விடுதலைப்புலிகளின் முன்னாள் வெளிநாட்டு பொறுப்பாளர் கேபி.தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் வெளிட்ட கருத்து தொடர்பில், பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அதிருப்தி கொண்டதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை அடையாளம் காணவும், விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தொடர்புகளை அறிந்துக் கொள்ளவுமே கே.பியை அரசாங்கம் பயன்படுத்துவதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார். அத்துடன் கேபியை பயன்படுத்தி, வெளிநாட்டு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையை தோற்றுவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த 3ம் திகதி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது, இறுதி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை மீட்க முயற்சித்த கேபி. தற்போது அரசாங்கத்துக்கு ஆதரவாக உள்ளளமை குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த கருத்துக்கள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் அதிருப்தி அடைந்ததுடன், விமல் வீரவன்சவை எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.