடக்கும் சிங்களத்தின் போட்டி அரசியல்
சிறிலங்காவிற்கான சனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கபட்ட பின்னர் தேல்தல்களம் தமிழகத்தையே விஞ்சிவிடும் அளவிற்கு சூடுபிடித்துள்ளது. தமிழின அழிப்பிற்கு யார் மூலகாரணம் என்பது தொடர்பாக, தமிழினத்தினை அழத்தொழித்தவனும் அதற்கு ஆணையிட்டவர்களும், எம்குலப் பெண்களின் கற்பை சூறையாடிவனும் அதற்கு கட்டளையிட்டு வேடிக்கை பார்த்தவர்களும் எதிர் எதிர் களத்தில் நின்று கொண்டு மாறி மாறி கருத்துக்களை கூறி பட்டிமன்றம் வைக்காத குறையாக கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் என்ன வேடிக்கை என்றால் தமிழினத்தை கூண்டோடு அழித்தொழித்த இருவரும் தமிழர்களின் நலனில் அதிக அக்கறை உள்ளவர்காளவும் தமிழர்களை காப்பதற்காக வந்த தேவ தூதர்கள் தாம் தான் என்றும் காட்ட முற்பட்டு தமது நடிப்புத் திறமையினை பரிசோதிக்கும் களமாக இந்த தேர்தல் களத்தினை மாற்றியுள்ளமைதான்.
தமிழீழ விடுதபை;புலிகளை அழித்தொழிப்பதாக கூறி மேற்கொள்ளப்பட்ட போரின் மூலமாக தமிழ் மக்களை அழித்தொழித்த பெருமைக்குரியவன் தான் மாத்திரமே என கூறிக்கொள்ளும் சரத் பொன்சேகா தமிழ் மக்களது வாக்கினை பெற்றுக்கொள்வதற்காக தேசியத்தலைவர் பிரபாகரனது பெற்றோர் ஆதரவு வழங்கினால் கூட ஏற்றுக்கொள்வதாகவும், முன்னால் விடுதலைப்புலிகளது போராளிகள் தளபதிகள் என யாராக இருந்தாலும் தனது வெற்றிக்காக பணியாற்றுவதற்கு முன்வந்தால் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்து சிங்கள ஆட்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தேர்தல் தேதி நெருங்கும் போது தமிழகத்தில் சிலர் கூறியது போல் தனித் தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என கூறினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஏன் என்றால் இவர்களது ஒரே இலக்கு சிறிலங்காவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான். இவர்களது பசப்புவார்த்தைகளுக்கு தமிழர்கள் ஒருபோதும் மயங்கமாட்டார்கள் என்பதனை உணரத்தானே போகின்றனர். இந்த நேரத்தில் கடந்த முறைபோன்று நாம் இது எமக்கான தலைமையை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இல்லைதானே என்று ஒதுங்கியருந்து வேடிக்கை பார்க்க முடியாது. அதனால் யாராவது ஒருவரை ஆதரிப்பது என்பதல்ல.
தமிழினம் எதிர்கொண்ட சிங்கள ஆட்சியாளர்கள் எல்லோரையும் ஒருமித்து வடித்தெடுத்தது போன்று தமிழின அழிப்பில் ஈடுபட்டு அதன் உச்சமாக ஏதுமறியாது கருவறைக்குள் இருந்த பிஞ்சுகளைக் கூட தேடியழித்து நரவேட்டையாடிவிட்டு இன்று தமிழ்ச் சிறுவர்களை வாரியணைத்து முத்தம் கொடுத்து கணக்கினை தீர்த்துவிடலாம் என எண்ணும் ராசபக்சவும், தமிழர்கள் சிந்திய குருதியில் நீச்சலடித்து அரசியல் கனவேதுமின்றி இருந்த நிலைமாறி வலுவான சிறிலங்காவின் அதிபர் வேட்பாளராகியிருக்கும் பொன்சேகா அன்னப்பறவையில் பறந்தாலும் இவர்கள் இருவரும் எமது தெரிவிற்கான தகுதியற்றவர்கள். ஏன் என்றால் இருவரும் கடைந்தெடுக்கப்பட்ட அயோக்கியர்களாகவும், அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாதிகளாகவும் இருப்பதனால்தான். இவர்களில் யார் வென்றாலும் எமது துயரநிலை மாறப்போவதில்லை என்பதுதான் உண்மை நிலை.
தமிழர் தரப்பின் பொது வேட்பாளரிற்கான அவசியம்
இருப்பினும் எமது வாக்குப்பலத்தினை நிரூபிப்பதற்காகவும், எமது வாக்குகள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதனை தடுப்பதற்காகவும் நாம் வாக்களித்தே ஆகவேண்டும். அதற்கு தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தவதே சாத்தியமாகும்.
சிறுபான்மையினர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவராக அப் பொதுவேட்பாளர் அமைவது அவசியமாகும். ஏன் என்றால் ஒரு கோடி நாற்பது இலட்சம் வாக்காளர்களில் சுமார் 25 இலட்சம் வாக்குகள் தமிழர் பகுதியில் அதாவது 6 தேர்தல் மாவட்டங்களில் உள்ளது. அதில் முழுமையாக வடகிழக்கில் எட்டு இலட்சம் தமிழர் வாக்குகளும் ஏனைய பகுதிகளில் சில இலட்சம் வாக்குகளும் முக்கியமாகும். அந்த வாக்குப்பலத்தினை ஒருமுகப்படுத்தி எமது பலத்தினை உறுதிப்படுத்துவோமாயின் அடுத்து நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பயனுள்ளதாக இருக்கும்.
சிங்களத்தின் பிரதான கட்சிகளின் செந்தப்பலம் எழுபது, எண்பது ஆசனங்கள்தான். கூட்டணிபலம் சேர்த்தே அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும். இந்நி;லையில் சிறுபான்மை இன மக்கள் அனைவரும் ஒருமித்து நிற்போமாயின் சுமார் நாற்பதிற்கு மேற்பட்ட ஆசனங்களை எமதாக்கிக் கொள்ள முடியும். அவ்வாறு சாத்தியமானால் எமது தரப்பு கோரிக்கைகளை வலுவான அரசியல் தளத்தில் நின்று முன்வைத்து நிறைவேற்றிக் கொள்வதற்கு குறைந்தபட்சமேனும் வாய்ப்பிருக்கின்றது.
தற்போதைய நிலையில் மனோகணேசனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்தனியே பொது வேட்பாளர் பற்றி அலோசித்து வருகின்றனர். தமிழ்மக்கள், தமிழ்பேசும் முசுலீம் மக்கள், மலையகத் தமிழர்களென எல்லோரும் ஒருமித்து ஏற்றுக் கொள்ளும் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவதன் ஊடாகவே இவை சாத்தியமாகும்.
முன்னர் நடைபெற்ற பல தேர்தல்களில் தனித்து நின்றபலர் தோல்வியடைந்திருந்த நிலையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியம், தன்னாட்சி உரிமை, தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளே என்பதை ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில் நின்றே 22 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையின் தொடர் வெளிபாடாகவே அன்மையில் நடைபெற்ற யாழ்ப்பாணம், வவுனியா மாநகரசபைத் தேர்தலில் குறைந்த படச சுவரொட்டி பிரச்சாரம் கூட செய்யாது கட்சி அலுவலகத்தில் இருந்து கொண்டே கணிசமான ஆசனங்களை கைப்பற்றியிருந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இதுவரை தமிழர்களின் தலைமையாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளது தலைமை வெளிப்படாது இருக்கும் இந்நிலையில் பிரிவு நிலை போக்கி எல்லோரும் ஒன்றினைந்து எமது அரசியல் தளத்தினை உறுதி செய்து கொள்ளவேண்டிய தருணமாகும்.வராலாறு நம்கையில் தந்த வாய்பினை முழுமையாக பயன்படுத்தி தமிழர் தரப்பின் அரசியில் இருப்பினை உறுதிசெய்துகொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முயற்சி எடுக்கவேண்டும்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கொள்கைவிளக்க உரையில் கூறப்பட்டவாறு, தமிழீழ இலட்சியத்தை நோக்கிய எமது மக்களின் போராட்டத்திற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புக்களும் அதன் செயற்பாட்டாளர்களும் எமது இலட்சியமான தமிழீழ தனியரசு கோட்பாட்டில் இருந்து விலகிப்போவதை தமிழ்மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்ற இன்றைய உண்மைநிலையை யாரும் புறந்தள்ளிவிட்டு செயற்பட்டுவிட முடியாது.
இந்நிலையில் இத்தேர்தலில் மகிந்த ராசபக்சவிற்கு முண்டு கொடுப்பதற்கு, சித்தார்த்தனும், டக்ளசு தேவானந்தாவும், சந்திரகாந்தனும்(பிள்ளையான்), தொண்டைமானும் முன்வந்துள்ளமை இனவிடுதலையினைவிட ஆட்சியாளர்கள் வீசும் எலும்புத் துண்டுகளே அவர்களுக்கு முக்கியமாக புலப்பட்டதன் வெளிப்பாடே ஆகும்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முக்கிய ஆதாரமாக கொண்டுள்ள தமிழர்களை அழித்து பெறப்பட்ட போர் வெற்றியை பெற்றுத்தந்த தளபதியையே விரட்டி விட்ட மகிந்த, சகோதரர்களுக்கு இவர்களை விரட்டிவிட எவ்வளவு நேரமாகும் என்பதனை இந்த எலும்புபொறுக்கிகள் உணர வேண்டும்.
எமது அரசியல் நிலையை உறுதி செய்வதற்கான மாபெரும் பணி தாயகத் தமிழர்கள் முன் உள்ளது போன்று தாயகத்தில் நீண்ட காலமாக சிங்கள ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட பொதுமக்களின் கட்டுமானங்களை சீரமைத்து இடம்பெயர்ந்து முட்கம்பி வதைமுகாம்களில் அடைபட்டுள்ளவர்களை மீட்டு மறுவாழ்விற்கு உட்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு உலகத்தமிழர்களுக்கு உண்டு. அதோடு விழிதிறந்த உறக்க நிலையில் இருந்து, எமது மக்களின் அழிவினைப்பார்த்துக் கொண்டிருந்த சர்வதேச நாடுகளை இயங்குநிலைக்கு கொண்டுவந்து சிங்களத்திற்கு தொடர்ச்சியாக நெருக்கடிகளை வழங்க வைக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பும் உண்டு.
