Wednesday, March 14, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு நோர்வே ஆதரவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு நோர்வே ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் சகல குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இலங்கை பதிலளிக்க வேண்டுமென நோர்வே தெரிவித்துள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.

எகிப்து, சவூதி அரேபியா மற்றும் பஹ்ரெய்ன் போன்ற நாடுகளின் மனித உரிமை நிலைமை குறித்தும் நோர்வே அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக நோர்வே அறிவித்துள்ளமை துரதிஸ்டவசமானது என சிறீலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சமாதான முனைப்புக்களில் மத்தியஸ்தம் வகித்த நாடு என்ற ரீதியில் நோர்வே வாக்களிக்காமல் இருப்பதே பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.