Wednesday, February 08, 2012

‘புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை சிதறடியுங்கள்’ – மகிந்த கட்டளை!

புலம்பெயர் தேசங்களில் இயங்கிவரும் தமிழ்த் தேசிய அமைப்புக்களை உடைப்பதற்கு தேவையான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கே.பி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச கட்டளை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் சிறீலங்கா கார்டியன் எனப்படும் சிங்கள இணைய ஊடகம், வண.பிதா இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் அவ்வமைப்புக்குள் ஊடுருவல்களை மேற்கொள்ளுமாறு டக்ளஸ் தேவானந்தாவிற்கு ராஜபக்ச கட்டளையிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இவ் ஊடுருவல்களில் ஈடுபடும் உளவாளிகளுக்கு தேவையான பயண ஒழுங்குகளை கோத்தபாய ராஜபக்ச செய்து தருவார் என்றும், டக்ளஸிடம் ராஜபக்ச தெரிவித்திருப்பதாக சிறீலங்கா கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, உருத்திரகுமாரனின் தலைமையில் இயங்கும் நாடுகடந்த அரசாங்கத்தை சிறீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க வழிப்படுத்தும் வேலைகளில் அதனை நிறுவிய கே.பி ஈடுபட்டு வருவதாகவும் சிறீலங்கா கார்டியன் இணையம் தெரிவித்துள்ளது.

உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த அரசாங்கத்தை கே.பியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒஸ்லோவில் உள்ள சர்வே, பரிசில் உள்ள மனோ ஆகிய இரு நபர்கள் வழிநடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.