ஏன் என்றால் சிங்களத்தை நெருக்கடிக்குள் வைத்துக் கொண்டே எமது விடுதலை நோக்கிய பயணத்தினை மேற்கொள்ள முடியும். இது மிகவும் கடினமான பணியாக இருப்பினும் அவசியமானதாகும். ஆயிரம் மைல்கள் நடைபயணம் செல்பவனும் முதலாவது அடியை எடுத்து வைத்தால்தான் சாத்தியப்படும் என்பதற்கினங்க விரைவாக பணியாற்ற விரைந்திடுவோம்.
“நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்பு வாய்ந்த இனம், மிகவும் தொன்மை வாய்ந்த இனம், தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழ்கின்ற ஒருஇனம். ஒடுக்குமுறைக்கு எதிராக, விடிவு தேடி, விடுதலை வேண்டி போராடி வருகின்றோம். நாம் காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எமது சொந்த மண்ணில் எமக்கே உரியதான வரலாற்று மண்ணில் அந்நியரிடம் பறிகொடுத்த ஆட்சியுரிமையை மீள நிலைநாட்டுவதற்காகவே போராடிவருகின்றோம். இழந்துவிட்ட எமது இறையாண்மையை மீள நிறுவ, எமது சுதந்திர தேசத்தை மீள கட்டி எழுப்புவதற்காகவே நாம் போராடிவருகின்றோம்.
எமது மக்களின் இந்த நீதியான போராட்டத்தைச் சிங்கள தேசம் தொடர்ந்தும் ஏற்றுக் கொள்ள மறுத்துவருகின்றது. மாறாக, எம்மண்ணின் மீதும் மக்களின் மீதும் பெரும் இன அழிப்புப் போரை, ஆக்கிரமிப்பு போரை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அடக்குமுறைக்குட்பட்டு, சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும் குடிபெயர்ந்த அகதிவாழ்வுமாக எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ, எந்தவோர் அமைப்போ குரல் கொடுக்கவில்லை. ஆதரவோ, அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணைமூடிக் கொண்டு, பாராமுகமாகச் செயற்படுகிறது.
பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர்கள் பரந்து வாழ்ந்த போதும் எமக்கென ஒருநாடு இல்லாதமைதான் இந்த பரிதாப நிலைக்கு – இந்த மோசமான நிலைக்கு காரணம்”.
அந்த நிலை மாற்றி எமக்கான தேசமான தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான பாதையில் எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறுவிட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள, அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். தமிழீழம் காண்போம்.
தமிழர் தலைமைகளை தேடியழிப்பதிலும் மறுபுறம் சிங்களத்திற்கு ராசதந்திர ரீதியில் நெருக்கடிகளை கொடுப்பதுமாக செயற்படும் உலகநாடுகளது சவாலை எதிர் கொண்டு தமிழீழ தனியரசிற்கான பணியை விரைவுபடுத்துவோம்.
இரா.மயூதரன்
இந்த ஆண்டு மாவீரர் நாள் கொள்கை விளக்க உரையில் என்னவிடயம் இடம்பெறும் என்பதை விடுத்து தலைவர் வெளிப்படுவாரா… இல்லையா… என்று எதிர்பார்த்திருந்த நிலைமாறி எல்லோரும் ஒன்றினைந்து என்றுமில்லாதவாறு புலம்பெயர் வாழ் நாடுகளில் மிகவும் எழுச்சியாக மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுத்து தாயகக் கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து சாவடைந்த மக்களிற்கும் வீரவணக்கம் செலுத்தியது புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
என்றுமில்லாத எழுச்சி
கடந்த இருபது வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்ட மாவீரர் தினத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில், தேசியத்தலைமையின் வெளிப்பாடு இன்றி இம்முறை இருந்தபோதும் உலகெங்கும் சிறப்பான முறையில் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது மாவீரர்தினம்.
இதுவரை தமிழீழத்தில் மாத்திரமே எழுச்சியோடு நடைபெற்றுவந்த மாவீரர்தின நிகழ்வு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் உணர்வெழுச்சியோடு அதுவும் இதுவரை மாவீரர் நாள் நிகழ்வு உள்ளிட்ட தமிழர் எழுச்சி நாள் நிகழ்வுகள் இடம்பெறாத நாடுகளில் கூட இம்முறை பேரெழுச்சியுடன் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஈழவிடுதலைக்கு ஆதரவான அலை கட்டுமீறி வெடித்தெழுந்து தமிழீழம் நோக்கி புறப்பட இருந்த வேளை அதனை நீர்த்துப்போக செய்த பெருமைக்குரியவர்கள் வரிசையில் தமிழக முதல்வர் கருணாநிதி, அ.தி.மு.க.பொதுச் செயலாளளர் செயலலிதா வரிசையில் மூன்றாவதாக இடம்பெற்று அதன் பிரதிபலனாக இன்று லண்டனிலும் அப்பணியை தலைமைதாங்கி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டிருக்கும் அம்சா மேற்கொண்ட பொய் பரப்புரைகளையும் குழப்பகரமான தகவல்களையும் தாண்டி லண்டனில் நடைபெற்ற மாவீரர் தினத்தில் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் ஒன்று கூடி வீர அஞ்சலி செய்து ஒன்று பட்ட எழுச்சியை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
இவ்வாறு கனடா, பிரான்சு, செர்மனி, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, அவுத்ரேலியா, அமரிக்கா, சுவிசு போன்ற நாடுகளிலும் அயர்லாந்து, தாய்லாந்து, சைபிரசு, பெல்யியத்திலும் சிறப்பாக மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் ஈழ ஆதரவு தலைவர்களால் எதிர்ப்புக்களையும் தடைகளையும் மீறி கொண்டாடப்பட்டுவந்த நிலைமாறி ஒட்டு மொத்த தமிழகமே எழுச்சிக்கோலம் பூண்டு ஈழவிடுதலைக்காக தம்முயிரை ஈகம்செய்த தாயக, தமிழக உடன்பிறப்புகளிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செயலலிதாவின் சுழ்ச்சியும், தமிழரின் பிரிவு நிலையும்
மேற்கூறியவாறு தமிழகத்தில் தமிழீழ ஆதரவு நிலை நீர்த்துப் போக காரணமானவர்கள் வரிசையில் தமிழக முதல்வரிற்கும், முன்னால் இந்தியாவிற்கான சிறிலங்கா தூதுவர் அம்சாவிற்கும் இடையே செயலலிதா ஏன் இடம் பெற்றுள்ளார் என்ற கேள்வி இதனை படித்துக் கொண்டிருக்கும் உங்களிற்கு எழுவதில் ஒன்றும் வியப்பில்லை.
கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிய போதுதான் எமது உறவுகள் மீது கொத்துக் குண்டுகள், வெள்ளை பொசுபரசு குண்டுகள் உள்ளடங்கலாக தடைசெய்யப்பட்ட குண்டுகளையும் வீசி ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலை மிகவும் அதிகரித்ததுடன் தொடர்ந்தும் இடம்பெற்று வந்ததனால் தாய்த் தமிழகத்தில் கொதிநிலை ஏற்பட்டது. அது ஆளும் தி.மு.க., காங்கிரசு கட்சிகளுக்கு எதிராக விசுவரூபம் எடுத்திருந்தது. அதன் உச்சமாக 16 தமிழக உடன்பிறப்புக்கள் அக்கினித் தீயில் தம்மை ஆகுதியாக்கிய நிகழ்வு தமிழக மக்களது உணர்வுகளை உலுப்பவிட்டது.
இத்தருணத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராசா தலைமையில் செந்தமிழன் சீமான் உள்ளிட்டவர்கள் காங்கிரசு கட்சிக்கு எதிரான பிரச்சாரகளத்தில் குதித்து ஈழஆதரவாளர்கள் ஓர் அணியில் சேர்ந்தால் என்ன என்ற நிலை ஏற்பட்ட போது, தனி ஈழமே ஈழத்தமிழரிற்கு தீர்வாக அமையும் அதனை அ.தி.மு.க. கட்சி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நிறைவேற்றும் என வாக்குறுதி அளித்து அந்த உணர்வலையினை தன் பக்கம் திருப்பிக் கொண்டார்.
ஈழ ஆதரவு கொள்கை கொண்டவர்கள் ஒன்றினைந்தால் அ.தி.மு.க.வினது நிலை கேள்விக் குறியாகிவிடும் என அச்சப்பட்ட செயலலிதா வழங்கியிருந்த வாக்குறுதியினை தேர்தல் முடிவு தெரிந்த மறுநாளே காற்றில் பறக்கவிட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.
தமிழர்கள் ஒன்றுபட்டுவிட முடியாதவாறு காலத்திற்கு காலம் இவ்வாறு பிரித்தாளும் தலைமைகள் உருவாகிக் கொண்டு உள்ளதற்கு எமது ஒற்றுமையின்மையே காரணமாகும்.
இந்த மாவீரர் நாள் வரும் வரை மிக மிக மெதுவாக சுழன்ற காலச்சக்கரம் அதன் பின்னர் வேகம் பிடித்து எதிர்வரும் காலங்கள் விரைவாக உருண்டோடிவிடும். நாளை என்பது நாளையும் வரும். ஆனால் இன்று என்பது இன்றைக்கே ஆகையால் நாம் உடனடியாக தமிழீழ தனியரசுக்கான பணியை ஆரம்பிக் வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
முன்னரைப்போன்று அல்லாது மாவீரர் நாளில் கூடியாகிவிட்டது வீரவணக்கம் செலுத்தியாகிவிட்டது இனி அடுத்த எழுச்சிநாள் வரட்டும் எனக்காத்திருக்காது ஒவ்வொருநாளையும் பயனுள்ளதாக மாற்றவேண்டும். இந்த எழுச்சி, ஒற்றுமை தமிழீழ தனியரசு கிடைக்கும் வரை உறுதியாக இருக்கவேண்டும். அப்போதுதான் தமிழீழ தனியரசு என்ற உயர்ந்த இலக்கின எட்ட முடியும்.
எமது இனத்திற்கு விதிக்கப்பட்ட சாபக்கேடுபோல் வரலாற்றுவழிபட்டு வந்து கொண்டே இருப்பது துரோகங்களும், காட்டிக் கொடுப்புக்களும் ஆகும். இந்நிலை எமது ஒற்றுமை இன்மையால் ஏற்பட்டதாகும். நாம் அற்ப காரண காரியங்களை முன்வைத்து பல்வேறு குழுக்களாகவும், இயக்கங்களாகவும், அமைப்புக்களாகவும் பிரிந்து நிற்பதன் விளைவே காக்கை வன்னியர்களும், தேவானந்தாக்களும், கருணா(நிதி)களும் உருவாகுவதற்கு வாய்பாக அமைந்துவிடுகின்றது.
