Sunday, December 02, 2007

மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் தாக்குதல் நடத்தவந்த படையினர் மீது தாக்குதல்.

[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] மணலாறு மாவட்டம் மண்கிண்டிப் பகுதியில் புலிகளின் காவலரண் அருகே கிளைமோர்த் தாக்குதல் நடத்த வந்தி சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு முகம் கொடுக்கமுடியாத படையினர் கொண்டு வந்த ஆயததளபாடங்களைக் கைவிட்டு தங்கள் நிலைகளுக்கு தப்பி ஓடி விட்டனர். கைவிடப்பட்ட ஆயுதங்களின் விபரம். கிளைமோர் -04, மகசீன் - 03, வெடிப்பி � 04, வயர் றோல் - 01, சிற்பாக் - 01, தண்ணீர்கான் - 02, லிங் - 01 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை மணலாறு கொக்குத் தொடுவாய்ப்பகுதியில் நேற்று விடுதலைப்புலிகளின் காவலரண்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற படையினரை விடுதலைப்புலிகள் விரட்டியுள்ளனர். இச்சம்பவம் நேற்று பகல் 12.10மணியளவில் இடம்பெற்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.