Tuesday, November 27, 2007

புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது மிலேச்சத்தனமான வான்தாக்குதல் - 9 பேர் படுகொலை - 10 பேர் படுகாயம்.!!

[செவ்வாய்க்கிழமை, 27 நவம்பர் 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம் ஆகியவற்றின் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணிக்கு மிலேச்சத்தனமான வான்குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி நகரிலிருந்து 3.5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஏ-9 வீதியில் புலிகளின் குரல் வானொலி நிலையம் அமைந்துள்ளது.
தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையைக் கேட்பதற்காக பெருந்திரளான பொதுமக்கள் அங்கு இன்று மாலை குழுமியிருந்தனர். அப்போது வானொலி நிலையத்தின் மீது சிறிலங்கா வான்படையின் 2 கிபீர் வானூர்திகள் 12 குண்டுகளை அகோரமாக வீசியுள்ளன.

இத்தாக்குதலில் புலிகளின் குரல் நிலையப் பணியாளர்கள் 3 பேர் மற்றும் 6 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 4 புலிகளின் குரல் நிறுவனப் பணியாளர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வானொலி நிலைய அறிவிப்பாளர் இசைவிழி செம்பியன், வானொலி நிலையப் பொறியியல் பிரிவைச் சேர்ந்த கி.தர்மலிங்கம், சுரேஸ்லிம்பியோன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கா.சாந்தபோதினி, அன்பரசி ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு வானொலி நிலையப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட மற்றும் படுகாயமடைந்த பொதுமக்கள் விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.