Wednesday, September 26, 2012

அடேல் பாலசிங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடுல் பாலசிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அடேல் பாலசிங்கம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
 
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்ட அடுல் பாலசிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரிட்டனிடம், அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

6000த்திற்கும் மேற்பட்ட பெண்களை பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பலவந்தமாக இணைத்துக் கொண்டதாக அடெல் பாலசிங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அடெல் பாலசிங்கம் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். தற்கொலைத் தாக்குதலுக்கு ஆதரவாக அடெல் ஆற்றிய உரை தொடர்பான காணொளியையும் இலங்கை அரசாங்கம் மீட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.