Friday, January 21, 2011

மகிந்தவை அமெரிக்கா அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்து லண்டன் அமெரிக்க தூதரகம் முன்பாக போராட்டம்

மகிந்தவை அமெரிக்கா அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்து, பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க துதரகம் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று சனிக்கிழமை(22.01.2011) நடக்கவிருக்கிறது.

தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களால் இப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. மதியம் 12.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இப் போராட்டம் நடைபெறவுள்ளதால், அனைத்து தமிழர்களும் இதில் கலந்துகொண்டு இளையோர்களின் கரங்களை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தற்போது அமெரிக்க சென்றுள்ள மகிந்தவை அந் நாட்டு அதிபர் ஓபாமாவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையின் போர்குற்றங்களை மறைக்கும் நோக்கில், மகிந்த இதனைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில் மகிந்தவோடு ஓபாமா எப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடக்கூடாது எனவும், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையும் கண்டித்தும், அத்தோடு போர் குற்றவாளியான மகிந்தரை அமெரிக்கா வரவேற்க்கக்கூடாது என்னும் கோரிக்கைகளை முன்வைத்தும் இப் போராடம் நடைபெறவுள்ளதாக இளையோர்கள் தெரிவித்துள்ளனர்.

இடம்: 24 Grosvenor Square
London,
W1A 1AE
காலம் 22.01.2011


நேரம்: மதியம் 12.00 மணி முதல் 4 மணிவரை


போராட்டம் நடைபெறும் இடம் மற்றும் வாகன ஒழுங்குகளின் விபரங்களிற்கு: 07405691677

வரை படங்களும் இணைக்கப்பட்டுள்ளது:

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.