இதனால் நாங்கள் இழந்தது கொஞ்சமல்ல. பல நூற்றாண்டு கடந்தும் அகதிகளாக அவலங்களை சுமந்து பூமிப்பந்தின் மூலை முடுக்கெல்லாம் பரவிவாழும் இந்த நிலைக்கு காரணமும் முள்ளிவாய்கால் பகுதியில் எமது விடுதலைப் போரட்டமும் அதன் கட்டமைப்புக்களும் விலமதிப்பற்ற இலட்சத்திற்கு மேற்பட்ட எமது உறவுகளும் அழித்தொழிக்கப்பட்டபோதும் தடுத்து நிறுத்த முடியாதவர்களாக நிற்கும் கையறு நிலைக்கும் அந்த பிளவு நிலையே காரணமாகும்.
இப்போது கூட தமிழனத்தின் வரலாற்று வழிவந்த தமிழீழ அரசும், அதன் கட்டமைப்புகளும் முள்ளிவாய்க்காலில் புதையுண்டு போயுள்ளன. அதனை அப்படியேவிட்டு விட்டு நாம் இருந்துவிட முடியாது.
மானுட தர்மத்தை மீறி தமிழர்களின் தலைமையினை அழிக்க முற்படும் உலக நாடுகள்
மானுட தர்மத்தின் அடிப்படையில் எம் மக்கள் பக்கம் நின்று நியாயம் பெற்றுத்தர வேண்டிய உலக வல்லரசு நாடுகளினது இன்றைய நிலை சிங்களத்துடன் உறவாடுவதாகவே உள்ளது. சிங்களத்துடன் இனைந்து எஞ்சியுள்ள தமிழர்களது தலைமையினையும் கட்டபை;புகளையும் அழித்தொழிப்பதிலையே குறியாக உள்ளனர். இதனையே அன்மையில் நிகழ்ந்த மூன்று சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.
ஒன்று: கடந்த மே மாதம் 17ம் நாளுடன் எமது விடுதலைப் போராட்மும், தமிழீழ விடுதலைப்புலிகளும் அழித்தொழிக்கப்பட்டதாக கூறப்பட்டுவரும் நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்து அனுப்பியதாக தமிழர் ஒருங்கினைப்புக் குழுவைச் சேர்ந்த 21 பேருக்கு பிரான்சு நீதிமன்றம் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளும் குறைந்த பட்சம் ஆறு மாதங்களும் சிறைத்தண்டை வழங்கி தீர்பளித்துள்ளது.
இந்த நூற்றாண்டு கண்டிராத மனிதப் பேரவலத்தினை முள்ளிவாய்க்கால் பகுதியல் அரங்கேற்றி தமிழர்களை கொன்று குவித்து இராசாயன துகள்களை வீசி சாம்பலாக்கியும் புல்டோசர் ஏற்றி கொன்றும் எஞ்சியவர்களை உயிருடன் குழிகளில் போட்டு மூடியும் மிகப்பெரும் இன அழிப்பை கண்முன்னே நிகழ்த்திவிட்டு தற்போது அதிகார பீடத்திற்காக அடிபட்டு கொண்டிருக்கும் ராசபக்சவையும் அவரது சகோதரர்களையும், சரத்பொன்சேகாவையும் முழு சுதந்திரமாக உலாவ விட்டு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்களிற்கு தண்டனை வழங்கியுள்ளமை கடைந்தெடுக்கப்பட்ட அயோக்கியத்தனமாகும்.
இரண்டு: தேசியத்லைவரது பிறந்தநாள், மாவீர் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்காக கனடா சென்ற “நாம் தமிழர்” இயக்கத்தலைவர் சீமானை கைது செய்து நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது கனேடிய அரசு. தேசியத்தலைவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் இளையோர்கள் ஏற்பாடு செய்த நிகழ்வில் பங்குபற்றி கருத்துரையாற்றியதின் அடிப்படையிலையே நாடுகடத்தப்பட்டுள்ளார் சீமான் அவர்கள்.
பதிலுக்கு பதில், இரத்தத்திற்கு இரத்தம் என தமிழர்கள் அனுபவித்த அவலங்களை சிங்களத்திற்கும் திருப்பிக் கொடுக்காது எதிரியின் துப்பாக்கி முணை தன்னருகில் நெருங்கிவந்த போதும் கூட வீரத்துடன் போரிட்டு முற்றுகையினை உடைத்தெறிந்து பலநூறு கரும்புலி வீரர்களது தியாகத்தின் அடித்தளத்தில் தளபதிகளுடன் வெளியேறிச் சென்று தமது இருப்பினை உறுதி செய்துள்ளார் எம்தலைவர்.
சிங்களத் தலைவர்கள் தமது ஆட்சி அதிகாரத்திற்கு வலுச்சேர்ப்பதற்காகத்தானே ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை அழித்தொழித்தார்கள். அவர்கள் சிந்திய இரத்தத்தை பங்கு போட்டு தேர்தல் வெற்றியாக்கி கொள்ளத்தானே அதிபரும் முன்னால் இராணுவத் தளபதியும் துடியாய் துடிக்கின்றனர்.
இதனையே தேசியத்தலைவர் செய்திருந்தால் கிளிநொச்சியை கூடவிட்டு செல்லவேண்டியிருந்திருக்காது. ஒற்றை சிங்களனுக்கும் தீங்கு நேரக்கூடாது என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்து மெய்ப்பித்தவர் எமது தேசியத்தலைவர்.
இதனைத்தானே சீமான் தனது ஆதங்கமாக, மனிதநேயம் குறித்து வாய்கிழிய பேசிவரும் உலக வல்லரசு நாடுகளைப் பார்த்து கேட்டிருந்தார். அது தவறா?
சனநாயக விழுமியங்களை கட்டிக்காப்பாற்றும் நாடுகளில் ஒன்றாக கருதப்படும் கனடாவில் கூட அடிப்படையற்ற குற்றச்சாட்டை சுமத்தி இரு கைகளையும் பின்பக்கமாக வைத்து விலங்கிட்டு ஏதோ அதிபயங்கர குற்றவாளி போன்று நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதனால்தான் தொடர்ந்து உரையாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது என்று கனேடிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த போதும் விசாரனையை மேற்கொண்டது என்னவோ இந்திய சீக்கிய அதிகாரியே..! அதிலும் குற்றம் சாட்ப்பட்டதற்கு துளியளவேனும் சம்மந்தம் இல்லாத ராசீவ் காந்தி படுகொலை தொடர்பாகவும் விசாரனை நடாத்தியுள்ளமை உங்கப்பன் புதரிற்குள் இல்லை என்பது போன்று சம்பந்தப்பட்டவர்களை இனம் காட்டியுள்ளது.
தமிழர்களை வழிநடாத்தி மீண்டும் ஒன்றினைத்து செல்வதற்கு எந்தத் தலைமையும் உருவாகிவிடக் கூடாது என்பதில் இவர்கள் எல்லோரும் உறுதியாக இருப்பது தெளிவாகிறது.
மூன்று: 2011 ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டினை நடாத்துவதற்கான அனுமதியினை பெற்று, நடாத்தி முடிக்கப்பட்ட தமிழினப்படுகொலைகள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், போர்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பித்து கொள்வதற்கு முற்பட்ட சிறிலங்காவிற்கு ஆதரவாக 53 நாடுகள் பிரதிநிதித்துவம் வகிக்கும் காமன்வெல்த் அமைப்பினைச் சேர்ந்த 45 நாடுகள் இந்தியாவின் பின்னால் அணிவகுத்துநின்று ஆதரவு தெரிவித்து நின்றனவே..! இந்நிலையினை என்னவென்று சொல்ல? இருப்பினும் லண்டன் பிரதமரின் எதிர்ப்பினை அடுத்து கனடா, நியூசிலாந்து நாடுகளது பிரதமர்களும் இணைந்து கொடுத்த அழுத்தம் காரணமாக அம்முயற்சி தோற்கடிக்கப்பட்டிருந்தமை ஓரளவிற்கு ஆறுதலான விடயமாகும்.
சிறிலங்கா அரசின் தூதரக நெருக்கடிகளுக்கு உட்பட்டு தத்தமது நாடுகளில் உள்ள தமிழர் தலைமைத்துவங்களை வேரோடு அழிக்கும் முயற்சியில் மனிதாபிமானம் பற்றியும் மனிதநேயம் பற்றியும் உலகிற்கு போதனை செய்யும் இவ் உலகநாடுகள் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வரலாறு மீண்டும் எமது கைகளில் தந்திருக்கும் சனாதிபதி தேர்தல் களம்
வரலாறு மீண்டும் மீண்டும் எமது கைகளிலேயே எமக்கான தலைவிதியை தீர்மாணிக்கும் பொறுப்பினை கையளித்து நிற்கின்றது. அவ்வாறு தற்போது எமக்கு கிட்டியிருக்கும் வாய்ப்பு சிறிலங்கா சனாதிபதி தேர்தல் களமாகும்.
“தமிழரின் தேசிய தனித்துவத்தை அங்கீகரித்து அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை பகிர்ந்தளித்து, அரவணைத்து வாழ சிங்கள தேசம் மறுத்துவருகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இதுகாலம்வரை இந்த அரசியல் புறக்கணிப்பு தொடர்கிறது. வேண்டப்படாத இனத்தவராக ஒதுக்கப்பட்டு, புறந்தள்ளி வைக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து சலித்துப்போன தமிழர், சிங்கள ஆட்சியமைப்பையும் அதன் அதிகாரபீடத்தினையும் ஒதுக்கி புறக்கணிக்கத் தீர்மாணித்து விட்டனர். சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாக்களிக்காமை இந்தப்புறக்கணிப்பின் காத்திரமான வெளிப்பாடாகும்” இவ்வாறு கடந்த சனாதிபதி தேர்தல் தொடர்பாக 2005ம் ஆண்டு மாவீரர்தின உரையில் தேசியத்தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
இது முற்றிலும் உண்மை நிலையாகும். சிறிலங்காவினது ஆட்சி, அதிகாரபீடங்கள் எதுவானாலும் தமிழர்களிற்கு விரோதமாவே செயற்பட்டு வந்துள்ளமை கடந்த காலங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்களத்தின் அனைத்து கட்டமைப்புக்களும் ஒன்றிணைந்து தமிழர்களை அழித்தொழித்தும் எஞ்சியவர்களை முட்கம்பி வேலிக்குள் சிறைவைத்து சிதைத்தும் வந்த நிலையில் நாட்டை ஆளுவதற்கான போட்டிக்களத்தை திறந்துவிட்டு அவற்றை மூடிமறைப்பதற்கு முற்பட்டு நிற்கின்றது சிங்கள தேசம்.
