இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவாணை டெல்வின் தோட்டப்பிரிவில் கைக்குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பிந்திய செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்வின் தோட்டப்பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களுள் 2 பெண்கள், 2 சிறுவர்கள், 6 இளைஞர்கள் உள்ளனர். இதேவேளை காயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுல் 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இக் கைக்குண்டு தாக்குதல் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றிருக்கிறது என பொலிஸார் தெரிவித்தனர், இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் இறக்குவாணை பொலிஸார் தெரிவித்தனர்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.