Monday, November 26, 2007

அனுராதபுரத்தில் 4 பொதுமக்களின் சடலங்கள் மீட்பு

[திங்கட்கிழமை, 26 நவம்பர் 2007] அனுரதாபுரம் மகாவிலாச்சிய என்ற கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் நான்கு பொதுமக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வில்பத்து வனவிலங்கு சரணாலயப் பகுதியை அண்மித்துள்ள இப்பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 8:45 மணியளவில் இவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக மகாவிலாச்சிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வில்பத்து காட்டுப்பகுதி ஊடாக நுழைந்த விடுதலைப் புலிகளே இவர்களை சுட்டுக்கொலை செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இச்சடலங்கள் இரு இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தை அடுத்து இராணுவத்தினரும், காவல்துறையினரும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.