Monday, March 25, 2013

2002ல் இருந்தே இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டிருந்தார் கருணா – விக்கி லீக்ஸ் தகவல் !!



482002ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட்ட தருணத்தில், இந்த ஒப்பந்தம் மூலமாக நாம் ஒரு தீர்வைப் பெற்றுவிட முடியாது என்று தேசிய தலைவர் கூறியுள்ளார்.

முதலில் கருணா யார் என்பதனை அறிமுகப்படுத்தி விட்டு பின்னர் கிழக்கில் உள்ள போராளிகளுக்காக அவர் வீடியோ ஒன்றைப் பதிவுசெய்துள்ளார். அதில் அவர் மேற்குறிப்பிட்ட விடையங்களை தெளிவாக விளக்கியுள்ளார். நாம் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலமாக , தமிழீழத்தை அடைந்து விட்டோம் என நீங்கள் நினைக்கவேண்டாம்
என்று அவர் கூறியுள்ளார். நாம் இன்னும் பயணிக்கவேண்டிய தூரம் நிறையவே உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இலங்கை அரசு அமெரிக்காவை திசை திருப்ப, அந்த வீடியோவை எடுத்து அமெரிக்க தூதரகத்திடம் கொடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு சமாதானத்தில் நம்பிக்கை இலை என்றும், அவர்கள் தலைவரே இதனை எதிர்த்துப் பேசியுள்ளார் என்றும் இலங்கை அரசு அமெரிக்க தூதுவருக்கு தெரிவித்துள்ளது. மிகவும் இரகசியமாக பேணப்பட்ட இந்த வீடியோ 2002ம் ஆண்டே அரசாங்கத்தின் கைகளுக்கு எப்படி கிடைத்தது என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.