Tuesday, March 06, 2012

ஈ.பி.டி.பியின் ஆடும் வாலை ஒட்ட நறுக்குவோம் – றோயல் கல்லூரி பிரதி அதிபர் எச்சரிக்கை!

யாழ். தீவகத்தில் அராஜகம் தொடர்ந்தால் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவாக செயற்படும் ஈ.பி.டி.பியின் வாலை ஒட்டநறுக்குவோம் என கொழும்பு றோயல் கல்லூரி பிரதி அதிபர் எம்.கணபதிப்பிள்ளை எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் நடைபெற்ற புங்குடுதீவு வாழ்வும் வளமும் என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கணபதிப்பிள்ளை இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

சுற்றுலா அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு யாழ். தீவகத்தின் பாரம்பரிய கலாசாரத்திற்கும் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால் மக்கள் கொதித்தெழுவார்கள். புரட்சி வெடிக்கும்.

அரசாங்க ஆதரவு பெற்ற சில உள்ளுர் அரசியல்வாதியும், அவரின் குழுவை சேர்ந்தவர்களும், கலாசார சீரழிவுகளிலும், பாலியல்பலாத்காரம், படுகொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல சம்பவங்கள் மறைக்கப்பட்ட போதிலும் அண்மையில் நெடுந்தீவில் பாடசாலை மாணவிக்கு ஏற்பட்ட அவலம் இறுதியாக இருக்க வேண்டும். இல்லையேல் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள் என்றும் கணபதிப்பிள்ளை எச்சரிக்கை விடுத்தார்.

நான் கொழும்பில் இருந்தாலும் தீவுப்பகுதியில் என்ன நடக்கிறது என்பதை தினமும் அறிந்து வருகிறேன். இந்த இழிவான செயலை ஈ.பி.டி.பி உடனடியாக கைவிட வேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த தீவுப்பகுதி மக்களும் இணைந்து தக்க பதில் தருவார்கள்.

அப்பாவி மக்களை படுகொலை செய்து கொண்டு ஜனநாயகம் பேசிக்கொண்டிருக்கும் உங்களின் வாலை மக்கள் ஒட்ட நறுக்குவார்கள் என்றும் கொழும்பு றோயல் கல்லூரி பிரதிஅதிபர் கணபதிப்பிள்ளை எச்சரிக்கை விடுத்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.