Friday, February 24, 2012

டோஹோவிலிருந்து 30 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

 டோஹோவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் 30 பேர் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கனடாவிற்கு சட்டவிரோதமாக குடியேற கடத்தல்காரர்களுக்கு இவர்கள் பணம் கொடுத்துள்ளனர்.

கடத்தல்காரர்களால் டோஹோ வரை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கைவிடப்பட்டதாக நாடு திரும்பியோர் தெரிவித்துள்ளனர்.

டோஹோவிலிருந்து மேலும் 70 இலங்கையர்கள் விரைவில் நாடு கடத்தப்பட்டவுள்ளதாக தெரியவருகின்றது.       

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.