இறுதிப்போரில் பயங்கரவாதத்தின் பெயரால் அனைத்துலக நாடுகளும் சிங்களத்துடன் இணைந்து செயற்பட்டு வந்தநிலையில் அதற்கு பின்னரான தீர்வுத்திட்டம் குறித்து வாக்குறுதி அழித்தவாறு சிறிலங்கா அரச தலைமை எந்தவித ஆக்கபூர்வ முன் முயற்சிகளையும் எடுக்காததோடு சிறிலங்காவை முற்றுமுழுதாக சீனத்திடம் அடகு வைக்கும் செற்பாட்டில் முழு மூச்சாக இறங்கியதனை அடுத்து அரசியல், பொருளியல் ரிதியான அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளன இந்த வல்லாதிக்க நாடுகள்.
இவற்றில் முக்கியமாக முட்கம்பி வேலிக்குள் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்ளை அவர்களது சொந்த இடங்களிற்கு திருப்பி அனுப்பவேண்டும், இறுதிப்போர் நடைபெற்ற போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்படுவதோடு போர்க்குற்ற விசாரணை எத்தருணத்திலும் ஆரம்பிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் நிலையினையும் தக்கவைத்து வருகின்றன வல்லாதிக்க நாடுகள்.
இதனையே அன்மைக்காலங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவிற்கான அனைத்துலக பிரதிநிதிகளின் வருகை உறுதிப்படுத்துகின்றது.
இதனை சற்றும் எதிர்பாராத சிங்களம் அதனை திசைதிருப்புவதற்கும், தற்காலிக ஓய்வுநிலையில் அக்கோரிக்கைகளை வைத்திருப்பதற்குமாகவே சனாதிபதி தேர்தலை அறிவித்துள்ளது.
யுத்தவெற்றியின் பிராதான கதாநாயகனாக சிங்கள மக்களால் கருதப்படும் முன்னால் இராணுவத் தளபதியும் கட்டளை அதிகாரியுமான சரத்பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பூரண ஆதரவுடன் எதிர்க் களத்தில் நிற்பதனையும், இன்னும் இரண்டு ஆண்டுகள் தனது பதவிக்காலத்தில் எஞ்சியிருப்பதையும் கருத்தில் கொள்ளாது அவசர அவசரமாக சனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதன் நோக்கம் இதுவாகவே இருக்கும்.
மேற்குலக நாடுகளது அச்சுறுத்தலுக்கு மத்தில் எஞ்சிய இரண்டு ஆண்டுகளாக ஆட்சியை நடாத்துவது என்பது மிகவு கடினமான விடயமாகும். இவ் இக்கட்டில் இருந்து சீனாவினால் கூட சிறிலங்காவை காப்பாற்ற முடியாது என்பதுதான் யதார்த்த நிலையாகும்.
சீனாவினால் முதலீடுகளையும் நிதியுதவிகளையும்தான் நேரடியாக வழங்கமுடியும். அவ்வாறே அனைத்துலக நாணய நிதியம் வழங்கிய கடனிற்கு இணையான தொகையை சிறிலங்காவிற்கு வழங்கி தனது நிலையை உறுதி செய்ய முற்பட்டுள்ளது சீனா.
தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆளுமையின் வீச்சு வலுவிழக்கக்கூடியவாறான இந் நகர்வுகளை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது.
அதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள அய்க்கிய நாடுகள் பொதுச்சபை உள்ளிட்ட உலக மன்றங்கறளினூடாக சிங்களத்திற்கு அரசியல், பொருளியல் ரீதியிலான நெருக்கடிகளை ஏற்படுத்த முனைந்து நிற்கின்றது. இந் நெருக்கடியை சீனாவினாலோ அல்லாது தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் பிரசன்னத்தினை விரும்பாத சக்திகளாலோ தடுத்து சிங்களத்தினை காப்பாற்றிவிட முடியாது என்பதே இன்றைய நிலையாகும்.
இதனை முற்றிலுமாக உணர்ந்து கொண்டதனால்தான் சனாதிபதித் தேர்தலை அறிவித்து தற் காலிகமாக தன்னை பாதுகாக்க முற்பட்டுள்ளது சிங்களம்.
தமிழர் சிந்திய இரத்தத்தை வைத்து நடக்கும் சிங்களத்தின் போட்டி அரசியல்
சிறிலங்காவிற்கான சனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கபட்ட பின்னர் தேல்தல்களம் தமிழகத்தையே விஞ்சிவிடும் அளவிற்கு சூடுபிடித்துள்ளது. தமிழின அழிப்பிற்கு யார் மூலகாரணம் என்பது தொடர்பாக, தமிழினத்தினை அழத்தொழித்தவனும் அதற்கு ஆணையிட்டவர்களும், எம்குலப் பெண்களின் கற்பை சூறையாடிவனும் அதற்கு கட்டளையிட்டு வேடிக்கை பார்த்தவர்களும் எதிர் எதிர் களத்தில் நின்று கொண்டு மாறி மாறி கருத்துக்களை கூறி பட்டிமன்றம் வைக்காத குறையாக கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் என்ன வேடிக்கை என்றால் தமிழினத்தை கூண்டோடு அழித்தொழித்த இருவரும் தமிழர்களின் நலனில் அதிக அக்கறை உள்ளவர்காளவும் தமிழர்களை காப்பதற்காக வந்த தேவ தூதர்கள் தாம் தான் என்றும் காட்ட முற்பட்டு தமது நடிப்புத் திறமையினை பரிசோதிக்கும் களமாக இந்த தேர்தல் களத்தினை மாற்றியுள்ளமைதான்.
தமிழீழ விடுதபை;புலிகளை அழித்தொழிப்பதாக கூறி மேற்கொள்ளப்பட்ட போரின் மூலமாக தமிழ் மக்களை அழித்தொழித்த பெருமைக்குரியவன் தான் மாத்திரமே என கூறிக்கொள்ளும் சரத் பொன்சேகா தமிழ் மக்களது வாக்கினை பெற்றுக்கொள்வதற்காக தேசியத்தலைவர் பிரபாகரனது பெற்றோர் ஆதரவு வழங்கினால் கூட ஏற்றுக்கொள்வதாகவும், முன்னால் விடுதலைப்புலிகளது போராளிகள் தளபதிகள் என யாராக இருந்தாலும் தனது வெற்றிக்காக பணியாற்றுவதற்கு முன்வந்தால் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்து சிங்கள ஆட்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தேர்தல் தேதி நெருங்கும் போது தமிழகத்தில் சிலர் கூறியது போல் தனித் தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என கூறினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஏன் என்றால் இவர்களது ஒரே இலக்கு சிறிலங்காவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான். இவர்களது பசப்புவார்த்தைகளுக்கு தமிழர்கள் ஒருபோதும் மயங்கமாட்டார்கள் என்பதனை உணரத்தானே போகின்றனர். இந்த நேரத்தில் கடந்த முறைபோன்று நாம் இது எமக்கான தலைமையை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இல்லைதானே என்று ஒதுங்கியருந்து வேடிக்கை பார்க்க முடியாது. அதனால் யாராவது ஒருவரை ஆதரிப்பது என்பதல்ல.
தமிழினம் எதிர்கொண்ட சிங்கள ஆட்சியாளர்கள் எல்லோரையும் ஒருமித்து வடித்தெடுத்தது போன்று தமிழின அழிப்பில் ஈடுபட்டு அதன் உச்சமாக ஏதுமறியாது கருவறைக்குள் இருந்த பிஞ்சுகளைக் கூட தேடியழித்து நரவேட்டையாடிவிட்டு இன்று தமிழ்ச் சிறுவர்களை வாரியணைத்து முத்தம் கொடுத்து கணக்கினை தீர்த்துவிடலாம் என எண்ணும் ராசபக்சவும், தமிழர்கள் சிந்திய குருதியில் நீச்சலடித்து அரசியல் கனவேதுமின்றி இருந்த நிலைமாறி வலுவான சிறிலங்காவின் அதிபர் வேட்பாளராகியிருக்கும் பொன்சேகா அன்னப்பறவையில் பறந்தாலும் இவர்கள் இருவரும் எமது தெரிவிற்கான தகுதியற்றவர்கள். ஏன் என்றால் இருவரும் கடைந்தெடுக்கப்பட்ட அயோக்கியர்களாகவும், அடிப்படையில் சிங்கள பௌத்த பேரினவாதிகளாகவும் இருப்பதனால்தான். இவர்களில் யார் வென்றாலும் எமது துயரநிலை மாறப்போவதில்லை என்பதுதான் உண்மை நிலை.
தமிழர் தரப்பின் பொது வேட்பாளரிற்கான அவசியம்
இருப்பினும் எமது வாக்குப்பலத்தினை நிரூபிப்பதற்காகவும், எமது வாக்குகள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதனை தடுப்பதற்காகவும் நாம் வாக்களித்தே ஆகவேண்டும். அதற்கு தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தவதே சாத்தியமாகும்.
சிறுபான்மையினர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவராக அப் பொதுவேட்பாளர் அமைவது அவசியமாகும். ஏன் என்றால் ஒரு கோடி நாற்பது இலட்சம் வாக்காளர்களில் சுமார் 25 இலட்சம் வாக்குகள் தமிழர் பகுதியில் அதாவது 6 தேர்தல் மாவட்டங்களில் உள்ளது. அதில் முழுமையாக வடகிழக்கில் எட்டு இலட்சம் தமிழர் வாக்குகளும் ஏனைய பகுதிகளில் சில இலட்சம் வாக்குகளும் முக்கியமாகும். அந்த வாக்குப்பலத்தினை ஒருமுகப்படுத்தி எமது பலத்தினை உறுதிப்படுத்துவோமாயின் அடுத்து நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பயனுள்ளதாக இருக்கும்.
சிங்களத்தின் பிரதான கட்சிகளின் செந்தப்பலம் எழுபது, எண்பது ஆசனங்கள்தான். கூட்டணிபலம் சேர்த்தே அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும். இந்நி;லையில் சிறுபான்மை இன மக்கள் அனைவரும் ஒருமித்து நிற்போமாயின் சுமார் நாற்பதிற்கு மேற்பட்ட ஆசனங்களை எமதாக்கிக் கொள்ள முடியும். அவ்வாறு சாத்தியமானால் எமது தரப்பு கோரிக்கைகளை வலுவான அரசியல் தளத்தில் நின்று முன்வைத்து நிறைவேற்றிக் கொள்வதற்கு குறைந்தபட்சமேனும் வாய்ப்பிருக்கின்றது.
