சிங்கப்பூரில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஆர்க்கிட் மலரொன்றுக்கு மஹிந்த – ஷிராந்தி என பெயரிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று சிங்கப்பூர் சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் குறித்த தாவரவியல் பூங்காவிற்கு விஜயம் செய்தபோதே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சிங்கப்பூருக்கான விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி தானை இன்று புதன்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார். இதேவேளை, சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெசின் லூங்கையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்தார். வியாபார மற்றும முதலீட்டு அபிவிருத்தி தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கையொழுத்திடப்பட்டன.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.