Friday, November 30, 2007

கொழும்பில் நேற்று இரவு முதல் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 257 பேர் கைது

[வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2007] கொழும்பையண்டி பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 257 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். நுகேகொடை, பிலியந்தலை, கொஹுவளை மற்றும் கல்கிசை ஆகிய பகுதிகளிலேயே இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுகேகொடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 179 தமிழர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர். தமது அடையாளத்தை உறுதிப்படுத்த தறியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என :நுகேகொடை பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் 22 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். கொஹுவளை மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 21 பேரும், கல்கிசையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 35 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களை அனைவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த பிரிவுக்கு பொறுப்பான பொலிஸார் தெரிவித்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.