இலங்கையில் 50,000 ற்கும் அதிகமான சீன இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் திரகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய துறைமுக அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வருகை தந்துள்ளவர்கள் என்ற போர்வையில் இலங்கையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீன பிரஜைகள் சுமார் ஒரு இலட்சத்து பத்தாயிரம் பேர் இலங்கையில் உள்ளதாகவும் இவர்களில் பலர் இராணுவத்தினர் என்றும் கொழும்பு ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சீனா மேற்கொண்டு வரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களிலும் சீன நாட்டு பிரஜைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சீன பிரஜைகள் மூலமே தமது திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்ற நிபந்தனை அடிப்படையிலேயே சீனா இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றது.
இலங்கையில் சீனர்களின் அதிகரித்த எண்ணிக்கையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக இந்திய பாதுகாப்பு விவகார ஆய்வாளர் ஹரிகரன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 50,000 ற்கும் அதிகமான சீன இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்கள் திரகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய துறைமுக அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வருகை தந்துள்ளவர்கள் என்ற போர்வையில் இலங்கையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீன பிரஜைகள் சுமார் ஒரு இலட்சத்து பத்தாயிரம் பேர் இலங்கையில் உள்ளதாகவும் இவர்களில் பலர் இராணுவத்தினர் என்றும் கொழும்பு ஊடகம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சீனா மேற்கொண்டு வரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களிலும் சீன நாட்டு பிரஜைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சீன பிரஜைகள் மூலமே தமது திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்ற நிபந்தனை அடிப்படையிலேயே சீனா இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றது.இலங்கையில் சீனர்களின் அதிகரித்த எண்ணிக்கையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக இந்திய பாதுகாப்பு விவகார ஆய்வாளர் ஹரிகரன் குறிப்பிட்டுள்ளார்.






