Tuesday, January 10, 2012

ஆபிரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் எங்களுக்கு தேவையில்லை!! - அரசு

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் ஆபிரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை இணைத்துக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஆபிரிக்க தமிழ் காங்கிரஸிடம் கோரியுள்ளனர்.

இதேவேளை, இலங்கைத் தமிழர்களுக்கு சுயநிர்ணய ஆட்சி வழங்கப்பட வேண்டுமெனவும் அதற்கு ஆபிரிக்க நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் வணக்கத்திற்குரிய இமெனுவல் அடிகளார் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை அமைப்பு கோரியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகளில் இருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டவர்கள் என்றும் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.