Saturday, April 30, 2011

விடுதலைப்புலிகளின் மற்றுமொரு மூத்த உறுப்பினரும் சிறீலங்கா இராணுவத்தால் படுகொலை – மேலும் ஒரு போர்க்குற்ற ஆதாரம்

வன்னியில் இடம்பெற்ற போரில் சிறீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரை சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கமைவாக கொடூரமாக படுகொலை செய்துள்ளனர்.

கேணல் ரமேஸ் இன் படுகொலை தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது விடுதலைப்புலிகளின் பொருளியல் ஆலோசனை நிலையத்தின் பணிப்பாளர் திரு சிவலிங்கம் சுகுணன் (திலக்) என்பவரையும் சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.


அரச சார்பற்ற நிறுவனமாக சிறீலங்காவில் பதிவுசெய்யப்பட்டிருந்த இந்த நிறுவனத்தில் பணியாற்றிய திலக் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருமலைமாவட்ட அரசியல் பிரிவுத் தலைவருமாவார். பொருளியல் ஆலோசனை அமைப்பில் பணியாற்றிய உறுப்பினர் ஒருவரே திலக்கின் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளார். சடலத்தின் புகைப்படம் சிறீலங்கா இராணுவத்தினரால் எடுக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் காலை 6.15 மணியளவில் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட திலக், தான் சாராதரண உடையில் சிறீலங்கா இராணுவத்தினரிடம் சரணடையவுள்ளதாக தெரிவித்திருந்தார். சரணடைந்த அவரை சிறீலங்கா இராணுவத்தினர் கோரமாக அடித்துப்படுகொலை செய்துள்ளனர்.
சிறீலங்கா இராணுவத்தின் தடுப்பு முகாமில் இருந்து தப்பிய திலக்கின் முன்னாள் உதவியாளர் ஒருவர் முகாமில் தடுத்துவைக்கப்;பட்டிருந்த முக்கிய நபர்கள் மற்றும் சிறீலங்கா இராணுவத்தினரின் இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிக தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காலம்சென்ற பேராசிரியர் துரைராஜாவின் ஆலோசனையின் அடிப்படையில் தான் பொருளியல் ஆலோசனை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. கேயர், போரம் போன்ற அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய இந்த நிறுவனம் வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்தியில் பெரும் பங்கு வகித்திருந்தது.


அதன் பணிப்பாளராக கடமையாற்றிய சுகுணன் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.



நன்றி: தமிழ்நெற்.

தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ்.

நன்றி ஈழம் ஈ நியூஷ்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.