தற்போதைய நிலையில் மனோகணேசனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்தனியே பொது வேட்பாளர் பற்றி அலோசித்து வருகின்றனர். தமிழ்மக்கள், தமிழ்பேசும் முசுலீம் மக்கள், மலையகத் தமிழர்களென எல்லோரும் ஒருமித்து ஏற்றுக் கொள்ளும் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவதன் ஊடாகவே இவை சாத்தியமாகும்.
முன்னர் நடைபெற்ற பல தேர்தல்களில் தனித்து நின்றபலர் தோல்வியடைந்திருந்த நிலையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியம், தன்னாட்சி உரிமை, தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளே என்பதை ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில் நின்றே 22 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையின் தொடர் வெளிபாடாகவே அன்மையில் நடைபெற்ற யாழ்ப்பாணம், வவுனியா மாநகரசபைத் தேர்தலில் குறைந்த படச சுவரொட்டி பிரச்சாரம் கூட செய்யாது கட்சி அலுவலகத்தில் இருந்து கொண்டே கணிசமான ஆசனங்களை கைப்பற்றியிருந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இதுவரை தமிழர்களின் தலைமையாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளது தலைமை வெளிப்படாது இருக்கும் இந்நிலையில் பிரிவு நிலை போக்கி எல்லோரும் ஒன்றினைந்து எமது அரசியல் தளத்தினை உறுதி செய்து கொள்ளவேண்டிய தருணமாகும்.வராலாறு நம்கையில் தந்த வாய்பினை முழுமையாக பயன்படுத்தி தமிழர் தரப்பின் அரசியில் இருப்பினை உறுதிசெய்துகொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முயற்சி எடுக்கவேண்டும்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கொள்கைவிளக்க உரையில் கூறப்பட்டவாறு, தமிழீழ இலட்சியத்தை நோக்கிய எமது மக்களின் போராட்டத்திற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புக்களும் அதன் செயற்பாட்டாளர்களும் எமது இலட்சியமான தமிழீழ தனியரசு கோட்பாட்டில் இருந்து விலகிப்போவதை தமிழ்மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்ற இன்றைய உண்மைநிலையை யாரும் புறந்தள்ளிவிட்டு செயற்பட்டுவிட முடியாது.
இந்நிலையில் இத்தேர்தலில் மகிந்த ராசபக்சவிற்கு முண்டு கொடுப்பதற்கு, சித்தார்த்தனும், டக்ளசு தேவானந்தாவும், சந்திரகாந்தனும்(பிள்ளையான்), தொண்டைமானும் முன்வந்துள்ளமை இனவிடுதலையினைவிட ஆட்சியாளர்கள் வீசும் எலும்புத் துண்டுகளே அவர்களுக்கு முக்கியமாக புலப்பட்டதன் வெளிப்பாடே ஆகும்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முக்கிய ஆதாரமாக கொண்டுள்ள தமிழர்களை அழித்து பெறப்பட்ட போர் வெற்றியை பெற்றுத்தந்த தளபதியையே விரட்டி விட்ட மகிந்த, சகோதரர்களுக்கு இவர்களை விரட்டிவிட எவ்வளவு நேரமாகும் என்பதனை இந்த எலும்புபொறுக்கிகள் உணர வேண்டும்.
எமது அரசியல் நிலையை உறுதி செய்வதற்கான மாபெரும் பணி தாயகத் தமிழர்கள் முன் உள்ளது போன்று தாயகத்தில் நீண்ட காலமாக சிங்கள ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட பொதுமக்களின் கட்டுமானங்களை சீரமைத்து இடம்பெயர்ந்து முட்கம்பி வதைமுகாம்களில் அடைபட்டுள்ளவர்களை மீட்டு மறுவாழ்விற்கு உட்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு உலகத்தமிழர்களுக்கு உண்டு. அதோடு விழிதிறந்த உறக்க நிலையில் இருந்து, எமது மக்களின் அழிவினைப்பார்த்துக் கொண்டிருந்த சர்வதேச நாடுகளை இயங்குநிலைக்கு கொண்டுவந்து சிங்களத்திற்கு தொடர்ச்சியாக நெருக்கடிகளை வழங்க வைக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பும் உண்டு.
ஏன் என்றால் சிங்களத்தை நெருக்கடிக்குள் வைத்துக் கொண்டே எமது விடுதலை நோக்கிய பயணத்தினை மேற்கொள்ள முடியும். இது மிகவும் கடினமான பணியாக இருப்பினும் அவசியமானதாகும். ஆயிரம் மைல்கள் நடைபயணம் செல்பவனும் முதலாவது அடியை எடுத்து வைத்தால்தான் சாத்தியப்படும் என்பதற்கினங்க விரைவாக பணியாற்ற விரைந்திடுவோம்.
“நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்பு வாய்ந்த இனம், மிகவும் தொன்மை வாய்ந்த இனம், தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழ்கின்ற ஒருஇனம். ஒடுக்குமுறைக்கு எதிராக, விடிவு தேடி, விடுதலை வேண்டி போராடி வருகின்றோம். நாம் காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எமது சொந்த மண்ணில் எமக்கே உரியதான வரலாற்று மண்ணில் அந்நியரிடம் பறிகொடுத்த ஆட்சியுரிமையை மீள நிலைநாட்டுவதற்காகவே போராடிவருகின்றோம். இழந்துவிட்ட எமது இறையாண்மையை மீள நிறுவ, எமது சுதந்திர தேசத்தை மீள கட்டி எழுப்புவதற்காகவே நாம் போராடிவருகின்றோம்.
எமது மக்களின் இந்த நீதியான போராட்டத்தைச் சிங்கள தேசம் தொடர்ந்தும் ஏற்றுக் கொள்ள மறுத்துவருகின்றது. மாறாக, எம்மண்ணின் மீதும் மக்களின் மீதும் பெரும் இன அழிப்புப் போரை, ஆக்கிரமிப்பு போரை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அடக்குமுறைக்குட்பட்டு, சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும் குடிபெயர்ந்த அகதிவாழ்வுமாக எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ, எந்தவோர் அமைப்போ குரல் கொடுக்கவில்லை. ஆதரவோ, அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணைமூடிக் கொண்டு, பாராமுகமாகச் செயற்படுகிறது.
பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர்கள் பரந்து வாழ்ந்த போதும் எமக்கென ஒருநாடு இல்லாதமைதான் இந்த பரிதாப நிலைக்கு – இந்த மோசமான நிலைக்கு காரணம்”.
அந்த நிலை மாற்றி எமக்கான தேசமான தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான பாதையில் எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறுவிட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள, அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். தமிழீழம் காண்போம்.
தமிழர் தலைமைகளை தேடியழிப்பதிலும் மறுபுறம் சிங்களத்திற்கு ராசதந்திர ரீதியில் நெருக்கடிகளை கொடுப்பதுமாக செயற்படும் உலகநாடுகளது சவாலை எதிர் கொண்டு தமிழீழ தனியரசிற்கான பணியை விரைவுபடுத்துவோம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
இரா.மயூதரன்
எதிர்வரும் வியாழக்கிழமை (10) நோர்வேக்கு விஜயம் மேற்கொள்ளும் சமாதானத்திற்கான நோபல் விருது பெறும் அமெரிக்க அரச அதிபரின் விஜயத்தை முன்னிட்டு ஈழத் தமிழர் அவை பேரணி ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. அதில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு ஈழத் தமிழர் அவை அவை கேட்டுள்ளது. இதுகுறித்து ஈழத் தமிழர் அவை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அமெரிக்க அரச தலைவரின் வருகையை முன்னிட்டு ஈழத்தமிழர் அவையினால், 10ஆம் நாள் வியாழன் அன்று மாலை 5.30 மணி முதல் 7மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்படுகின்றது.
ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைய வளாகத்திலிருந்து (Oslo Sentralstasjon) நாடாளுமன்றம் நோக்கி பேரணி இடம்பெறவுள்ளது. நோர்வேயில் சமாதானத்திற்காக உழைக்கும் பல்லின அமைப்புக்களுடன் இணைந்து, ஈழத்தமிழர் அவை இக்கவனயீர்ப்புக்கான ஒழுங்கமைப்பினை மேற்கொள்கின்றது.
அனைத்து தமிழ் மக்களையும் அகவை பேதமின்றி அணிதிரளுமாறு வேண்டி நிற்கின்றோம்.
நன்றி
ஈழத் தமிழர் அவை.
பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசர காலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஐா கஜேந்திரன் அவர்கள் சிங்களதேசம் தமிழ் தேசத்திற்குள்ள இறைமையின் அடிப்படையில் அவர்கள் தனித்தேசமாக தங்களை தாங்களே ஆள அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதுடன் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளதாக கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்து முக்கிய கருத்துக்கள் வருமாறு:
பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசர காலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஐா கஜேந்திரன் அவர்கள் சிங்களதேசம் தமிழ் தேசத்திற்குள்ள இறைமையின் அடிப்படையில் அவர்கள் தனித்தேசமாக தங்களை தாங்களே ஆள அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதுடன் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
யுத்தம் முடிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யுத்தம் முடிக்கப்பட்டு 6 மாதங்களின் பின்னரும் தொடரும் இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு என்பது தொடர்ந்தும் தமிழ் மக்களை பாதிப்புறச் செய்வதாகவே உள்ளது.
குறிப்பாக வன்னியில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட 350,000 திற்கும் அதிகமான மக்கள் மீண்டும் அவர்களுடய ஊர்களிலே சென்று சுதந்திரமாக குடியமர முடியாதபடி இந்த அவசரகாலச்சட்டம் தடையாக இருக்கின்றது.
இராணுவம் இல்லது அரசாங்கம் விரும்புகின்ற இடங்களுக்கு மட்டும் அந்த மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ9 வீதிக்கு கிழக்குப் பக்கமும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும் பகுதிகளிலும் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை.
அப்பகுதியில் பெருமளவான பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயங்களாகவே காணப்படுகின்றது. பெருமளவான நிலங்கள் பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்காகவும் கையகப்படுத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இன்னமும் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. அந்த மக்கள் மீளக் குடியமர எந்தவித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக அனுமதிக்கப்படல் வேண்டும்.
கடந்த காலத்தில் யுத்தம் நடைபெற்றபொழுதிலும் சரி அல்லது அதற்குப் பின்னரும் சரி விடுதலைப் புலிகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.
இன்னமும் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் மிகுந்த மன உழைச்சலுடனும் அடிப்படை வசதிகள் இன்றியும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக சொந்த இடங்களில் சென்று குடியமர அனுமதிக்கப்படல் வேண்டும்.
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வெறுமனே நடமாட்ட சுநத்திரம் மட்டும் வழங்கப்பட்டால் போதாது அவர்கள் விரும்பிய இடங்களில் சென்று தாம் விரும்புவது போன்று குடியமர அனுதிக்கப்படல் வேண்டும்.
