Saturday, April 30, 2011

முள்ளிவாய்கால் முற்றுகையில் இருந்து தமிழீழத் தேசியத் தரைலவரை பத்திரமாக வெளியேற்றிவிட்டோம். தளபதி கஜன் மே௧6 2009

2006ம் ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட 4ம் கட்ட ஈழப் போர் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது. இறுதி காலமான மே மாதத்தில் மூர்க்கமாக நடாத்தப்பட்ட தாக்குதலால் தமிழினம் பெரும் அழிவைச் சந்தித்து இன்னும் அந்த துயரத்தில் இருந்து விடுபட முடியாது தவியாய்த் தவித்து விருகின்றது யாவரும் அறிந்ததே.

அதில் உச்சமாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை கொன்று வெற்றி பெற்றுவிட்டோம் என்று பொம்மை உடலைக் காட்டி சிங்களம் கூத்தாடியது. இதனை சில துரோகிகளும் எதிரிகளும் வழிமொழிந்து தமது அற்ப சந்தோசத்தினை வெளிப்படுத்தி வருகின்ற போதும் பெரும்பாலான தமிழர்கள் இதனை நம்ப மறுத்து வருகின்றனர்.

ஆத்மார்த்தமாக பலரும் நம்பினாலும் இதுவரை உத்தியோக பூர்வமாகவோ அல்லது உறுதிப்பாடாகவோ எவ்வித தகவல்களும் கிடைக்காது இனம்புரியாத வருத்தத்தில் ஆழ்த்திவந்தது. இதனைப் போக்கும் வகையில் தளபதி கஜனின் மனைவி வழங்கியுள்ள செவ்வியில் முள்ளிவாய்க்கால் முற்றுகையில் இருந்து எமது தேசத்தின் சொத்து மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வெளியேறிய செய்தியைச் சொல்லியுள்ளார்.

கடந்த சில நாட்களிற்கு முன்னர் வெளிவந்த சிறிலங்காவின் போர்க்குற்றங்களை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் அடையாளங் காணப்பட்டு வருகின்றது. அவ்வாறு வெளியான தளபதி கஜனது படத்தை உறுதிப்படுத்தி தகவல் வழங்கியுள்ள அவரது மனைவி இறுதிக்கட்டத்தில் களத்தில் என்ன நடந்தது என்பதனை சொந்த அனுபவத்தின் மூலம் உறுதிப்படக் சூறியுள்ளார்.

அதில் மே௧6ம் திகதி தொடர்புகொண்டு கதைத்த விடயங்களை பகிர்ந்து கொள்ளும் போதே எமது தேசத்தின் சொத்து தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முள்ளிவாய்கால் முற்றுகையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட தகவலை வழங்கியுள்ளார்.

அண்ணையை நேற்று வெளியேற்றிவிட்டம். நாங்கள் நந்திக் கடல் வழியாக உடைச்சுக் கொண்டு போகப்போறம். நீங்கள் வெளியேறிப் போங்கள் நான் வேறபக்கத்தாலை வந்து சந்திக்கிறன் என்று மே௧6ம் திகதி காலையில் தொலைபேசியூடாக தளபதி கஜன் அவர்கள் தெரிவித்ததாக அவரது மானைவி கூறியுள்ளார்.

இந்த தகவலுக்கிடையில் தேசியத் தலைவரது புதல்வி சகோதரி துவாரகா கரும்புலியாகி முல்லைத்தீவுப் பகுதியில் வெடித்து வீரகாவியமானதாக ஒரு தகவலையும் சொல்லி அதிரவைத்துள்ளார்.

அப்பா(தலைவர் பிரபாகரன்) என்னை வெளியேறி வரவேண்டாம் என்று சொல்லிவிட்டுத்தான் போனவர் என்று சொன்ன சகோதரி துவாரகா கரும்புலியாக வெடிக்கும் முடிவை எடுத்து விரச்சாவடைந்து விட்டதாக தளபதி கஜன் அவர்கள் தெரிவித்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தலைவரது மகன் சார்ள்ஸ் அன்ரனி வீரச்சாவடைந்து விட்டதாக வெளிவரும் தகவல் தொடர்பாக கேட்டபோது தான் அது குறித்து உறுதியான தகவல் எதுவும் தெரியாது என்றும் வெளியேறி வந்த பின்னர்தான் மற்றவர்கள் சொல்லித்தான் தெரியும் என கூறியுள்ளார்.

உலகத் தமிழர்களே உங்கள் சிற்றறிவை விழிப்படையச் செய்து சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்று பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது வாழ்க்கைத்துணையினை கைப்பிடித்துள்ளார். அதனை நேற்று உலகம் முழுவதும் 200 கோடி பேர் பார்த்துள்ளனர். இதனைவிட கருணாநிதியின் வாரிசுகள் கோடீஷ்வரர்களாக தமிழகத்தையே குத்தகைக்கு எடுத்து ஏப்பம்விடக் காத்திருக்கின்றனர்.

இவை இப்படி இருக்க எமது தலைவன் தனது புதல்வர்களை களத்தில் நிறுத்திவிட்டு அதுவும் வெளியேறி வரக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவையும் வழங்கி தமிழினத்திற்கு நிரந்தர விடிவைத் தேடித் தரவேண்டி வெளியேறியுள்ளார் என்பதனை சிந்தித்துப் பாருங்கள்.

பின் குறிப்பு:

தளபதி கஜன் அவர்களின் மனைவி அவர்கள் சமீபத்தில் வழங்கிய செவ்வியை அடிப்படையாக கொண்டே இந்த செய்தி கட்டுரையை நாம் வெளியிடுகிறோம்,அத்தோடு தளபதி கஜன் அவர்களின் மனைவி வழங்கிய செவ்வியின் பின் புலம் தொடர்பாக தெளிவான தகவல்கள் இன்னும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழதேசம் ஆசிரியர் குழு.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.