Sunday, August 27, 2006

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் குடாநாட்டை விட்டு வெளியேற்றம்! யாழ்.குடாநாட்டை அசாதாரண சூழல் ஒன்று சூழ்ந்திருக்கையில் மக்கள் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இங்கு பணியாற்றி வந்த சர்வதேச மற்றும் தேசிய அரச சார்பற்ற நிறுவனங்கள் பல தமது பணிகளை இடைநிறுத்திக்கொண்டு வெளி யேற ஆரம்பித்துள்ளன. இந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயற்படுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்காததன் காரணத்தா லேயே அவை வெளியேறுகின்றன என்று தெரி விக்கப்பட்டது. ஆறு அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் நேற்றுப் புறப்பட்ட செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுக் கப்பலில் புறப்பட்டுச் சென்று விட்டனர் என்று யாழ்.செயலக வட்டாரங் கள் உறுதிப்படுத்தின. நோர்வேஜிய அகதி கள் சபை (என்.ஆர்.சி), கரித்தாஸ், வேல்ட் விஷன், பார்க், டனிஷ் கண்ணி அகற்றும் நிறுவனம் ஆகிய சர்வதேச அமைப்புக்களும் சேவா லங்கா என்ற தேசிய அரச சார்பற்ற நிறுவனமுமே இவ்வாறு வெளியேறியுள் ளன. இந்த நிறுவனங்களில் சில தமது அலு வலகப் பொருள்களை இராணுவத்தினரின் யாழ்.சிவில் நிர்வாக அலுவலகத்தில் ஒப் படைத்துள்ளன. அவற்றின் பிரதிநிதிகள் அனைவரும் குடாநாட்டைவிட்டு வெளியேறி யுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பணியாற்ற பாதுகாப்பு அமைச்சு தமக்கு அனுமதி வழங் காமையும் நிவாரணப் பொருள்கள் உட்பட உதவிப் பொருள்களைக் கொழும்பில் இருந்து யாழ்ப் பாணத்திற்கு அனுப்புவதற்கு அனுமதி மறுக் கப்பட்டுள்ளமையுமே தாம் வெளியேறுவதற்கான காரணம் என்று அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒரு வர் தெரிவித்தார். எனினும் மீண்டும் இயல்பு நிலை ஒன்று ஏற்படும் பட்சத்தில் தாம் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஐ.நா. அமைப்புக்கள் மற்றும் செஞ் சிலு வைச் சர்வதேசக்குழு ஆகியவை தொடர்ந் தும் யாழ். குடாநாட்டில் பணியாற்றும். இதற்கிடையே, யாழ். குடாநாட்டில் பணியாற்றும் ஏனைய அரசசார்பற்ற நிறு வனங்கள் பலவும் தற்போது தமது பணி களைத் தொடர்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றன என்று தெரிவிக்கப்படு கின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.