Friday, February 24, 2012

சுயாதீன விசாரனையை வலியுறுத்தும் நாடுகளில் நோர்வேயும்- எரிக் சொல்ஹெய்ம்

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது இறுதி மாதத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரும் நாடுகளுடன் நோர்வேயும் இணைந்து கொண்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்புக் கூறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக நோர்வேயும் அறிவித்துள்ளது.

நேர்வேயின் அமைச்சரும், இலங்கைக்கான சமாதான முயற்சிகளில் ஈடுபட்டவருமான எரிக் சொல்ஹெய்ம், நோர்வேயில் இருந்து வெளியாகும் Aftenposten நாளிதழுக்கு இத்தகவலை குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை அரசு போரை வென்றுவிட்டது, ஆனால் இப்போது அமைதியை வெல்ல வேண்டிய தேவை அதற்கு உள்ளது“ என்றும் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.