Tuesday, May 25, 2010

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 198 பேர் விடுதலை!

கொழும்பில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 198 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் புனவாழ்வுக்கான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு கொழும்பில் புனர்வாழ்வு அளித்துவந்த முகாம் இன்றுடன் மூடப்படுவதாக இருந்த போதிலும், அங்கு தங்கியிருந்த 52 பேர் தங்களது கல்வியைத் தொடரும் வரை அரசாங்கம் அவர்களைப் பொறுப்பேற்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இவர்களின் மூவர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'புனர்வாழ்வு முகாமில் எனக்கு நண்பர்கள் பலர் கிடைத்தார்கள். நான் நிறைய விடயங்களை இங்கு கற்றுக் கொண்டேன். எனக்கு முகாமை விட்டுச் செல்வது ஒரு வகையில் கவலையாக இருக்கின்ற போதிலும் எனது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைவது மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது' என மூன்று வருட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 17 வயதான லுக்சியா தெரிவித்துள்ளார்.

'நான் சட்டத்தரணியாக வரவேண்டும் என்ற கனவை புனர்வாழ்வு முகாம் நனவாக்கியுள்ளது. நான் எனது கல்வியைக் கவனமாகத் தொடர்வேன்' என 16 வயதான கிறிஸ்டி என்ற மாணவி குறிப்பிட்டுள்ளதாக ஏ.எப்.பி., செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.