அடுத்த ஐனாதிபதி தெரிவு சம்பந்தமான போட்டியிலே நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் ஆனால் அழிக்கப்பட்ட அவலத்திற்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வு பற்றிய எந்தக் கரிசனையும் யாருக்கும் இல்லை.
இன்று முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தெருவிலே விடப்பட்டவர்கள் போன்றே விடப்பட்டுள்ளனர். அந்த மக்கள் தாம் முகாம்களில் இருந்து வெளியேறிச் செல்ல வேண்டும் என்பதற்காக தமது உறவினர்களின் உதவியுடன் முகாம்களில் இருந்து வெளியேறிச் சென்றிருந்தாலும் கூட அவர்கள் வெளியேறிச் சென்று தங்கியியுள்ள இடங்களில் ஒரு வேளை உணவு உண்பதற்கு கூட வசதியில்லாமல் குந்தியிருப்பதற்கு இடமில்லாமல் அவலப்படுகின்றனர்.
அழிக்ப்பட்ட மக்களுக்கு முழுமையான நஸ்ட ஈடு வழங்கப்படல் வேண்டும் வீடுகளை இழந்த மக்கள் மீண்டும் தமது வீடுகளை கட்டிக் கொள்வதற்கும் இழந்த சொத்துக்களை மீண்டும் பெற்றுக் கொள்வாற்கு ஏற்ற வகையில் முழுமையான நட்ட ஈடு வழங்கப்படல் வேண்டும் இது உடனடியான தேவையாக உள்ளது.
இன்று போர் முடிந்த பின்னர் இலங்கையில் இருந்த எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது போலவும் கடந்த 33 வருடங்களாக மட்டுமே இலங்கையில் பிரச்சினை இருந்து வந்தது என்பது போலவும் 33 வருடங்களாக இருந்து வந்த பிரச்சினையை தீர்த்துள்ளதன் மூலம் இலங்கையில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டது போலவும் கருத்துருவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இலங்கையில் ஐனநாயகத்தினை ஏற்படுத்தப் போவதாகவும் சிவில் நிருவாகத்தினை ஏற்படுத்தப் போவதாகவும் கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழ் மக்களுடய இனப்பிரச்சினை என்பது வெறும் 33 வருடப் பிரச்சினை அல்ல அது புலிகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினையும் அல்ல அது 48 ம் ஆண்டில் இருந்து எழுந்த பிரச்சினை அதற்கு முன்னிருந்து 1833ல் ஆங்கிலேயர்களால் தமிழ் இராச்சியம் சிங்கள இராச்சியத்துடன் இணைக்கப்ட்டதன் மூலம் எழுந்த பிரச்சினை.
1948 ம் ஆண்டில் இருந்து 75 ம் ஆண்டுவரை தந்தை செல்வா அவர்கள் ஸ்ரீலங்கா என்ற நாட்டிற்குள்ளே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அரசியல் உரிமைகளை பெற்று வாழ்வதற்கான முழு முயற்சிகளையம் மேற்கொண்டார். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் 1975ம் ஆண்டிலே ஓர் தெளிவான உரையை ஆற்றிவிட்டுச் சென்றார்.
இந்நிலையில் நாங்களும் கூறுகின்றோம் நீங்கள் யுத்தத்தினை முடித்திருந்தாலும் கூட தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை. எங்களுடய அரசியல் பிரச்சினைக்கான தீர்வு என்பது எங்களது தனித் தேசம் என்பது அங்கீகரிக்கப்படுவதன் ஊடாகவே மேற்கொள்ளப்படல் வேண்டும்.
அதாவது தமிழர்கள் ஓர் தனித்துவமான ஒரு தேசம் எங்களுக்கு இறைமை உள்ளது எங்களுக்குள்ள இறைமையின் அடிப்படையில் எங்களை நாங்களே ஆளுவதற்கான முழு உரிமையும் எங்களுக்கு உண்டு. எங்களது இறைமை பறிக்கப்பட்டு எங்கள் மீது உங்களது இறைமை திணிக்கப்பட்டுள்ளது.
ஆகவே தமிழ் மக்களின் பூரணமான சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பதன் மூலம் எங்களது அரசியல் உரிமைகளை நீங்கள் அங்கீகரிக்க முயல்வது தான் எதிர்காலத்தில் இலங்கைத்தீவில் அமைதி நிலவுவதற்கான ஒரே வழியாக இருக்கும்
மாறாக சீனாவினுடய இராணுவ உதவிகளுடன் வடகிழக்கில் இராணுவ முகாம்களை அமைத்து தமிழ் தேசத்தினை ஓர் சிங்கள பிரதேசமாக மாற்ற முயல்வதன் மூலம் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை நசுக்கி விடுவதற்கோ அல்லது சிங்கள தீவாக மாற்றி விடுவதற்கோ நீங்கள் முயற்சி செய்தால் அது ஒரு பொழுதும் வெற்றியளிக்காது.
ஏனெனில் இன்று நீங்கள் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்றால் அது கொடூரமான முறையில் முடிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்திலே கிட்டத்தட்ட 60000 திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் உள்ளது இது நடைபெற்றமைக்கு காரணம் இந்தப் பிராந்தியத்திலே தமது ஆதிக்கத்தினை நிலை நிறுத்துவதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் உதவிதான் இவ்வாறன கொடூரமான முடிவுக்கு வாய்ப்பாக அமைந்தது.
ஆனால் தொடர்ந்தும் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைகளை கொடுக்க மறுத்து சீனாவின் உதவிகளோடு தமிழர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை நீங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்தால் அதே பிராந்திய சக்திகள் மீண்டும் இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி இலங்கைத்தீவில் மீண்டும் ஓர் பிரச்சினையை உண்டு பண்ண முயல்வார்கள் இந்த யதார்த்தத்தினை புரிந்து கொண்டு தமிழ் மக்களாகிய எங்களுக்கு தரவேண்டி உரிமைகளை எங்களுடய தேசம் என்ற அடிப்படையில் எங்களுக்கு தந்து இந்த தீவிலே தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சந்தோசமாக வாழக் கூடிய சூழலை உருவாக்குவதற்கு நீங்கள் முன்வரவேண்டும்.
நீண்டகால இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக எங்களது தமிழ் தேசம் தனித் தேசமாக அங்கீகரிக்ப்பட்டு எங்களது இறையாண்மையின் அடிப்படையில் நாங்கள் எங்களை ஆட்சி செய்வதற்கான உரிமை எங்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.என்று அவரது உரையில் தெரிவித்துள்ளார்.
செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்து முக்கிய கருத்துக்கள் வருமாறு:
பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசர காலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஐா கஜேந்திரன் அவர்கள் சிங்களதேசம் தமிழ் தேசத்திற்குள்ள இறைமையின் அடிப்படையில் அவர்கள் தனித்தேசமாக தங்களை தாங்களே ஆள அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதுடன் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
யுத்தம் முடிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யுத்தம் முடிக்கப்பட்டு 6 மாதங்களின் பின்னரும் தொடரும் இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு என்பது தொடர்ந்தும் தமிழ் மக்களை பாதிப்புறச் செய்வதாகவே உள்ளது.
குறிப்பாக வன்னியில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட 350,000 திற்கும் அதிகமான மக்கள் மீண்டும் அவர்களுடய ஊர்களிலே சென்று சுதந்திரமாக குடியமர முடியாதபடி இந்த அவசரகாலச்சட்டம் தடையாக இருக்கின்றது.
இராணுவம் இல்லது அரசாங்கம் விரும்புகின்ற இடங்களுக்கு மட்டும் அந்த மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ9 வீதிக்கு கிழக்குப் பக்கமும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும் பகுதிகளிலும் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை.
அப்பகுதியில் பெருமளவான பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயங்களாகவே காணப்படுகின்றது. பெருமளவான நிலங்கள் பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்காகவும் கையகப்படுத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இன்னமும் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. அந்த மக்கள் மீளக் குடியமர எந்தவித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக அனுமதிக்கப்படல் வேண்டும்.
கடந்த காலத்தில் யுத்தம் நடைபெற்றபொழுதிலும் சரி அல்லது அதற்குப் பின்னரும் சரி விடுதலைப் புலிகள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 11000 வரையான தமிழர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்.
இன்னமும் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் மிகுந்த மன உழைச்சலுடனும் அடிப்படை வசதிகள் இன்றியும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக சொந்த இடங்களில் சென்று குடியமர அனுமதிக்கப்படல் வேண்டும்.
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வெறுமனே நடமாட்ட சுநத்திரம் மட்டும் வழங்கப்பட்டால் போதாது அவர்கள் விரும்பிய இடங்களில் சென்று தாம் விரும்புவது போன்று குடியமர அனுதிக்கப்படல் வேண்டும்.
அடுத்த ஐனாதிபதி தெரிவு சம்பந்தமான போட்டியிலே நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் ஆனால் அழிக்கப்பட்ட அவலத்திற்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வு பற்றிய எந்தக் கரிசனையும் யாருக்கும் இல்லை.
இன்று முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தெருவிலே விடப்பட்டவர்கள் போன்றே விடப்பட்டுள்ளனர். அந்த மக்கள் தாம் முகாம்களில் இருந்து வெளியேறிச் செல்ல வேண்டும் என்பதற்காக தமது உறவினர்களின் உதவியுடன் முகாம்களில் இருந்து வெளியேறிச் சென்றிருந்தாலும் கூட அவர்கள் வெளியேறிச் சென்று தங்கியியுள்ள இடங்களில் ஒரு வேளை உணவு உண்பதற்கு கூட வசதியில்லாமல் குந்தியிருப்பதற்கு இடமில்லாமல் அவலப்படுகின்றனர்.
அழிக்ப்பட்ட மக்களுக்கு முழுமையான நஸ்ட ஈடு வழங்கப்படல் வேண்டும் வீடுகளை இழந்த மக்கள் மீண்டும் தமது வீடுகளை கட்டிக் கொள்வதற்கும் இழந்த சொத்துக்களை மீண்டும் பெற்றுக் கொள்வாற்கு ஏற்ற வகையில் முழுமையான நட்ட ஈடு வழங்கப்படல் வேண்டும் இது உடனடியான தேவையாக உள்ளது.
