Wednesday, April 03, 2013

வடகொரியாவிடம் இருந்து தென்கொரியாவை காப்போம்: அமெரிக்கா அதிரடி

வடகொரியா மற்றும் தென் கொரியாவுக்கும் இடையே கடந்த 63 ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது. இதற்கிடையே அணு ஆயுத சோதனை மற்றும் ஆயுத குவிப்பு நடவடிக்கையில் அமெரிக்கா ஆதரவுடன் வடகொரியா மீது ஐ.நா. சபை பொருளாதார தடை விதித்தது. இதற்கு தென் கொரியாவும் ஆதரவு தெரிவித்தது.


இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரியா தென் கொரியாவையும், பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் தாக்கப்போவதாக அறிவித்தது. அதற்கான பிரகடனத்தில் வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன் கையெழுத்திட்டார். இதையடுத்து வடகொரியா எல்லையில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது ரேடார் கண்ணுக்கு சிக்காத 2 அமெரிக்க போர் விமானங்கள் அணு குண்டுகளை வீசி வடகொரியாவுக்கு மிரட்டல் எச்சரிக்கை விடுத்தன.


அதை தொடர்ந்து கோபத்தின் உச்சிக்கு சென்ற வடகொரியா ராணுவம் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை தாக்கும் வகையில் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்தது. ராணுவ வீரர்களின் உணர்ச்சிமிகு அணிவகுப்பையும் நடத்தியது. இதனால் கொரிய தீப கற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவும், தென் கொரியாவும் தொடர்ந்து போர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் தென் கொரியாவுக்கு வந்துள்ளன.


மேலும், அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஜான் எஸ்.மெக்கைன் என்ற நாசகார போர்க்கப்பல் வடகொரியா கடற்பகுதிக்கு விரைந்துள்ளது. இது மேலும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா அணு ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கடந்த 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்ட புளூடோனியம் அணு உலையை அணு ஆயுத பரவல் தடை விவாதத்தின் காரணமாக 2007-ல் வடகொரியா மூடியது.


தற்போது போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருப்பதால் அந்த மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தையும் வடகொரியா மீண்டும் திறந்துள்ளது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியை தென் கொரியா வெளியுறவு மந்திரி யங் பியாங்-சியும் வாஷிங்டனில் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, வட கொரியாவின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.


அதே நேரத்தில் அந்த நாட்டின் மிரட்டலை சந்திக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக ஜான் கெர்ரி தெரிவித்தார். அத்துடன் தனது நட்பு நாடான தென் கொரியாவுக்கும் பாதுகாப்பாக இருந்து காப்போம் என்றும் உறுதி அளித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.