தனக்கு நெருக்கமான சோதிடர்களின் ஆலோசனைப்படி இன்று அதிகாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடுதிப்பென அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி மாளிகைத் தகவல்களை ஆதாரம்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டே அவர் அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளதுடன், லிபியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் அவரது மூத்த புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவையும் அங்கிருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு வரவழைக்கத் திட்டமிட்டுள்ளாராம். மஹிந்தராஐபக்சவின் ஜாதகப்படி தற்போதைய கிரக நிலவரம் சரியில்லாத காரணத்தால் அவர் சில நாட்கள் வெளிநாட்டில் தங்கியிருப்பது உசிதம் என்று அவருக்கு நெருக்கமான சோதிடர்கள் வழங்கிய ஆலோசனையின் பிரகாரமே ஜனாதிபதியின் அமெரிக்க பயணம் திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டதாக ஜனாதிபதி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் இன்னும் இருபது பேருமாக இன்று அதிகாலை மிகவும் இரகசியமான முறையில் பயணத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் எதிர்வரும் பத்து நாட்களுக்கு அமெரிக்காவில் தங்கியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.