இன்று போர் முடிந்த பின்னர் இலங்கையில் இருந்த எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது போலவும் கடந்த 33 வருடங்களாக மட்டுமே இலங்கையில் பிரச்சினை இருந்து வந்தது என்பது போலவும் 33 வருடங்களாக இருந்து வந்த பிரச்சினையை தீர்த்துள்ளதன் மூலம் இலங்கையில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டது போலவும் கருத்துருவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இலங்கையில் ஐனநாயகத்தினை ஏற்படுத்தப் போவதாகவும் சிவில் நிருவாகத்தினை ஏற்படுத்தப் போவதாகவும் கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழ் மக்களுடய இனப்பிரச்சினை என்பது வெறும் 33 வருடப் பிரச்சினை அல்ல அது புலிகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினையும் அல்ல அது 48 ம் ஆண்டில் இருந்து எழுந்த பிரச்சினை அதற்கு முன்னிருந்து 1833ல் ஆங்கிலேயர்களால் தமிழ் இராச்சியம் சிங்கள இராச்சியத்துடன் இணைக்கப்ட்டதன் மூலம் எழுந்த பிரச்சினை.
1948 ம் ஆண்டில் இருந்து 75 ம் ஆண்டுவரை தந்தை செல்வா அவர்கள் ஸ்ரீலங்கா என்ற நாட்டிற்குள்ளே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அரசியல் உரிமைகளை பெற்று வாழ்வதற்கான முழு முயற்சிகளையம் மேற்கொண்டார். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் 1975ம் ஆண்டிலே ஓர் தெளிவான உரையை ஆற்றிவிட்டுச் சென்றார்.
இந்நிலையில் நாங்களும் கூறுகின்றோம் நீங்கள் யுத்தத்தினை முடித்திருந்தாலும் கூட தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை. எங்களுடய அரசியல் பிரச்சினைக்கான தீர்வு என்பது எங்களது தனித் தேசம் என்பது அங்கீகரிக்கப்படுவதன் ஊடாகவே மேற்கொள்ளப்படல் வேண்டும்.
அதாவது தமிழர்கள் ஓர் தனித்துவமான ஒரு தேசம் எங்களுக்கு இறைமை உள்ளது எங்களுக்குள்ள இறைமையின் அடிப்படையில் எங்களை நாங்களே ஆளுவதற்கான முழு உரிமையும் எங்களுக்கு உண்டு. எங்களது இறைமை பறிக்கப்பட்டு எங்கள் மீது உங்களது இறைமை திணிக்கப்பட்டுள்ளது.
ஆகவே தமிழ் மக்களின் பூரணமான சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பதன் மூலம் எங்களது அரசியல் உரிமைகளை நீங்கள் அங்கீகரிக்க முயல்வது தான் எதிர்காலத்தில் இலங்கைத்தீவில் அமைதி நிலவுவதற்கான ஒரே வழியாக இருக்கும்
மாறாக சீனாவினுடய இராணுவ உதவிகளுடன் வடகிழக்கில் இராணுவ முகாம்களை அமைத்து தமிழ் தேசத்தினை ஓர் சிங்கள பிரதேசமாக மாற்ற முயல்வதன் மூலம் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை நசுக்கி விடுவதற்கோ அல்லது சிங்கள தீவாக மாற்றி விடுவதற்கோ நீங்கள் முயற்சி செய்தால் அது ஒரு பொழுதும் வெற்றியளிக்காது.
ஏனெனில் இன்று நீங்கள் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்றால் அது கொடூரமான முறையில் முடிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்திலே கிட்டத்தட்ட 60000 திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் உள்ளது இது நடைபெற்றமைக்கு காரணம் இந்தப் பிராந்தியத்திலே தமது ஆதிக்கத்தினை நிலை நிறுத்துவதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் உதவிதான் இவ்வாறன கொடூரமான முடிவுக்கு வாய்ப்பாக அமைந்தது.
ஆனால் தொடர்ந்தும் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைகளை கொடுக்க மறுத்து சீனாவின் உதவிகளோடு தமிழர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை நீங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்தால் அதே பிராந்திய சக்திகள் மீண்டும் இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி இலங்கைத்தீவில் மீண்டும் ஓர் பிரச்சினையை உண்டு பண்ண முயல்வார்கள் இந்த யதார்த்தத்தினை புரிந்து கொண்டு தமிழ் மக்களாகிய எங்களுக்கு தரவேண்டி உரிமைகளை எங்களுடய தேசம் என்ற அடிப்படையில் எங்களுக்கு தந்து இந்த தீவிலே தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சந்தோசமாக வாழக் கூடிய சூழலை உருவாக்குவதற்கு நீங்கள் முன்வரவேண்டும்.
நீண்டகால இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக எங்களது தமிழ் தேசம் தனித் தேசமாக அங்கீகரிக்ப்பட்டு எங்களது இறையாண்மையின் அடிப்படையில் நாங்கள் எங்களை ஆட்சி செய்வதற்கான உரிமை எங்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.என்று அவரது உரையில் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா ஐனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மற்றும் ஐனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச ஆகியோர் இந்தியா பயணம் செய்கின்றனர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அழைப்பின் பெயரில் இவர்கள் புதுடில்லி புறப்படவுள்ளனர்.
எதிர்வரும் வியாழக்கிழமை புதுடில்லி செல்லும் இவர்கள் இரு நாட்கள் தங்கியிருந்து, இந்தியாவின் தேசிய பாதுபாப்பு ஆலோசகர் என்.கே நாராயணன், இந்தியாவின் வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவொ, முன்னாந் இலங்கைக்கான இந்தியத்தூதுவரும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகருமான பிரதீப் குமார் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.
ஐனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் முதலில் சரத்பொன்சேகாவும், அடுத்து ரணில் விக்கிரமசிங்கவும், இதனைத் தொடர்ந்து மகிந்தவின் பிரதிநிதிகளும் இந்தியா செல்கின்றமை தேர்தலில் தங்களுக்கான ஆதரவைத் திரட்டுவதற்காகவே என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் வியாழக்கிழமை புதுடில்லி செல்லும் இவர்கள் இரு நாட்கள் தங்கியிருந்து, இந்தியாவின் தேசிய பாதுபாப்பு ஆலோசகர் என்.கே நாராயணன், இந்தியாவின் வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவொ, முன்னாந் இலங்கைக்கான இந்தியத்தூதுவரும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகருமான பிரதீப் குமார் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.
ஐனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் முதலில் சரத்பொன்சேகாவும், அடுத்து ரணில் விக்கிரமசிங்கவும், இதனைத் தொடர்ந்து மகிந்தவின் பிரதிநிதிகளும் இந்தியா செல்கின்றமை தேர்தலில் தங்களுக்கான ஆதரவைத் திரட்டுவதற்காகவே என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க கொள்கை – தமிழர்களின் புதிய அரசியல் – எம்மை ஒடுக்கும் சிங்களவனுக்கு நாமே தண்டனை கொடுப்போம் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்
சிங்களவர்களுக்கு உதவி செய்து அவர்களது மனதை வெல்வதே புதிய அமெரிக்க கொள்கையினை அடையும் தந்திரமாக இருக்கின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் ஆனால் இங்கு தமிழர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் என்னவெனில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிக்கு கொடுத்த முக்கியத்துவம் இனிமேல் இருக்காது என்றும் முழு இலங்கையினையும் சமமாக கருதும் நிலையே இனி கொண்டுவரப்படுகின்றது.
அதாவது அந்த அறிக்கையில் இலங்கையினை நாம் இழக்க முடியாது என்ற தலைப்பில் இந்த உள்ளார்ந்த கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. இதன்படி சிங்கள மக்களுக்கு பாரிய பொருளாதார திட்டங்களை கொடுத்து அவர்களுக்கு அமெரிக்கா மீது இருக்கும் கோபங்களை கழுவி அதனூடாக தமது திட்டங்களுக்குஆதரவு தேடும் முயற்சியினையே செய்யவேண்டும் என தெளிவாக கூறப்படுகின்றது.
சீனா மற்றும் அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் இதனையே இலங்கைக்கு செய்து இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வந்துள்ளது என்பதே கொள்கை வகுப்பாளர்களின் கருத்தாக இருக்கின்றது.
எனவே இனிவரும் காலங்களில் வடக்கு கிழக்கு பற்றியோ அன்றி தமிழ் மக்கள் பற்றியோ தாம் விசேடமாக எதுவும் செய்ய தேவை இல்லை என்பதே அமெரிக்க நிர்வாகத்தின் புதிய கொள்கை. பேசுவதற்கு எதுவும் இல்லை, போர் முடிந்து விட்டது, தலையிடி குறைந்து விட்டது, இனி வடக்கு கிழக்கில் யாரும் தலை எடுக்க போவதும் இல்லை தலையிடி தரப்போவதும் இல்லை, இருக்கின்ற விசுக்கோத்துக்களை எப்படியாவது ஜன நாயகம், மனித உரிமை என்று ஏமாற்றிவிடலாம் என்ற அடிப்படையிலேயே அமெரிக்காவின் அடுத்த கட்ட திட்டம் இடம்பெற போகின்றது.
எங்கட விசுக்கோத்துக்கள் தெரிந்தோ தெரியாமலோ இப்பவும் மேற்குலகை உள்வாங்க வேணும் என்றால் அவர்கள் பாணியில் போகவேணும் என்று சொல்லிக்கொண்டும், புலிகளுக்கு அரசியல் தெரியாது என்றும் கூறி திரிகின்றனர். இந்தா பாருங்க செய்து காட்டுறம் என்று வரிந்து கட்டிக்கொண்டு வரிசையில் புறப்பட்டு விட்டனர்.இவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால் மேற்குலகம் அயல் நாடுகள் தமது நோக்கத்தை தான் முன் நிறுத்துவார்கள் ஆனால் அதற்குள் எமக்கு என்ன எடுக்கலாம் என பார்க்கவேண்டும் அதுதான் அரசியல் என்றும் இராச தந்திரம் என்றும் கூறுகின்றார்கள்.
எடுத்துக்காட்டாக தேன் எடுப்பவன் எடுத்துக்கொண்டு போக சிந்துவதனை நாங்கள் நக்கலாம் என செய்தும் காட்டுகின்றார்கள். பிரச்சினை என்ன வென்றால் சிந்துவதனை நாங்கள் எமது மக்களுக்காக நக்குவதற்கும் கூட ஏதோ ஒரு வகையில் எமக்கு பலமும் அல்லது அழுத்தம் கொடுக்கும் சக்தியும் இருக்கவேண்டும். இது ஜன நாயக ரீதியாக சாத்தியமா? தற்போதுள்ள ஜன நாயக கட்டமைப்பின் மூலம் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என கூறும் தமிழ் தலைவர்கள் உள்ளுக்குள் இது சாத்தியம் இல்லை என ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தனிப்பட்ட ரீதியில் கதைக்கும் போது சரியாக கதைப்பவர்கள் மக்கள் முன் சொல்லும் போது வெறுமாதிரி சொல்கின்றனர். ஆகவே எமது பிரதி நிதிகளும் கூட மேற்குலகம் மாதிரியே தமிழ் மக்களை அணுகுகின்றார்களா?
