Friday, March 16, 2012

கொடுத்த மனித பலி காணாது என்று தனது உடல் நலனுக்காக மீண்டும் மனித பலி எடுக்க துடிக்கும் மஹிந்த

மகிந்த ராஜபக்‌ஷவிற்கு இருக்கும் கண்டத்திற்கு பிராய்ச்சித்தம் செய்வதற்காகவும், ஏற்பட்ட நோய்யை சுகப்படுத்துவதற்கும் ‘மனித பலி” கொடுக்க தயாராகி வருவதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த பலி பூஜை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மேற்பார்வையில் தயாராகி வருகிறது. அத்துடன், இந்தப் பூஜைக்குத் தேவையான மிகவும் அரிய வகை எண்ணெய்யை எடுத்துவருவதற்கு அமைச்சர் மேர்வின் சில்வா நேற்றிரவு (15) மியன்மார் பயணமானார்.

இந்த பலி பூஜைக்கு மூன்று வயது பிள்ளையொன்று தேவையென இந்திய பூசாரியொருவர் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்குக் கூறியுள்ளார்.

இந்த பலி பூஜை குறித்து எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, மகிந்த ராஜபக்‌ஷ இந்த பலி பூஜைக்கு இதுவரை அனுமதியளிக்கவில்லை. எனினும், இதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களை மியன்மாரில் இருந்து எடுத்து வருமாறு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு மகிந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.இந்த பலி பூஜையின் அவசியம் குறித்து சிறீலங்கா ஜனாதிபதியின் சிரேஷ்ட சோதிடர் சந்திரசிறி பண்டாரவே மகிந்தவிற்கு விளக்கமளித்துள்ளார்.

சிறீலங்கா ஜனாதிபதிக்கு மிகப்பெரிய கண்டம் இருப்பதாக பயமுறுத்தி மகிந்தவை ருவன்வெலி மகா விகாரையில் அங்கப்பிரதர்சனம் செய்ய வைத்ததும் சோதிடர் சந்திரசிறி பண்டார என்பது மேலதிக தகவலாகும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.