Monday, November 19, 2007

வடமராட்சியில் குடிசன மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ளும் இராணுவம்.!

[திங்கட்கிழமை, 19 நவம்பர் 2007] யாழ்ப்பாணத்தில் குடிசன மதிப்பீட்டுப் பணிகளை சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிமுனையில் மேற்கொண்டு வருகின்றனர். அரச அலுவலர்களைக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யாழ். நாடாளுமனற உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட மற்றும் பலருடைய வேண்டுதலின் பெயரில் முன்னர் இப்பணிகள் இடைநிறுத்தப்பட்டு இருந்தது. இராணுவத்தால் தற்போது இந்த குடிசன மதிப்பீட்டு பணிகளானது கிராம அலுவலர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனிடையே சிறிலங்கா இராணுவ வாகன அணிகள் பயணம் செய்வதற்காக பொதுமக்கள் பயணம் செய்யும் வாகனங்களை பல மணி நேரம் தடுத்து வைப்பதால் பொதுமக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தொண்டமனாற்றுப் பகுதியில் இருந்து வரும் வாகன அணிக்காக பல மணிநேரம் பொதுமக்களுடைய வாகனங்கள் வல்லை வெளியில் மறிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.