Tuesday, February 07, 2012

கட்டடத் திறப்பில் கட்டியணைத்த தமிழ்க் கட்சிகள்! அதிர்ச்சியில் உறைந்த யாழ்.மக்கள்!!


யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தைக்கான புதிய கட்டடத் தொகுதி நேற்றைய தினம் இரு எதிர் எதிர்த் தமிழ்க் கட்சிகளின் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதாவது வடக்கின் முதலமைச்சர் பதவிக்கு தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட இருக்கும் மாவை சேனாதிராஜாவும் அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் குதுகலமாகத் திறந்து வைத்தனர்.


திருநெல்வேலி சந்தைப் பகுதியில் 80 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களான மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்த கொண்டு திறந்து வைத்தனர்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மாவை சேனாதிராஜாவும் டக்ளஸ் தேவானந்தாவும் மிக நெருக்கமாக சிரித்து கதைத்துக் கொண்டிருந்ததைக் கண்ட பொதுமக்களிற்கு பெரிதும் ஆச்சரியத்தைக் கொடுத்ததாக அதில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
கட்டடத் திறப்பில் காட்டும் அக்கறையையும் ஒற்றுமையையும் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வுத் திட்டத்திலும் காட்டலாமே என்றும் அங்கிருந்த மக்கள் முணுமுணுத்ததைத் காணக் கூடியதாக இருந்தது.





0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.