ஜன நாயக பாதை எமது செயற்பாடுகளை தற்போது பாதுகாப்பதற்காக, எம்மை பாதுகாப்பதற்காக, எம்மை சர்வதேசம் அணுகுவதற்காக என்று கூறும் இந்த புதிய அமைப்புக்களின் தலைவர்களும், பிரதிநிதிகளும் உண்மையாக எம்மை பாதுகாத்துக்கொள்ளவும் எமக்கான சுதந்திரத்தை பெற அல்லது எம்மை முற்று முழுதாக இன அழிவில் இருந்து பாதுகாக்க வைத்திருக்கும் பொறிமுறை என்ன? பலம் என்ன?
விடுதலைப்புலிகளே அந்த பொறியும் பலமுமாக இவ்வளவு காலம் வரை இருந்தார்கள் அதற்கு பின்னடைவு வந்தவுடன் இருப்பவர்களையும் பிய்த்தெடுத்து, பாடைகட்டி அனுப்புவதில் எம்மவர்களிடையே எவ்வளவு போட்டி? விடுதலைப்போரில் ஆயுத ரீதியான போராட்டத்தில் பின்னடைவு வந்தவுடன் அந்த கொள்கையே தவறு என கூறுபவர்கள் தங்கள் கொள்கையினை தெளிவாக விளக்கி எப்படி உரிமைகளை பெறமுடியும் என கேட்டால் விடை?? அவர்கள் சொல்ல வருவது காலவோட்டத்தில் ஒரு நாள் அது சாத்தியமாகும் என்கிறார்கள்.
இங்கு நாம் ஜன நாயக கட்டமைப்புக்களை புறக்கணிப்பது என்று கூறவில்லை ஆனால் உலகத்தில் ஜன நாயகத்தை பாதுகாப்பதற்கு எந்தவொரு நாடோ அல்லது நாடு சாரா அமைப்புக்களோ ஆயுத ரீதியாக எவ்வளவோ பலத்தினை வைத்துக்கொண்டுதான் , எவ்வளவோ உயிர்பலிகளை கொடுத்துதான் அதனை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேற்குலகமும் சரி, ஆசிய நாடுகளும் சரி தினம் தினம் உயிர்பலிகளை கொடுத்தே தமது ஜன நாயகம் என்ற சொல்லை பாதுகாத்து கொண்டு வருகின்றார்கள். இந்த உண்மையினை அந்தந்த நாடுகளில் இருக்கும் தமிழ் தலைவர்கள் ஏற்று கொள்ள மறுப்பது ஏன்? அதற்காக மேலும் தமிழர்கள் உயிர்ப்பலி கொடுக்கவேண்டும் என்பது இங்கு வாதம் அல்ல
சிங்கள தேசம் இன்று எதனையுமே தர மறுப்பதற்கு காரணம் என்ன? எமது இராணுவ பலம் இல்லாது போனது என்பதனை ஏன் உள்ளுக்குள்ளே ஒத்துக்கொண்டும் வெளிப்படையாக சடைந்தும் பேசி வருகின்றீர்கள்.
ஆகவே உங்கள் விருப்பப்படி சன நாயகத்தினை கட்டி எழுப்பி எதையாவது செய்யுங்கள் அதே நேரம் எல்லாவற்றுக்கும் அடிப்படையான தமிழர்களது சமூக, பொருளாதார, படை பலத்தினை கட்டி காக்கும் தந்திரோபாயத்தினையும் மறக்காதீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளை, வழுக்களை திருத்தி மீழ ஒழுங்கமைத்து, எப்படி அதனை செய்யலாம் எனவும் சிந்திக்க வேண்டும். ஆக குறைந்தது எமக்கு நியாய பூர்வமாக எதுவும் கிடைக்காது போனால் எமது உரிமைக்காகவும் எம்மை ஒடுக்கிவரும் சிங்கள தலைமைக்கு நாமே தண்டனை கொடுக்கவும் தயங்க மாட்டோம் என்ற செய்தியினையாவது சொல்வதற்கு தமிழர்கள் தயாராக இருக்கவேண்டும்.
எல்லோரும் சன நாயகம், இராச தந்திரம் என்று மேற்குலகத்தின் (இனிப்பு) பாணிக்குள் போகாது அனைத்து விடயங்களையும் சுட்டிக்காட்டி, தமிழர்களை ஏமாற்ற முடியாது என்றும் எமாற்ற நினைப்பவர்களை யாராக இருந்தாலும் தெட்ட தெளிவாக எதிர்த்து குரல் கொடுக்க கூடியவர்கள் எதிர்த்து நிற்க கூடியவர்கள் எப்போதும் இருக்கவேண்டும் அவர்களை பாதுகாக்க வேண்டும் அதனை சன நாயக அமைப்புக்களும் அதனை நிறுவ போகின்றவர்களும் கருத்தில் கொள்ளவேண்டும்.
பயங்கரவாதம் வெற்றிகொள்ளப்பட்டமைக்குச் சொந்தக்காரன் யார் என்பதற்கு இப்போது விடை தேடிக்கொண்டிருக்கின்றனர். இது தற்போது தேவையற்ற விடயமாகும். அதனை விடுத்து, சகோதரக் கம்பனி இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்வதற்கு முயற்சிக்கின்றமையானது, கவலைக்குரியதாகும். 15 வருடங்கள் நாட்டிலிருந்து விலகியிருந்த ஒருவர் இதற்குத் தகுதியற்றவராவார்.உயிர்த் தியாகங்களைச் செய்து, பயங்கரவாதத்திடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட இந்நாட்டின் தற்போதைய நிலைமைகளையும், இடம்பெயர்ந்த நிலையில் அல்லல்படுகின்ற அப்பாவித் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கையில் அது மிகவும் கவலையளிக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்ததன் பின்னரும் எனக்கென்று பொறுப்புக்கள் இருக்கின்றன. அதனை செவ்வனே நிறைவேற்றுவேன். மக்களின் வாக்குகளைப் பெற்று, ஜனாதிபதிப் பதவியில் அமர்வது, சுகபோகங்களை அனுபவிப்பதற்காக அல்ல.
30 வருட காலம் நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இந்நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, அதனை மக்களிடம் ஒப்படைப்பதே எனது பணியாகும் என்றும் அவர் கூறினார்
ஜே.வி.பி. கட்சிப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையில் கொழும்பு07, புதிய நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இச் சந்திப்பில் கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா, அனுரகுமார திசாநாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரன், விஜித ஹேரத் உள்ளிட்ட எம்.பி.க்களும் மாகாண சபை, பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்களும் மற்றும் அமைப்பாளர்கள், ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டின் நலனுக்காக சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்ற கட்சியாக நான் ஜே.வி.பி.யை காண்கின்றேன். அந்த வகையில், எனது இராணுவ சேவை இன்னும் ஒன்றரை வருடத்திற்கு நீடித்திருக்கக் கூடியதாக இருந்தாலும், சீருடையைக் கழற்றி வைத்து விட்டு மக்களுக்குச் சேவை செய்ய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தமைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எந்தவொரு இராணுவத் தளபதியும் தான் ஓய்வுபெற்றதன் பின்னர் அவருக்கு வழங்கப்படுகின்ற உடைமைகளை அரசாங்கம் இலஞ்மாகவே கருதுகின்றது. எனக்கு அமைச்சின் செயலாளர் பதவியும், அமைச்சுப் பதவிகளும் தேடிவந்தன. ஆனாலும், அவற்றை நான் ஏற்கவில்லை.
பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதன் பின்னரும் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று எண்ணியபோதிலும், அது நடைபெறவில்லை. ஆனால், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்கள் மீது சுமத்தப்படுகின்ற சுமைகள் ஆகியவை மாத்திரம் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலைமைகளை மாற்றியமைப்பதற்கும், நல்லாட்சி ஒன்றை மலரச்செய்வதற்கும், அதேபோல் அரச சேவை, பொலிஸ் சேவை உள்ளிட்ட மக்கள் சேவைகளில் உண்மையான ஜனநாயகம் கட்டியெழுப்பப்படுவதற்கும், ஊழல் மோசடிகள் மற்றும் இலஞ்சம் ஆகியவற்றை இல்லாது செய்வதற்கும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
எனது இந்தப் பயணத்தில் இணைந்துள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவு எனக்கு இருக்கின்றது. அதன்படி, நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னரே ஜனாதிபதி என்ற உத்தியோகபூர்வ பதவி அதிகாரம் இருக்கவேண்டும். மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, வெறுமனே சுகபோகங்களை மாத்திரம் அனுபவித்துக் கொண்டு, மக்கள் சேவைகளிலிருந்து விலகியிருப்பதை நான் விரும்பவில்லை. எனக்கென்று இருக்கின்ற பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. வில்லியம் கோபல்லாவைப் போல் இருப்பதற்கு என்னால் முடியாது.
மக்களுக்குப் பதிலளிக்கக் கூடிய பாராளுமன்றத்தை நிறுவி, அதனூடாக நல்லாட்சியை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும். இன்று குடும்ப அதிகாரம் மேலோங்கியுள்ளது. ஜனாதிபதி சர்வாதிகாரியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். 30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நாடு மீட்டெடுக்கப்பட்டது குடும்ப அதிகாரத்திடம் கையளிப்பதற்காக அல்ல. இந்நாட்டில் பொருளாதார அபிவிருத்தி, தேசிய பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனைச் செய்தே தீருவேன்.
எனக்கென்று ஒரு கனவு இருக்கின்றது. அதனை நனவாக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கின்றது. எமது எதிர்காலச் சந்ததியினருக்கு சிறந்ததொரு வளம் நிறைந்த நாட்டை அமைத்துக் கொடுக்கவேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்கின்ற நல்லாட்சி ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்தக் கனவாகும்.
அரசாங்கமும், அதன் நிர்வாகிகளும் எனக்கு எதிராக எத்தகைய எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், சட்டத்தை மதிக்கின்ற 95 வீதமானவர்கள் எம்முடன் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாது, பொது மக்களும் எமது பயணத்தில் இணைந்துள்ளனர். எனவே, உரிமைகளைப் பெற்று சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதற்கான எமது இந்தப் பயணத்தில் அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் கட்சிகளும், அதன் உறுப்பினர்களும் எனக்கு ஆதரவு வழங்கும் முகமாக எம்முடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.























