Sunday, June 06, 2010

வன்னிப் போரை இலங்கை அரசு மட்டும் நடத்தவில்லை – அருந்ததிராய்!

இலங்கை யுத்தம் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய யுத்தம் மட்டுமல்ல பெரும் வணிக நிறுவனங்கள் நடத்திய யுத்தமாகும் என பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் சென்னையில் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசால் பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனப்ப்படுகொலை என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் அருந்ததி ராய் உரையாற்றுகையிலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.
இந்திய பெரு நிறுவனங்கள் இலங்கை நோக்கி மேலதிக பணம் திரட்டுவதற்காகப் படையெடுக்கின்றன.

தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் மட்டும் தான் இந்த யுத்ததை நிறுதியிருக்க முடியும் ஆனால் அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்.

இதே தான் இன்று மத்திய இந்தியாவிலும் நடைபெறுகிறது. பழங்குடி மக்கள் பெரும் வணிக நிறுவனங்களால் சூறையாடப்படுகின்றனர்.

மக்களின் போராட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல ஆனால் ஜனநாயகம் இயங்கும் பொறிமுறைக்கு எதிரான பொராட்டம்.

காந்திய வாதியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியும் ஆனால் உண்பதற்கு உணவே இல்லாமல் எப்படி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியும் என அவர் கேள்வியெழுப்பினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.