இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை தூக்கிப்பிடிக்கும் சர்வதேச
சக்திகளுடன் இணைந்து தனி ஈழத்தைப் பெற்றுக்கொள்வதற்கு புலம்பெயர் தமிழர்கள்
முயற்சிக்கின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று கர்ஜித்தார்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ. மேற்கத்தேய சக்திகளின்
பிரிவினைவாத நோக்கத்தை முறியடிப்பதற்கு ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாகச்
செயற்படுவதற்கு சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானித்துள்ளன எனவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மலர்ந்துள்ள சமாதானத்தைப் பிடுங்கி எடுப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை, உலகில் முறியடிக்க முடியாது என வர்ணிக்கப்பட்ட புலிகள் அமைப்பையே தோற்கடித்துக் காட்டிகாட்டியவர்கள் நாங்கள். புலிகள் வீழ்ச்சியுற்றபின்னர் வடக்கில் தனியான ஆட்சி அலகொன்றை அமைப்பதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன. மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து, வடக்கு, கிழக்கு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிசமைத்துக் கொடுத்த இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பது மீண்டும் பிரிவினைவாத, தீவிரவாதத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியாகும் எனவும் அவர் மேலும் புலம்பியுள்ளார்.
இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், ஐ.நாவில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர இருப்பதாக பரவலாகச் செய்திகள் வெளியாகியுள்ளபோதிலும், அமெரிக்காவானது நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைசெய்த திட்டங்களை அமுல்படுத்தவே இத் தீர்மாணத்தைக் கொண்டுவருகிறது. அதாவது இலங்கை அரச அதிபரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா தீர்மாணம் கொண்டுவர உள்ளதே தவிர வேறு எதற்காகவும் அல்ல. ஆனால் இலங்கை அரசோ இதனை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. இது நிறைவேறும் பட்சத்தில், நல்லிணக்க ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்ட அம்சங்களை வைத்தே பின்னர் தலைவலி ஆரம்பிக்கும் என்று இலங்கை அரசு கருதுகிறது.
இதற்குமேலாக அமெரிக்கா இவ்வாறானதொரு பிரேரணையைச் சமர்ப்பித்து வெற்றிகண்டால், பிற்காலத்திலும் இதுபோல இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் முன்வைக்க இது ஏதுவாக அமையும் எனவும் இலங்கை அச்சம் கொண்டுள்ளது. இருப்பினும் இப் பிரேரணை தொடர்பாக மிதமிஞ்சிய கருத்துக்களும், செய்திகளும் தமிழ் ஊடகங்களால் பிரசுரிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
அதிர்வு இணையம்.
நாட்டில் மலர்ந்துள்ள சமாதானத்தைப் பிடுங்கி எடுப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை, உலகில் முறியடிக்க முடியாது என வர்ணிக்கப்பட்ட புலிகள் அமைப்பையே தோற்கடித்துக் காட்டிகாட்டியவர்கள் நாங்கள். புலிகள் வீழ்ச்சியுற்றபின்னர் வடக்கில் தனியான ஆட்சி அலகொன்றை அமைப்பதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன. மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து, வடக்கு, கிழக்கு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிசமைத்துக் கொடுத்த இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பது மீண்டும் பிரிவினைவாத, தீவிரவாதத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியாகும் எனவும் அவர் மேலும் புலம்பியுள்ளார்.
இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், ஐ.நாவில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர இருப்பதாக பரவலாகச் செய்திகள் வெளியாகியுள்ளபோதிலும், அமெரிக்காவானது நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைசெய்த திட்டங்களை அமுல்படுத்தவே இத் தீர்மாணத்தைக் கொண்டுவருகிறது. அதாவது இலங்கை அரச அதிபரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா தீர்மாணம் கொண்டுவர உள்ளதே தவிர வேறு எதற்காகவும் அல்ல. ஆனால் இலங்கை அரசோ இதனை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கிறது. இது நிறைவேறும் பட்சத்தில், நல்லிணக்க ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்ட அம்சங்களை வைத்தே பின்னர் தலைவலி ஆரம்பிக்கும் என்று இலங்கை அரசு கருதுகிறது.
இதற்குமேலாக அமெரிக்கா இவ்வாறானதொரு பிரேரணையைச் சமர்ப்பித்து வெற்றிகண்டால், பிற்காலத்திலும் இதுபோல இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் முன்வைக்க இது ஏதுவாக அமையும் எனவும் இலங்கை அச்சம் கொண்டுள்ளது. இருப்பினும் இப் பிரேரணை தொடர்பாக மிதமிஞ்சிய கருத்துக்களும், செய்திகளும் தமிழ் ஊடகங்களால் பிரசுரிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
அதிர்வு இணையம்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.