Saturday, March 03, 2012

வீரம்செறிந்தநடைபயண வீரர்களுக்கு வாழ்த்துக்கள்-சி.மகேந்திரன் கம்யுனிஸ் கட்சி மாநிலச்செயலாளர்

தமிழ்மக்களுக்கு நீதிவேண்டி ஜெனீவா மனிதஉரிமைகள் கூட்டத்தொடர்நடக்கம் இடத்திற்கு நடைபயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு இந்திய கம்யுனிஸ் கட்சியின் மாநில செயலலாளர் சி.மகேந்திரன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ்மக்களின் விடுதலைக்கான ஒருபோரட்டம் அரசியல் விடுதலைக்கான போராட்டம் என்பது தமிழகம் மட்டும்மன்றி உலகம்முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்கள் மத்தியில் ஒருஎழுச்சியாக இன்று வெடித்து எழுந்துள்ளது தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலபோராட்டங்களை நடத்துகின்றார்கள்.

அதேபோல் புலம்பெயர்நாட்டில் வாழக்கூடிய ஈழத்துஇளைஞர்கள் மூன்றுபேர் கால்நடையாக கொட்டும் பனியினைபற்றிகூட கவலைப்படாமல் உடலே உறைந்துபோகும் அளவிற்கு பனிபொழிந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் பெல்ஜியத்தின் நாடாளமன்றத்தில் இருந்து புறப்பட்டு தற்போது ஜெனீவா மனிதஉரிமைகள் கூட்டத்தொடரினை நோக்கி அவர்களின் நடைபயணம் காணப்படுகின்றது.

 இந்தஇளைஞர்களின் வீரம் செறிந்த அந்த நடைபயணத்தினை இந்தியகம்யூனிஸ்கட்சி சார்பில் நான் பாராட்டுகின்றேன்.தமிழகத்திலும் இந்தபோராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்ற விதமாக கையெழுத்து இயக்கம் போன் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.