Thursday, April 28, 2011

சிறீலங்கா இராணுவத்தால் கேணல் ரமேஸ் கோரமாகப் படுகொலை – புதிய ஆதாரம்

ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரின் ஏற்பாட்டில் சிறீலங்கா இராணுவத்தின் 58 ஆவது படையணியிடம் சரணடடைந்த விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதி கேணல் ரமேஸ் சிறீலங்கா இராணுவத்தால் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நெற் இணையத்தளம் புதிய ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.

ரமேஸ் இடம் சிறீலங்கா இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொள்ளும் காணொளிகள் வெளியாகிய நிலையில் தற்போது அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



கடந்த 2009 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் சிறீலங்கா இராணுவத்தினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா (18.08.1964) என ரமேசின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

காணொளியில் சாதாரண உடையில் இருந்த ரமேசிடம் இரணுவ உடைகளை அணுயுமாறு பலவந்தப்படுத்திய சிறீலங்கா படையினர் அதன் பின்னர் அவரை படுகொலை செய்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ரமேஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறப்புத் தளபதியாக பணியாற்றியிருந்தார். அவர் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார்.

ரமேசிடம் விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா படையினரின் அடையாளங்கள் காணொளியில் தெளிவாக காணப்படுகின்றன.

இதனிடையே, விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளாராக கடமையாற்றிய ரமேஸ் என அழைக்கப்படும் இளங்கோவும் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் நடேசனுடன் சரணடைந்திருந்தார். ஆனால் அவரின் நிலை என்ன என தெரியவில்லை.

இளங்கோ சரணடைந்ததை சிறீலங்காவின் அதிகாரி பாலிதா கோகன்னா உறுதிப்படுத்தியிருந்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.