Tuesday, September 25, 2012

பதவிக்காக உயிர்வாழ மாட்டேன்; உயிர் இருக்கும் வரையிலும் லட்சியத்துக்காகவே போராடுவேன்! - வைகோ

பிறரைப் போன்று பதவிக்காக உயிர் வாழ மாட்டேன்; உயிர் இருக்கும் வரையிலும் லட்சியத்துக்காகவே போராடுவேன் என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ சேலத்தில் கூறினார்.
 
சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜா (26), இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 17-ம் தேதி தீக்குளித்தார். பலத்த தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் 18-ம் தேதி இறந்தார்.

ராஜபட்சவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக, மத்திய பிரதேச மாநிலம் சென்றிருந்த வைகோ ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பினார். அவர் விஜயராஜாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, சேலம் நெத்திமேடுக்கு திங்கள்கிழமை மாலை வந்தார்.

திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உள்ளிட்டோருடன் விஜயராஜாவின் வீட்டுக்குச் சென்ற வைகோ, சுமார் ஒரு மணி நேரம் அவரது பெற்றோர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.பின்னர், நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அவர் பேசியது:

சமூக நீதிக்காக பாடுபட்ட பெரியாரின் பிறந்த நாளில், ஈழத் தமிழர்களின் நீதிக்காக தீக்குளித்து உயிரிழந்த விஜயராஜாவுக்கு அவரது பிறந்த நாளன்றே இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது. விஜயராஜா உயிரிழந்த தகவல் கிடைத்ததும் சாஞ்சியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மதிமுக தொண்டர்கள் சார்பில் அஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது.

நான் பிறரைப் போன்று பதவிக்காக வாழவில்லை. தமிழீழ விடுதலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக போராடுவேனே தவிர பதவிக்காக எப்போதும் உயிர் வாழ மாட்டேன் என்றார் வைகோ.

முன்னதாக, விஜயராஜா எழுச்சி இயக்கத்தின் பெயர்ப் பலகையை வைகோ திறந்துவைத்தார். பின்னர் விஜயராஜாவின் பெற்றோர், சகோதர, சகோதரிகளுக்காக மதிமுக சார்பில் ரூ.2.25 லட்சம் நிதியுதவியை வைகோ வழங்கினார்.மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, சேலம் மாவட்டச் செயலர் தாமரைக் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.