Tuesday, January 03, 2012

கிருஷ்ணா மட்டுமல்ல பராக் ஒபாமா வந்தாலும் அதிகாரப்பகிர்விற்கு இடமில்லை: கிருஷ்ணா வருகை கண்டு கலக்கமடையும் இனவாதி குணதாஸ அமரசேகர!

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மட்டுமல்ல அமெரிக்காவினது ஜனாதிபதி பராக் ஒபாமா இங்கு வந்தாலும் அதிகாரப்பகிர்வு என்ற பெச்சுக்கே இடமில்லை என்றுகூறியுள்ளார் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார். அத்துடன், 13 ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இல்லாதொழிக்க விரைவில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அரசிற்குள் 60 வீதமானோர் சூழச்சிக்காரர்களே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் விசேட செய்தியாளர் மாநாடு இன்று இடம்பெற்ற போதே கலாநிதி குணதாஸ அமரசேகர மேற்கண்டவாறு கூறினார். அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்தில் பாரிய சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் உள்வீட்டுச் சதியாகும். அரசியல் தீர்விற்கு அதிகாரப் பகிர்வை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

அரசியலமைப்பில் இருந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும். நாட்டில் இனவாதம் உள்ளது என்பது போலியான மாயையாகும். எனவே தேவையற்ற விடயங்களை பேசுவதில் பயனில்லை.

இன்று நாட்டை பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல சக்திகள் செயற்படுகின்றன. 13 ஆவது திருத்தச் சட்டத்தை மையப்படுத்தி சர்வேதச நாடுகள் அழுத்தங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளன என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.