Monday, April 01, 2013

என் ஈழநண்பர்களே உங்களுக்கு எங்களை மன்னிக்க கோரி ஒரு கடிதம் !!!


கவலை வேண்டாம்
இனி விடியலை நோக்கி நம் பயணம் !!!
நங்கள் போர்களத்தை கண்டதில்லையே;
உங்கள் நிலையை ஊடகங்களும் எங்களுக்கு கூறவில்லையே;
எங்களுக்கும் உங்களுக்கும் அந்த சமயம் தொடர்பும் இல்லையே;
எங்கள் மானம் விற்ற அரசியல்வாதிகளும் எங்களுக்கு சொல்லவிலையே;
உங்கள் அன்றைய நிலையை :(
“முடியலயே முடியலயே ! எங்களால் உங்களை காக்க முடியலயே!
முடியலயே முடியலயே ! எங்களால் நம் மானம் காக்க முடியலயே!”
அப்போது எங்களை கொன்றபோது அமைதி காத்தவர்களே !!
இன்று என்னடா அக்கறை என்று நீங்கள் கேட்பது சரி தான்!
இப்போது போராடும் மாணவர்கள் அப்போது குழந்தைகள் என்பதை மறக்க வேண்டாம்;
இப்போது போராட்டத்திற்கு கை கொடுப்பவர் அபோது கொடுக்கவில்லை மறக்க வேண்டாம்;
இப்போது உள்ள சமுக வலைத்தளங்கள் அபோது இல்லை மறக்க வேண்டாம்;
இப்பொது உள்ள அளவிருக்கு விழிப்புணர்வு அபோது இல்லை மறக்க வேண்டாம்;
இனி நீங்கள் எதற்கும் இனி கொதிக்க வேண்டாம்:
இனி எதுவாயினும் !!! நங்கள்போராட்டத்தை நிறுத்த போவதில்லை !
இனி எம்மக்களுக்கும் தமிழுக்கும் உயிர் தரவும் தயார் !
அதாவது உயிர் என்பது இங்கு விழிப்புணர்வு !
செத்த போனமாய் நடமாடும் சுயநல வாதிகளுக்கு… விழிப்புணர்வு என்னும் உயிர் கொடுத்து போராடுவோம்…
வென்றெடுப்போம் தமிழ் ஈழம் !!!
இப்படிக்கு,
என்றும்,
தோழமையுடன்.தன்மானம் சக்ரவர்த்தி.மு.ம

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.