Sunday, December 02, 2007

கொழும்பில் இருவர் கடத்தல்- பிரித்தானிய குடியுரிமை பெற்ற நால்வர் கைது

[ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2007] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருவர் காணாமல் போய் உள்ளனர். பிரித்தானியா குடியுரிமை பெற்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட, நீர்கொழும்பு வீதியைச் சேர்ந்த எம்.கே.மொகமட் நசீர் (வயது 25), நீர்கொழும்பு பிரதான வீதியைச் சேர்ந்த சுப்ரமணியம் மயூரன் (வயது 26) ஆகிய இருவரும் காணாமல் போய் உள்ளனர். இது குறித்து பேலியகொட, நீர்கொழும்பு சிறிலங்கா காவல் நிலையங்களிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாக்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த எம்.கே.மொகமட் நசீர் கடந்த 27 ஆம் நாள் இரவு 7:30 மணிக்குப் பின்னரும், சபரிமலை பஜனை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அதே நாள் மயூரன் இரவு 9:00 மணிக்குப் பிறகு காணாமல் போய் உள்ளனர். இதனிடையே பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஏ.பிரதீசன், என். விநோகரன், எஸ்.மோகன்குமார், ரி.மயூரன் ஆகிய நால்வரையும் கொட்டுக்கொட, ஜா-எல, நவசிரிபுரவில் ஜா-எல சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.