அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் வைத்து மேலும் அகதிகளை ஏற்றி வந்த இரண்டு படகுகள் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டுள்ளளதாக அவுதிஸ்திரேலிய உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இப் படகுகளில் ஒரு படகில் 54 அகதிகளும், மற்றப் படகில் 28 அகதிகளும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விரு படகுகளிலும் இலங்கை அல்லது ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அகதிகளே பயணித்திருக்கலாம் என அவுஸ்திரேலியா அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
முற்றுகையிடப்பட்டுள்ள இரு படகுகளிலும் பயணித்த அகதிகள் கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை சுமார் 750 அகதிகள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் ஊடுருவ முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவுகளிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து தஞ்சம் கோரும் அகதிகளின் விண்ணப்பங்களை ஏற்பதை கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவுஸ்திரேலியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.