Wednesday, February 08, 2012

இன்னொரு பிரபாகரன் ஆகின்றமைக்கு ஆசைப்பட்ட கருணா!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனுக்கு சமமானவராக நடத்தப்பட வேண்டும் என்கிற ஆசையால்தான் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணா இயக்கத்தில் இருந்து உடைந்தார் என்று அமெரிக்காவுக்கு சொல்லி இருக்கின்றார் மட்டக்களப்பு மறை மாவட்ட ரோமன் கத்தோலிக்க ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை.

புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா உடைந்தமை குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவருக்கு சொந்த அபிப்பிராயத்தை சொன்னபோது ஆயர் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றார்.

சுய நல ஆசையினாலேயே கருணா இயக்கத்தில் இருந்து உடைந்து உள்ளார், மாறாக கிழக்கு மாகாண தமிழர்கள் மீது அக்கறை கொண்டு இயக்கத்தில் இருந்து உடையவில்லை. பிரபாகரனுக்கு வழங்கப்படுகின்ற சம அந்தஸ்து அவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிற ஆசையில் இயக்கத்தை விட்டு உடைந்து உள்ளார் என ஆயர் கூறி இருக்கின்றார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள்  கிடைத்து உள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.