கொல்கத்தாவில் இடம் பெற்ற ஐ.பி.எல் தொடரின் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மும்பை அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.
மும்பை அணி சார்பில் அணித்தலைவர் சச்சின், போலார்டு, ஜாகிர் கான், ஹர்பஜன், அபிஷேக் ஆகியோர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. பிராவோ தலைமையிலான மும்பை அணியில் சதீஷ், ஸ்டூவர்ட் பின்னி, முர்டாசா, சிகர் தவான் இடம் பெற்றனர்.
கொல்கத்தா அணியில் காயம் காரணமாக கெய்ல், சுக்லா நீக்கப்பட்டு, சஹா, டேவிட் ஹசி இடம் பெற்றனர்.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித்தலைவர் பிராவோ முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
மும்பை அணி சார்பில் ஆதித்யா தாரே, சிகர் தவான் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர் இதில் தாரோ01, தவான்11,டுமினி 19 , திவாரியும் 46 , பிவோரா 05, சதீஷ் 11 ,பின்னி 08 , ராயுடு 27 ,ஓட்டங்களையும் பெற்றனர். 20 ஓவர் முடிவில் முபை அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களை எடுத்தது.
134 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியில் கங்குலி 42, ஹசி 20 , மெக்கலம் 57 , உதிரிகளாக 16 ஓட்டங்கள் பெறப்பட்டது. 17.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருதை முரளி கார்த்திக் தட்டிச் சென்றார்.
நேற்றைய வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி, 14 புள்ளிகள் பெற்ற போதும் (7 வெற்றி) மோசமான புள்ளிவீதத்தின் அடிப்படையில் (-0.341) அரையிறுதி போட்டியில் இருந்து வெளியேறியது.
ஐ.பி.எல் வரலாற்றில் கொல்கத்தா மும்பை அணிகள் இதுவரை 6 முறை எதிர்கொண்டுள்ளன. இதில் ஐந்து முறை, மும்பை அணி வென்று இருந்தது. நேற்றைய போட்டியில், மும்பைக்கு எதிராக கோல்கட்டா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
நேற்று மும்பைக்கு எதிராக, 42 ஓட்டங்களை எடுத்த கங்குலி (1031) ஐ.பி.எல் அரங்கில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த 10ஆவது வீரராவார். இதில் ரெய்னா (1316), கில்கிறிஸ்ட் (1201), ரோகிட் சர்மா (1168) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.