Wednesday, February 15, 2012

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடி பணிந்து குத்துக்கரணம் அடித்த இராணுவம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டம் அடுத்த மாதம் இடம்பெற உள்ள நிலையில் படையினருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முதல் தடவையாக இணங்கி உள்ளது இலங்கை இராணுவம்.

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியால் இலங்கையின் கொலைக்களம் என்கிற வீடியோவில் முன்வைக்கப்பட்டு இருக்கின்ற குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட நீதி விசாரணையாளர்கள் குழு ஒன்றை இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய நியமித்து உள்ளார்.

ஜெனிவா கூட்டத்தில் இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரும் என்கிற எச்சரிக்கை அமெரிக்காவிடம் இருந்து வந்திருக்கின்ற நிலையில் இராணுவம் இப்படி ஒரு குத்துக்கரணத்தை அடித்து இருக்கின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.