Friday, March 16, 2012

சர்வதேச தலையீட்டை மேற்கொள்ளுமாறு மனித உரிமை பேரவையிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்தாராம்-சம்பந்தன் மீதும் தாக்குதலை தொடுக்கிறது திவயின

இலங்கையில் அண்மைக் காலங்களில் 30 பேர் கடத்திச் செல்லப்பட்டதாகவும் இதில் 10 பேரின் சடலங்களில் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருந்தாகவும் தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த 12 ஆம் திகதி மதியம் 15 பக்களை கொண்ட மகஜர் ஒன்றை ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு அனுப்பியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

சம்பந்தனின் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானது என சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதோபோல், இந்த தகவல்களை அனுப்பியுள்ள சம்பந்தன், இலங்கை தொடர்பில் சர்வதேச தலையீட்டை மேற்கொள்ளுமாறு மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கொழும்பில் உள்ள தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் தமிழ் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும் சம்பந்தன் தனது மகஜரில் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல்கள் குறித்து உடனடியான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் மகஜரில் அவர் கேட்டுள்ளதாக திவயின கூறியுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.