Tuesday, January 17, 2012

வறுமையால் இளம் தம்பதி தற்கொலை! முள்ளியவளையில் சம்பவம்!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கணுக்கேணி, குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்களான கணவனும் மனைவியும் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்ட பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு வேளையில் இவ்விருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

29 வயதுடைய சண்முகன் நிறஞ்சன் மற்றும் அவருடைய மனைவியான நிறஞ்சன் சங்கீதா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குடும்ப வறுமை நிலை காரணமாக இவர்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.