Saturday, April 30, 2011

சிறிலங்கா அரசாங்கம் மிருகத்தனமாக பொதுமக்களை இலக்குவைத்து தாக்கியுள்ளது. பொய்க்குமேல் பொய் கூறி நீண்டகாலம் தப்பிக்க முடியாது:

பொய்க்கு மேல் பொய்களைக்கூறிக்கொண்டு நீண்டகாலம் தப்பிக்க முடியாது. வேண்டுமானால் மஹிந்த தனது குறுகிய அரசியல் இலாபத்திற்காக சிங்கள மக்களை அணி திரட்டி மேற்குலகத்திற்கு எதிராக போராடலாம். ஆனால் அது நீண்டகாலத்திற்கு எடுபடாது. இவ்வாறு எகொனொமிஸ்ட் கூறியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தொடர்பில் மூன்று வழிகள் உள்ளன. ஒன்று விசாரணை ஒன்றினை ஏற்றுக்கொள்வது. இரண்டாவது நல்லிணக்க தீர்வு ஒன்றினை ஏற்படுத்திக்கொடுப்பது.

மூன்றாவது மிகப்பெரிய பொய்களைகூறி ஒன்றுமே நடக்காதது போல் எதிர்த்து நிற்பது. சிறிலங்கா அரசாங்கமானது மூன்றாவதனையே பற்றிப்பிடித்துள்ளது. போரில் பூச்சிய இழப்பு என்பது மிகப்பெரிய பொய் அதனை வைத்து நீண்டகாலம் பிளைக்க முடியாது. போரில் என்ன நடந்தது என்பதற்கு இலட்சக்கணக்கான பொதுமக்களே சாட்சி. அவர்கள் உள்ளூர் விசாரணைக்குழு முன் தோன்றி தங்கள் கண்ணீர் கதைகளை கூறியுள்ளார்கள்.

இதனைவிட என்ன ஆதாரம் தேவை. சிங்கள அரசாங்கம் மிருகத்தனமாக பொதுமக்களை இலக்குவைத்து தாக்கியுள்ளது. பொதுமக்களைக்கொன்று உள்ளது. பாதுகாப்பு வலையத்தில் மக்கள் எண்ணிக்கையினை குறைத்து பொய் கூறியது. இதெல்லாம் கண்முன் சாட்சி. ஆகவே இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் பொய்களைகூறி தப்பித்துவிடலாம் என நினைப்பது குறுங்கால அரசியல் நோக்கம். இவ்வாறு கூறியுள்ளது எகொனொமிஸ்ட்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.