Wednesday, April 03, 2013

கிளிநொச்சியில் உதயன், சுடர் ஒளி பத்திரிகை அலுவலகங்களை சிங்களக் குண்டர்கள் தாக்கியதற்கு வைகோ கண்டனம்



சிங்கள இனவாத அரசு செய்த தமிழ் இனப் படுகொலைகளை ஜெனீவாவில்  அம்பலப்படுத்தியதற்காக, கிளிநொச்சியில் உள்ள உதயன், சுடர் ஒளி பத்திரிகை அலுவலகங்களை சிங்களக் குண்டர்கள் தாக்கி உள்ளனர். இதில் இரண்டு பத்திரிகை ஊழியர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். அங்கு இருந்த சிங்கள இராணுவத்தின் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்து உள்ளது.
அப்பத்திரிகையாளர்களின் உயிருக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஹிட்லரின் நாஜிகள் நடத்திய கொலைவெறித் தாண்டவத்தை, ராஜபக்சேவின் கூட்டம், தமிழ் ஈழத்தில் தொடர்ந்து நடத்தி வருவதன் கோர முகத்தை உலக நாடுகளும், ஐ.நா. மன்றமும் உணர்ந்து, சிங்கள இராணுவத்தையும், சிங்களர்களையும் ஈழத் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, ஈழத் தமிழர்களை தொடரும் இனக்கொலை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.