Wednesday, December 14, 2011

நோர்வேயில் நடைபெற்ற தேசத்தின் குரலின் வணக்க நிகழ்வு

நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவுநாள் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அன்னைபூபதி றொம்மன் வளாகத்தில் இன்று (14-12-2011) நினைவுகூரப்பட்டது.

பிற்பகல் 7 மணியளவில் சுடர் வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மண்டபம் நிறைந்த மக்கள் தமது இதய அஞ்சலியை மலர் தூவி நிறைவேற்றினர். அகவணக்கத்துடன் தொடர்ந்த நிகழ்வில், எம்மை மாறா சோகத்தில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொள்ளும் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் விபரணம் ஒன்று ஒளிவடிவில் காண்பிக்கப்பட்டது.

எமது விடுதலைக்காக தன் சொகுசு வாழ்வை அர்ப்பணித்து, கொடிய நோய்க்கு ஆளானபோதும் மக்களின் சுதந்திர வாழ்விற்காய் தலைவரின் வழிநின்று வாழ்ந்த அந்த அற்புத மனிதரின் வாழ்க்கை வரலாறானது, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழவைத்தது.


இளவயது மங்கையரின் மனதை ஊடுருவிச்சென்ற கவிவரிகளோடு மதியுரைஞரின் நினைவுப்பாடல்களும் பாடப்பட்டது.

தேசத்தின் குரலென்றும், மதியுரைஞர் என்றும், தத்துவாசிரியர் என்றும் ஈழத்தமிழர்களால் அன்போடு அடைமொழிகளால் அழைக்கப்பட்ட கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆயுதமேந்தாத போராளியாகவே வாழ்ந்து இன்று காவியமானார்.

இருப்பினும் எமது இறுதி இலக்கை அடையும் வரை புலத்தில் உள்ளவர்களும் ஆயுதமேந்தாத போராளிகளாக வாழ்ந்து தொடர்ந்து தமது தேசப்பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்ற கருத்தே இன்றைய நிகழ்வில் ஓங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மிக உணர்வுபூர்வமாக நடந்தேறிய தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவுநாள் பிற்பகல் 8.30 மணியளவில் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற கொட்டொலியுடன் நிறைவிற்கு வந்தது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.